Thursday, March 15, 2007

ஞாநியின் எழுத்துப்பிழைகள்(1)

"மின்மினி பூச்சிகள்"

அவளைக் காணும் ஆசையில்
பூமிக்கு வந்து உருமாறி திரியும்
நட்சத்திர கூட்டங்கள்!...


"குற்றவாளி"

வனவிலங்குகள் வதைப்பு சட்டத்தின் கீழ்
குற்றவாளியாய் நான் இன்று!
உனக்கு அட்சதையாக்கி தூவ
சின்ன சின்ன பட்டாம்பூச்சிகளை
சேர்ப்பதாய் என் மீது வழக்கு!...

"விழி"

அன்பே என் கண்களை சற்று உற்று நோக்கு!
என் இதயத்தில் குடிகொண்டிருக்கும் நீ
எட்டிப்பார்ப்பது தெரியும்!...


"விடுகதை"

இரண்டு வானவில்
மத்தியில் சிகப்பு நிலா
இவையனைத்தும் ஒரு மூன்றாம் பிறையில்!
விடுகதை அல்ல!
அவளின் நெற்றியை சொன்னேன்!...

"மயிலிறகு"

உன் காதோரம் சுழன்றிருக்கும்
கார்குழலை சற்று இரவல் கொடு!
என் புத்தகத்தில் நான் பதுக்கி வைத்த
மயிலிறகை நேற்று முதல் காணவில்லை!...

"முத்துக்கள்"

அவளின் பல் வரிசைக்காக
பிரம்மன் எடுத்த முயற்சியில்
ஆழியில் வீசியெறியப்பட்ட எஞ்சிய கழிவுகள்!...


இவையனைத்தும் என் நண்பர் ஞாநியின் எழுத்துப்பிழைகள்
(படித்ததும் பிடித்தது)

பிழைகள் தொடரும்....

அன்புடன்
கருணா

3 comments:

அங்கமுத்து கிரிபிரசாத் said...

ஞாநிya thirumba ezhutha sollu....

ச.பிரேம்குமார் said...

உங்க‌ளை எட்டு ஆட்ட‌த்திற்கு அழைத்திருக்கிறேன். இதை சொடுக்கி பார்க்க‌வும்
http://premkumarpec.blogspot.com/2007/06/8-1.html

ச.பிரேம்குமார் said...

karuna, i need to write a mail to you. Can u write to me @ prem.kavithaigal@gmail.com