Saturday, March 10, 2007

காதல் களம்


ஒவ்வொரு இரவும் என் கண்ணாடி முன்னே
நான் பழகி பார்க்கிறேன்
என் இதயத்தில் இருப்பதை
எப்படி சொல்வதென்று
ஒவ்வொரு காலையும்
மகிழ்ச்சி பொங்கியிருக்கும் என் இதயத்தோடு
போருக்கு என்னை ஆயத்தப்படுத்துகிறேன்...
என் போர்
"என் இனியவளுக்கு எப்படி என் காதலை சொல்வதென்று"
ஆனால் நீ என் முன்னெ வரும் நேரம்
வார்த்தைகள் தொலைந்து போகிறது!...
உன் முகத்தைப் பார்த்து
என் கண்கள் சிலையாகிறது!...
முகத்தை கண்ட பிறகு
எப்படி சொல்லாமல் இருப்பது சொல்...
இதோ சொல்லப்போகிறேன்
"நீதான் என் முழு உலகம்"
உன் புன்னகையில் என்னை மறந்தேன்
அதனால் மீண்டும் தோல்வியே!...
மனதினில் சுகமான, சுமையான ஏக்கங்கள்
சுமையானது
"மீண்டும் என் காதலை சொல்ல தோற்றுவிட்டேன்"
சுகமானது
"உன்போல் அழகான தேவதையிடம் தோற்றதினால்"
என் மனம் உடையவில்லை
வெற்றிபெறும் வரை போர் தொடுப்பேன்
தோல்வியில் வீழ்ந்திடமாட்டேன்
இனியவளே என்னை ஒருமுறை வெற்றிபெறவிடு,
அதன்பின் நீ சொன்னால் அனைத்தையும் விட்டுக்கொடுத்துவிடுவேன்....

"உன்னைத்தவிர"

அன்புடன்
கருணா

ஏற்றமும் இறக்கமும்...

ஏற்றம்.....

கவிதை எழுத பேனா தேவையில்லை
காதலியும் கற்பனையும் போதும்...

இரவும் நிலவும்
கடலும் அலையும்
கல்லும் கலையும்
காதலும் கற்பனையும்
பூக்களும் மென்மையும்
அடுத்தென்ன நீயும்
என் கவிதையும்தான்....

எல்லோரும் சொல்கிறார்கள் தூக்கத்தில்
நான் உளறுகிறேன் என்று அவர்களுக்கு
எப்படி தெரியும் தூக்கதிலும்
நான் உன்னை கவி பாடுகிறேன் என்று.....



......இறக்கம்

அவள் கப்பல்விட்டு விளையாடுகிறாள்
கடலில் இல்லை என் கண்ணீரில்....

என் இதயக்கண்ணாடியில்
உன் பிம்பத்தை பார் என்றேன்
கல்லெறிந்துவிட்டு சென்றாய்.......

நான் இறந்ததற்கு அவள் மெளன அஞ்சலி
செலுத்தினாள் ஆனால் அவளுக்கு தெரியாது
நான் இறந்ததற்கு அவள் மெளனம் தான் காரணம் என்று...

தொடரும்

அன்புடன்
கருணா

Thursday, March 08, 2007

என் கல்லூரியின் சிற்பங்கள்...



உங்களுக்காக புதுவை பொறியியல் கல்லூரியின் புகைப்படங்கள்......
மீண்டும் அழகிய நினைவுகளை திரும்பி பார்க்கிறேன்.
எத்தனை இனிமையான காலம் அது....
நினைத்தாலே மனதில் ஆராவாரம்...

நான்கு வருடங்களை நான்கு நிமிடங்களில் கழித்துவிட்டோம்.....

"காலை கண் விழிப்பதில் தாமதம்,
கொஞ்சம் உணவு,
பேருந்தில் பெண்கள்,
படிக்கட்டில் பயணம்,
அவ்வப்போது வருகைப்பதிவும் வகுப்பறையும்,
பகிர்ந்தே உணவுகள்,
பல காதல் முன்மொழிதல்,
கல்லூரி முடிந்தும் அரட்டைகள்,
மறந்துவிடும் பகைகள்,
எப்போதும் நண்பர்கள் கூட்டம்,
தேர்விற்கு முன் சின்ன சின்ன துண்டு சீட்டுகள்,
அதிக மதிப்பெண் எட்டாக்கனி,
தேர்வில் தோல்வி பெருமிதம்,
விடுமுறைக்கு பின் முதல் நாள்,
வகுப்பறையில் நாமில்லாமல் ஆசான்,
வெள்ளிதோறும் திரையரங்கம்,
கண்ணீருடன் பிரிவு உபச்சாரம்....


கல்லூரி வாழ்க்கை - சொர்க்கம்
இன்னும் தொடரும்
அன்புடன்
கருணா

இன்று தோண்டி எடுக்கப்பட்டவை...



கவிதையை ரசித்த
என்னுள் இருந்த கவிஞன்
இன்று எழுத தொடங்குகிறான்
சில படைப்புகள் நான் (சொந்தமாய்) கிறுக்கியவை......


"நானும் இன்று முதல் கவிஞன் ஆகிறேன்
உன் காதல் அரங்கேற்றத்தால்..."


"உன்னை எண்ணியே
என் காதல் கவிதையாகிறது....."


"என் இதய அறையில் முழு உலகம்
அது நீ....."


"பிரிவு என்பதன் பொருள்
உன்னை பிரிந்த பின்புதான் தெரிந்தது....."


"பிறவிபயன் அடைந்தேன்
ஆம் உன் காதல் பயன் அடைந்ததால்...."


"கனவுக்கும் கவிதைக்கும் இடையில் ஒரு வானவில்
என் வாழ்க்கையின் ஒரு வார்த்தை சொல்...."


"என் தோட்டத்தில் பூக்களை காணவில்லை...
யாவும் உன் வீட்டு வாசலில் வாசமிட்டிருக்கின்றன.....
உன் புன்னகையில் கண் விழிக்க....."


"கவிதையை மட்டும்தான் காதலிக்க நினைத்தேன்
ஆனால் காதலியே ஒரு கவிதையாக என்னிடம்....."


"யார் சொன்னது கனவுகள் பலிக்காதென்று....
இதோ என் காதல்(லி) ஒரு சாட்சி....."


"என் கவிதைகளுக்கு சொற்கள் வேண்டாம்
சொப்பனம் போதும்....."


"அழுதுகொண்டிருப்பேன் என்கிறாய் நான் வந்து அணைக்கும் வரை...
உன்னை அணைப்பதா !!!
அள்ளி கொஞ்சுவதா !!!"


"உனக்கும் எனக்கும் நடக்கும் சண்டையில் நீ வென்றுவிடுகிறாய்
உன் அரை நொடி முத்தத்தால்....."


"காதலி முத்தம்,
அடுத்த தழுவல்,
கண்ணில் தூண்டில்,
சேர்ந்தே உதடுகள்,
செலவாகும் முத்தங்கள்,
காலையில் அவள் முகம்,
கவிதையில் அவள் பெயர்......
யோசிக்கும் வேளையில்
கலைந்தது கனவு"



இவையாவும் இன்று தோண்டி எடுக்கப்பட்டவை...
இன்னும் தொடரும்
உங்கள் கருத்துக்களை வரவேற்கின்றேன்


அன்புடன்
கருணா

Wednesday, March 07, 2007

கருவறையில் தொடங்கியது ...



(படக்கவிதை படித்ததில் பிடித்தது)
"அம்மா என்றொரு தெய்வம் என் முன்னே தினமும்....
தொழுவாமல் இருக்காது மனமும்..."

அன்புடன்
கருணா

இதோ என் முதல் பதிவு...


இதோ என் முதல் பதிவு.....

இன்று முதல் நானும் எழுத தொடங்கிவிட்டேன்...
என்னையும் ஏற்று கொள்ளுங்கள்...
உங்கள் கற்பனைகளை கவிதைகளுடன் நான் சொல்வேன்.....


நன்றியுடன்
கருணா