Saturday, March 10, 2007

காதல் களம்


ஒவ்வொரு இரவும் என் கண்ணாடி முன்னே
நான் பழகி பார்க்கிறேன்
என் இதயத்தில் இருப்பதை
எப்படி சொல்வதென்று
ஒவ்வொரு காலையும்
மகிழ்ச்சி பொங்கியிருக்கும் என் இதயத்தோடு
போருக்கு என்னை ஆயத்தப்படுத்துகிறேன்...
என் போர்
"என் இனியவளுக்கு எப்படி என் காதலை சொல்வதென்று"
ஆனால் நீ என் முன்னெ வரும் நேரம்
வார்த்தைகள் தொலைந்து போகிறது!...
உன் முகத்தைப் பார்த்து
என் கண்கள் சிலையாகிறது!...
முகத்தை கண்ட பிறகு
எப்படி சொல்லாமல் இருப்பது சொல்...
இதோ சொல்லப்போகிறேன்
"நீதான் என் முழு உலகம்"
உன் புன்னகையில் என்னை மறந்தேன்
அதனால் மீண்டும் தோல்வியே!...
மனதினில் சுகமான, சுமையான ஏக்கங்கள்
சுமையானது
"மீண்டும் என் காதலை சொல்ல தோற்றுவிட்டேன்"
சுகமானது
"உன்போல் அழகான தேவதையிடம் தோற்றதினால்"
என் மனம் உடையவில்லை
வெற்றிபெறும் வரை போர் தொடுப்பேன்
தோல்வியில் வீழ்ந்திடமாட்டேன்
இனியவளே என்னை ஒருமுறை வெற்றிபெறவிடு,
அதன்பின் நீ சொன்னால் அனைத்தையும் விட்டுக்கொடுத்துவிடுவேன்....

"உன்னைத்தவிர"

அன்புடன்
கருணா

No comments: