Wednesday, July 18, 2007

தபூசங்கரின் 'தேவதைகளின் தேவதை'


இந்த 'தேவதைகளின் தேவதை' ஆனந்தவிகடனில் வந்த
கவிதைகளின் தொகுப்பு...
அவற்றில் சிலவற்றை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு தாய் தன் குழந்தைக்குச்
சோறூட்டுகையில்
நிலவைக் காட்டுவது மாதிரி
காதல் உன்னை எனக்குக் காட்டியது

எதற்காக நீ
கஷ்டப்பட்டுக் கோலம்
போடுகிறாய்?
பேசாமல்
வாசலிலேயே
சிறிது நேரம்
உட்கார்ந்திரு
போதும்!

நீ எப்போதும்
தலையைக் குனிந்தே
வெட்கப்படுவதால்
உன் மதிப்புமிக்க
வெட்கத்தை எல்லாம்
இந்தப் பூமி மட்டுமே
தரிசிக்க முடிகிறது!
ஒரேயொரு முறை
கொஞ்சம் உன் தலையை நிமிர்த்தி
வெட்கப்படேன்!
வெகுநாட்களாய்
உன் வெட்கத்தைத் தரிசிக்கத்
துடிக்கிறது வானம்!

முனிவர்கள்
கடவுளைப் பார்ப்பதற்காகத்
தவம் இருக்கிறார்கள்.
நானோ,
ஒரு தேவதையைப்

பார்த்து விட்டுத்
தவமிருக்கிறேன்.

கர்ப்பக் கிரகம்
தன்னைத் தானே
அபிஷேகம் செய்து கொள்ளுமா
என்ன?
நீ சொம்பில் நீரெடுத்துத்
தலையில் ஊற்றிக் குளித்ததைப்
பார்த்ததிலிருந்து
இப்படித்தான் கேட்டுக்
கொண்டிருக்கிறேன்
என்னை நானே!

நீ யாருக்கோ செய்த
மெளன அஞ்சலியைப்
பார்த்ததும்...
எனக்கும்செத்துவிடத் தோன்றியது.

நான் உன்னைக்
காதலிக்கிறேன்
என்பதற்காக
நீயும் என்னைக்
காதலித்து விடாதே!
என் கொடிய காதலை
உன் பிஞ்சு இதயத்தால்
தாங்க முடியாது!


அன்புடன்
கருணா

Friday, July 13, 2007

நீ. நான்.. காதல்...


கனவுக்கும் கவிதைக்கும்
இடையில் சற்றே கண் மூடிய சமயத்தில்
கமுக்கமாய் பிறந்த காதலி நீ...

நீ உன் தாயின் வயிற்றில்
கருத்தரிக்கும் முன்னரே
என் காதல் உனக்காக கருவுற்றது...

கவிதை காதல்
காவியம் ஓவியம்
கலை சிற்பம்
இவையனைத்தும் தங்கும் ஓரிடம் நீ...

நீ எனை காணும் நாளெல்லாம்
எனக்கு கவிதை திருநாள்
காண மறக்கும் நாளெல்லாம்
காற்றில்லா வெறும் நான்...

விடுமுறை விரும்பாத
உன் வெட்கத்திடம் வீழ்ந்தது
என் காதல்...

அன்புடன்
கருணா

Thursday, March 15, 2007

ஞாநியின் எழுத்துப்பிழைகள்(1)

"மின்மினி பூச்சிகள்"

அவளைக் காணும் ஆசையில்
பூமிக்கு வந்து உருமாறி திரியும்
நட்சத்திர கூட்டங்கள்!...


"குற்றவாளி"

வனவிலங்குகள் வதைப்பு சட்டத்தின் கீழ்
குற்றவாளியாய் நான் இன்று!
உனக்கு அட்சதையாக்கி தூவ
சின்ன சின்ன பட்டாம்பூச்சிகளை
சேர்ப்பதாய் என் மீது வழக்கு!...

"விழி"

அன்பே என் கண்களை சற்று உற்று நோக்கு!
என் இதயத்தில் குடிகொண்டிருக்கும் நீ
எட்டிப்பார்ப்பது தெரியும்!...


"விடுகதை"

இரண்டு வானவில்
மத்தியில் சிகப்பு நிலா
இவையனைத்தும் ஒரு மூன்றாம் பிறையில்!
விடுகதை அல்ல!
அவளின் நெற்றியை சொன்னேன்!...

"மயிலிறகு"

உன் காதோரம் சுழன்றிருக்கும்
கார்குழலை சற்று இரவல் கொடு!
என் புத்தகத்தில் நான் பதுக்கி வைத்த
மயிலிறகை நேற்று முதல் காணவில்லை!...

"முத்துக்கள்"

அவளின் பல் வரிசைக்காக
பிரம்மன் எடுத்த முயற்சியில்
ஆழியில் வீசியெறியப்பட்ட எஞ்சிய கழிவுகள்!...


இவையனைத்தும் என் நண்பர் ஞாநியின் எழுத்துப்பிழைகள்
(படித்ததும் பிடித்தது)

பிழைகள் தொடரும்....

அன்புடன்
கருணா

Tuesday, March 13, 2007

காதல் கடல்




அன்புடன்
கருணா

Saturday, March 10, 2007

காதல் களம்


ஒவ்வொரு இரவும் என் கண்ணாடி முன்னே
நான் பழகி பார்க்கிறேன்
என் இதயத்தில் இருப்பதை
எப்படி சொல்வதென்று
ஒவ்வொரு காலையும்
மகிழ்ச்சி பொங்கியிருக்கும் என் இதயத்தோடு
போருக்கு என்னை ஆயத்தப்படுத்துகிறேன்...
என் போர்
"என் இனியவளுக்கு எப்படி என் காதலை சொல்வதென்று"
ஆனால் நீ என் முன்னெ வரும் நேரம்
வார்த்தைகள் தொலைந்து போகிறது!...
உன் முகத்தைப் பார்த்து
என் கண்கள் சிலையாகிறது!...
முகத்தை கண்ட பிறகு
எப்படி சொல்லாமல் இருப்பது சொல்...
இதோ சொல்லப்போகிறேன்
"நீதான் என் முழு உலகம்"
உன் புன்னகையில் என்னை மறந்தேன்
அதனால் மீண்டும் தோல்வியே!...
மனதினில் சுகமான, சுமையான ஏக்கங்கள்
சுமையானது
"மீண்டும் என் காதலை சொல்ல தோற்றுவிட்டேன்"
சுகமானது
"உன்போல் அழகான தேவதையிடம் தோற்றதினால்"
என் மனம் உடையவில்லை
வெற்றிபெறும் வரை போர் தொடுப்பேன்
தோல்வியில் வீழ்ந்திடமாட்டேன்
இனியவளே என்னை ஒருமுறை வெற்றிபெறவிடு,
அதன்பின் நீ சொன்னால் அனைத்தையும் விட்டுக்கொடுத்துவிடுவேன்....

"உன்னைத்தவிர"

அன்புடன்
கருணா

ஏற்றமும் இறக்கமும்...

ஏற்றம்.....

கவிதை எழுத பேனா தேவையில்லை
காதலியும் கற்பனையும் போதும்...

இரவும் நிலவும்
கடலும் அலையும்
கல்லும் கலையும்
காதலும் கற்பனையும்
பூக்களும் மென்மையும்
அடுத்தென்ன நீயும்
என் கவிதையும்தான்....

எல்லோரும் சொல்கிறார்கள் தூக்கத்தில்
நான் உளறுகிறேன் என்று அவர்களுக்கு
எப்படி தெரியும் தூக்கதிலும்
நான் உன்னை கவி பாடுகிறேன் என்று.....



......இறக்கம்

அவள் கப்பல்விட்டு விளையாடுகிறாள்
கடலில் இல்லை என் கண்ணீரில்....

என் இதயக்கண்ணாடியில்
உன் பிம்பத்தை பார் என்றேன்
கல்லெறிந்துவிட்டு சென்றாய்.......

நான் இறந்ததற்கு அவள் மெளன அஞ்சலி
செலுத்தினாள் ஆனால் அவளுக்கு தெரியாது
நான் இறந்ததற்கு அவள் மெளனம் தான் காரணம் என்று...

தொடரும்

அன்புடன்
கருணா

Thursday, March 08, 2007

என் கல்லூரியின் சிற்பங்கள்...



உங்களுக்காக புதுவை பொறியியல் கல்லூரியின் புகைப்படங்கள்......
மீண்டும் அழகிய நினைவுகளை திரும்பி பார்க்கிறேன்.
எத்தனை இனிமையான காலம் அது....
நினைத்தாலே மனதில் ஆராவாரம்...

நான்கு வருடங்களை நான்கு நிமிடங்களில் கழித்துவிட்டோம்.....

"காலை கண் விழிப்பதில் தாமதம்,
கொஞ்சம் உணவு,
பேருந்தில் பெண்கள்,
படிக்கட்டில் பயணம்,
அவ்வப்போது வருகைப்பதிவும் வகுப்பறையும்,
பகிர்ந்தே உணவுகள்,
பல காதல் முன்மொழிதல்,
கல்லூரி முடிந்தும் அரட்டைகள்,
மறந்துவிடும் பகைகள்,
எப்போதும் நண்பர்கள் கூட்டம்,
தேர்விற்கு முன் சின்ன சின்ன துண்டு சீட்டுகள்,
அதிக மதிப்பெண் எட்டாக்கனி,
தேர்வில் தோல்வி பெருமிதம்,
விடுமுறைக்கு பின் முதல் நாள்,
வகுப்பறையில் நாமில்லாமல் ஆசான்,
வெள்ளிதோறும் திரையரங்கம்,
கண்ணீருடன் பிரிவு உபச்சாரம்....


கல்லூரி வாழ்க்கை - சொர்க்கம்
இன்னும் தொடரும்
அன்புடன்
கருணா