tag:blogger.com,1999:blog-10802231570219070472024-03-13T18:20:54.859-07:00நிலவின் நிழலில்....கருணாhttp://www.blogger.com/profile/03487998970112799023noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-1080223157021907047.post-68962380790451115532008-11-16T12:15:00.001-08:002009-01-06T15:31:50.901-08:00சுவடுகள் - VII<span style="color:#009900;">Symposium வேலைகள் தீவிரமாக அரங்கேறத் தொடங்கின.அனைத்து ஏற்பாடுகளும் கரனின் தலைமையில் நடக்க இருப்பதால் இதை சிறப்பாக அமைக்க எனக்கும் கோபுவுக்கும் கொஞ்சம் ஆர்வம் அதிகமாகவே இருந்தது.அன்று மாலை கல்லூரி முடிந்த நேரம் அனைவரும் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த போது கரன் "டேய் இந்த symposium நல்லா பண்ணனும் so evening சும்மா என்ன பண்ணலாம்னு discuss பண்ணலாம், எல்லாம் beach க்கு வந்துடுங்க, நந்தா,செல்வா,கார்த்தி நீங்க எல்லாம் நேரா அங்க வந்துடங்க, நாங்க மூணு பேரும் 7.30 க்கு வந்துடறோம் ok வா". ஆனால் நாங்கள் எல்லோரும் ஒன்றாய் பொழுதைக் கழிப்பதில் ஏக சந்தோசம் எனக்கு, ஏனெனில் கும்பலாக எதாவது பேசும் வேளையில் அவனவன் ஆட்களைப் பற்றி கண்டிப்பாக ஒரு வார்த்தை வரும்.அதில் கிடைக்கும் ஆனந்தமும் ஒரு தனி சுகம்தான். மாலை 7.40 க்கு சரியாக அனைவரும் சந்தித்தோம். Symposium தவிர அனைத்து விவாதங்களும் அருமையாக அரங்கேறிக் கொண்டிருந்தன. பேசிக் கொண்டிருக்கும் போதே செல்வா "டேய் மணி 9.10 ஆச்சு இன்னும் கொஞ்ச நேரத்துல ருக்மணில காதல் கொண்டேன் second show போட்டுருவான், எல்லாம் நல்லா இருக்குனு சொல்றானுங்க, போலாமா? " என கேட்டான். கேட்ட அடுத்த நிமிடத்தில் அனைவரும் ஒரே வரிசையில் முன் இருக்கை மீது கால் போட்டுக் கொண்டு. படம் நகர நகர அதன் கதை போகும் போக்கில் கோபு இடையே குறுக்கிட்டு "டேய் கரன் இந்த படத்தோட climax எதிர் பார்க்கறேன்டா, ஏன்னா இந்த கதையை பார்த்தா நம்ம பக்கத்துல்ல உக்கார்ந்திருக்கற ஒருத்தன் கதை மாறியே இருக்கு" என என்னை நோக்கி அவனிடம் காதைக் கடித்தான். ஒரு வழியாக படம் முடிய நாங்கள் வரும் வழியில் மீண்டும் கோபு " இங்க பாருடா கதிர் உன் கதைய அப்படியே copy அடிச்சு அந்த புது director படம் எடுத்துருக்கான். ஆனா அந்த climax கததாண்டி உனக்கும்" என சிரித்தான். கரன் குறுக்கிட்டு "டேய் வாய மூடுடா அவன் இப்போவாது திருந்தட்டும்" என்றான்.<br /><br /><br />ஆனால் நான் இதைப் பற்றி ஏதும் நினைக்கமால் Beach ல் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் கொஞ்சம் நழுவி யாருக்கும் தெரியாமல் நான் லாவண்யாவுக்கு வாங்கிய பிறந்த நாள் பரிசு பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். ஆம் மறுநாள் லாவண்யாவின் பிறந்த நாள். அவள் என்னதான் என்னைவிட்டு தள்ளி இருந்தாலும் அவள் பிறந்தநாளை நான் விட்டுத்தள்ள விரும்பவில்லை. மறுநாள் நான் வாசலியே வேடிக்கை பார்த்த நேரத்தில் கணப் பொழுதில் ஒரு மஞ்சள் சுடிதாரில் மங்களகரமாய் வந்தமர்ந்தாள் லாவண்யா. அன்று எவ்வளவு எண்ணியும் என்னால் மதியம் வரை பேச முடியவில்லை. கரன் "என்னடா அதுக்கு பொறந்தநாள் நீ என்ன வெறும் கையோட வந்துட்ட" உடனே கோபு என் bag ல் இருந்த அந்த gift ஐ ஆராய்ந்து எடுத்து "டேய் கதிர் இது என்னடா", நான் "அது வந்து அது வந்து சும்மா ஒரு gift நேத்தே வாங்கிட்டேன், அதான் ஒரு xerox எடுக்கனம்னு நடுல நேத்து போனேன்ல அப்போ" என பல்லை இளித்துக் கொண்டே கூற, "டேய் கரன் இவன பார்த்தியாடா கண்டிப்பா இவன் ஒரு கள்ளன்டா நாம ரொம்ப ஜாக்கிரதயா இருக்கணும் அப்பறம் இவன சரியா follow பண்ணனும்... " என நகைத்தான். ஒரு வழியாக லாவண்யாவை சந்திக்க ஒரு free period கிடைத்தது அன்று. வகுப்பில் யாருமில்லா நேரத்தில் அவளே என் இடத்திற்கு வந்தாள். "Happy Birthday லாவண்யா ஒரு சின்ன gift வாங்கனேன் பிடிச்சிருக்கா" என நான் கேட்க அவளின் Thanks கண்களில் தெரிந்தது ஒரு புன்னைகையோடு .<br /><br /><br />" கதிர் evenig canteen க்கு வா ஒரு சின்ன treat..அப்பறம் தனிய வராதா உன்னோட ரெண்டு கூட்டாளிகளையும் கூட்டிட்டு வா நான் இப்போ hostel போயிட்டு வரேன்" என சிரித்துக் கொண்டே சென்றாள். வகுப்பை விட்டு வெளியே சென்றுவிட்டு மீண்டும் இரண்டு அடி பின்வைத்து "Thanksடா கதிர்" என்று சொல்லிவிட்டு சென்றாள். வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் வானத்தில் வட்டமிடத் தொடங்கினேன்.மேலே பறந்து கொண்டிருந்த வேளையில் யாரோ இருவர் வேகமாக பிடித்து இழுப்பதுபோல் இருந்தது. "Sir class ல நீங்க மட்டும்தான் இருக்கீங்க கொஞ்சம் வேற உலகத்துக்கு வரியாடா வெண்ண கரன் அங்க வெயிட் பண்றான்" என்று மண்டையில் தட்டி கோபு என்னை எழுப்பினான். நான் அவர்களை பார்த்து "டேய் லாவண்யா canteen க்கு வர சொன்னா போலாமா" என்றதற்கு கரன் "டேய் அவங்களுக்கு எங்களலாம் வாயால கூப்பிட முடியாதா? என்ன நீ அவங்களுக்கு PA வா" எனக் கேட்க, கோபு "டேய் நாம பண்றதுக்கெல்லாம் இவ்ளோ மரியாதை கிடைக்கறத நினச்சி சந்தோஷ படுடா.. சரி கதிர் வேற யாரெல்லாம் வராங்கடா" எனக் கேட்க, "கோபு அவர்களே கொஞ்சம் மூடிட்டு வறீங்களா.. நீ யார எதிர் பார்க்கறனு எனக்கு தெரியுண்டா." என உடனே அவன் வாயை மூடினான். 4.00 மணி முதல் நாங்கள் மூவரும் காத்துக் கொண்டிருந்தோம். லாவண்யா இதோ வரேன் என்று சொல்லிவிட்டு போனவள், 6.20 வரை ஆகியும் அவளின் நிழல் கூட அந்தப் பக்கம் தெரியவில்லை. "டேய் உன்ன நம்பி வந்தோம் பாருடா இப்போ private bus ல போவ வசிட்டேயாடா... சரி விடு இது உனக்கு இன்னொரு பாடம்." என கோபுவும் கரனும் bus stop நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள் என் மௌனத்தோடு. மறுநாள் வகுப்பில் காலை லாவண்யாவின் கண்கள் வந்த உடனே என்னைத் தேட ஆரம்பித்தது எனக்கு சட்டென புரிந்தது. நான் வேண்டுமென்றே அவள் கண்களில் படாமல் மதியம் வரை மறைந்தோடினேன். ஆனால் மாலை எப்படியோ என்னைத் தேடி library இருக்கும் குட்டிச்சுவர் வந்து விட்டாள். "நீ வருவன்னு எனக்கு தெரியும். அதுவும் எப்படியும் ஒரு காரணத்தோடு வருவேன்னும் தெரியும்" என கோபமாக நான் கேட்க, "கதிர் நீ என் மேல கோபமா இருக்கேன்னு தெரியும் ஆனா நேத்து நான் வராதத ஞாயப்படுத்தப் போறதில்ல. என் roommates எல்லோரும் எனக்கு hostel ல cake வெட்டி என்ன வெளியவே விடல, உள்ளத சொல்லிட்டேன் அதுக்கப்பறம் நீ கேட்கறதும் கேட்காததும் உன் இஷ்டம்" என சொல்லிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தாள். என் கால்களும் அவள் பாதை </span><span style="color:#009900;">நோக்கி ஓடியது அவள் பின்னே.</span><br /><p><span style="color:#009900;">மீண்டும் நான் அவள் நட்பின் பாதை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தேன்.<br /></span><span style="color:#009900;"></span></p><p><span style="color:#009900;">நாங்கள் எதிர்பார்த்தபடியே Symposium சிறப்பாக நிறைவுற்றது. </span></p><p><span style="color:#009900;">கல்லூரியில் அனைத்து நண்பர்களும் நல்லதொரு கம்பெனியில் வேலையை தக்க வைத்துக் கொண்ட நாட்கள் அவை. அனைவரும் வாழ்க்கையில் ஒரு படி மேலே போன நாட்கள். முடியவேக் கூடாதென எதர் பார்த்த கல்லூரியின் கடைசி நாட்கள் நெருங்கத் தொடங்கின. ஆம் இன்னும் நான்கு மாதத்தில் என் கனவு வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளியும், நிஜ வாழ்க்கைக்கு ஒரு தொடர்புள்ளியும் போடப்போவதைப் புரிய ஆரம்பித்த நாட்கள்.</span></p><br /><p></p><p><span style="color:#990000;"><strong>(தொடரும்) </strong></span></p><p><span style="color:#990000;"><strong>அன்புடன் </strong></span></p><p><span style="color:#990000;"><strong>கருணா</strong></span></p>கருணாhttp://www.blogger.com/profile/03487998970112799023noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1080223157021907047.post-21928073894573728762008-03-26T16:53:00.000-07:002008-03-26T16:57:22.009-07:00சுவடுகள் - VI<span style="color:#009900;"> நண்பர்களின் ஆரவாரத்துடனும் கல்லூரி நாட்கள் செல்வதே தெரியாமல் இருந்த எனக்கு நாட்கள் வேகமாக ஓடுவதற்கு பதிலாக நகரத் தொடங்கியது லாவண்யாவின் பார்வை இல்லாமல். அனைவரும் தங்கள் project முடிவு செய்துவிட்டார்கள். எங்கள் மேலேயும் கொஞ்சம் அபார நம்பிக்கை வைத்து சகாதேவன் professor அவருடைய Ph.D work ல் எங்களுக்கு பங்களித்தார் அதையே project ஆக செய்ய சொல்லிவிட்டார். அவரிடம் project செய்வது எங்களுக்கும் கொஞ்சம் பெருமையாக இருந்தது ஏனெனில் அவரிடம் பேசுவதற்கே எங்கள் வகுப்பில் அனைவரும் யோசிப்பார்கள். அனைவருக்கும் project முடிவான பின்னே வகுப்பில் இருக்கும் அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டது அவரவர் project batchகளைப் பொறுத்து, என் மனதில் சிறை பூட்டப்பட்டது. லாவண்யா அதில் சற்று தூரம் செல்லத் தொடங்கினாள். எனக்கான பாதை நேர்க்கோட்டில் இல்லாதது போல் இருந்தது. நான் அதிகம் விரும்பிய lab அனைத்தும் வெறுமையை மட்டும் எனக்கு பரிசாக தந்தன. அவள் இருக்கும் காரணத்தால் என்று Lab வகுப்புகள் எப்போது வருமென்று ஆர்வமாய் எதிபார்த்திருந்த நாட்கள் எல்லாம் இன்று என்னைப் பார்த்து ஏளனமாக சிரிக்க ஆரம்பிக்கத் தொடங்கிவிட்டன.</span><br /><br /><span style="color:#009900;">ஆனால் கிடைக்கும் சிறு நேரத்திலாவது அவளிடம் பேச நினைத்துக் கொண்டிருந்தது மனது. நான் எதிர் பார்த்தது போல் ஒரு 10 நாள் கழித்து லாவண்யாவும் என்னிடம் வந்து "என்ன கதிர் முதல்ல போல பேசலனு கோச்சிக்காத சரியா, வேற batch போனதால உன்ன ஒழுங்கா கவனிக்கக் கூட முடியல, சரி உனக்கு எப்படி போகுது project... start பண்ணியாச்சா?" என அவள் கேட்டுக்கொண்டே போக எதையோ பறிகொடுத்தவன் போல அவள் வார்த்தைகளை ரொம்ப நாட்களுக்கு பிறகு கேட்கும் மகிழ்ச்சியில் நான் திளைத்துக் கொண்டிருந்தேன். "இல்ல ஏதும் strat பண்ணல, அப்படியே போய்ட்டு இருக்கு...பண்ணனும்..பார்ப்போம்" என்றேன். அவளுக்கு என் மேல் இருந்த எதோ ஒன்று குறையவில்லை என்று மனதில் கொஞ்சம் சந்தோசம் சாய்ந்தாடியது. ஆனால் அதை நிலையானது அல்ல என்று மட்டும் மனதில் கேள்விகள் புரண்டோடியது. அன்று மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு சென்று தனிமையில் எதையோ எண்ணிக் கொண்டிருந்த வேளையிலே தொலைபேசி அலறியது "கதிர், நான் லாவண்யா பேசறேன் நாளைக்கு உங்க வீட்டுக்கு வரலாம்னு இருக்கேன் என்ன சொல்ற, போன semester நீயும் என்ன எத்தனையோ தடவ கூப்பிட்ட ஆனா எனக்குத்தான் time ஒத்து வரல, நான் மட்டும் தனியா வரல ராதாவையும் கூட கூட்டிக்கிட்டு வரப்போறேன், அவ்ளோ தூரம் வரனும்தானே" என்று சொல்லி என்னை சற்று அந்தரத்தில் மிதக்க வைத்தால். எனக்கு அவள் என் வீட்டுக்கு வருகிறாள் என்று சொன்னதும் எனக்கு என்ன செய்வது என்று புரியாமல் உள்ளே நுழைந்த அம்மாவிடம் "மா நாளைக்கு காலைல என்ன சாப்பாடு" என்று கொஞ்சம் ஆர்வமாக கேட்டேன். "இட்லி சுடலாம்னு இருக்கேன் ஏன்டா?" என்றார்கள். "இல்லமா வேற எதாவது புதுசா செய்யலாமே" என்றேன். " சரி இடியாப்பம் செய்யட்டுமா ?" என்று சொன்ன போது அதுவும் கேரளத்து special ஆக இருந்ததால் உடனே அதையே செய்யுங்கள் என்று கூறிவிட்டேன். லாவண்யா வரும் விஷயத்தை அன்று கரன் மற்றும் கோபுவிடம் கூட சொல்ல முடியவில்லை.</span><br /><br /><span style="color:#009900;">காலையில் எல்லாம் தயார் ஆக இருக்க, அவள் மட்டும் காணவில்லை. மணி 10.30 ஆனது எங்கே எனக்கு ஏமாற்றத்தை தரப் போகிறாள் என்று வீட்டு வாசலில் எட்டிப் பார்த்த எனக்கு ஒரு குட்டி தேவதை என் வீதியிலே வருவது போல் தெரிந்தது. ஆம் லாவண்யா வருகையால் என் வீதியும் விழிப்படைந்து. உள்ளுக்குள்ளே ஒரு நடுக்கத்துடன் வார்த்தையில்லாமல் அவளை வரவேற்று அனைவருக்கும் அறிமுகம் செய்துவிட்டு அவள் அமர்ந்த இடத்துக்கு எதிரே அமர்ந்து உணவருந்தினேன். பின்னர் சுமார் ஒரு அறை மணி நேரம் பொழுதைக் கழித்துவிட்டு வேகமாக கிளம்பினாள். "சரி aunty நான் கிளம்பறேன், எங்க வீட்ல சாப்பிட்ட இடியாப்பம் மாதிரி செஞ்சிருந்தீங்க " என சொல்லிவிட்டு வேகமாக கிளம்பினாள். நான் ஆவென்று அவளையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவளை bus stop வரை வழி அனுப்பலாம் என்று செல்லும் வேளையில் ராதா "நான் இங்க கார்த்திய பார்க்க போறேன் லாவண்யா நீ போய்டு ஓகேவா" எனக் கூறி அங்கிருந்து கிளம்பி விட்டாள். லாவண்யா என்னிடம் தயக்கமாய் "கதிர் உனக்கு கஷ்டமில்லனா என்ன கொஞ்சம் மெயின் bus stop ல drop பண்ணிடரியா நான் அங்கேர்ந்து வேற bus பிடிச்சி போயிடறேன்" எனக் கூறினாள். உடனே அவளை என் நண்பனிடம் வாங்கி வந்த scooty ல் உட்கார வைத்துக் கொண்டு நகர்ந்தேன். ஒரு புதுவித பயம் கலந்த அனுபவம். </span><br /><br /><span style="color:#009900;">வழியில் ஏதோ அவள் தொன தொனவென பேசிக் கொண்டிருக்க அவள் வார்த்தைகளை செல்லமாய் காதுகளில் வாங்கிக் கொண்டிருந்தேன். அந்த bus stop நான் எதிர் பார்த்ததைவிட சீக்கிரம் வந்தது அப்போது " கதிர் எதாவது உனக்கு urgent வேலையிருக்கா?" என்றாள். "இல்லையே என்ன சொல்லு என்ன செய்யணும்" எனக் கூறினேன். "நீ busy இல்லனா என்ன Richy Richக்கு கூப்டுகிட்டு போறியா? சும்மா உன்கூட first time வெளிய வரேன் அதான்" என்று சொல்லி முடித்த அடுத்த வினாடியில் scooty Richy Rich ice cream shop நோக்கி நகர ஆரம்பித்தது. ஒரு மெல்லிய வெளிச்சத்தில் அவள் அருகே நான் அமர்ந்திருக்க இசை எங்கேயோ கேட்பது போல் இசைத்துக் கொண்டிருந்தது என் காதுகளுக்கு மட்டும். " இந்தா கதிர் உனக்கு புடிச்சது சொல்லு அதையே இன்னிக்கு நானும் சாப்பிடறேன் சரியா" என்றவளிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் ஏதோ ஒன்றை சொன்னேன். அது வரும் நேரத்திற்குள் கொஞ்சம் வார்த்தைகள் பரிமாறப்பட்டது. இத்தனை முறை நண்பர்களுடன் சென்ற அந்த இடத்திற்கு இப்போது லாவண்யா உடன் சென்றது புதுமையாக இருந்தது. வந்த ice cream ஐ நான் பேச்சு வாக்கிலே வேகமாக சாப்பிட்டு முடித்து அவள் சாப்பிடுவதை ரசித்துக் கொண்டிருந்தேன்.</span><br /><br /><span style="color:#009900;">லாவண்யா குறுக்கிட்டு "என்ன வந்த வேலை முடிஞ்சுதா, order பண்ண, கட கடன்னு சாப்ட, இதுக்கா உன்ன இங்க கூப்டுகிட்டு வந்தேன். கொஞ்சம் பொறுமையா பேசிகிட்டே சாப்டா நல்லா இருந்திருக்கும்ல உன்கிட்ட college ல பேச முடியல அதனாலத்தான் இங்க வந்த ஆனால் நீ" என என்னைப் பார்த்து நகைத்தாள். கொஞ்சம் பொறுமையா சாப்பிட்டு இருக்கலாம் என்று அப்பறம் தோன்றியது. சற்று நேரத்தில் "கதிர் நான் கிளம்பறேன் என்ன bus stop ல விட்டுடு வா போலாம் மணி ஆகுது" என அவசரப் படுத்த, நான் "லாவண்யா இப்போ நான் ஒன்னு சொல்றேன், மணி 1 ஆகுது இந்த time ல பஸ் அதிகமா இங்கேர்ந்து இருக்காது அதுவுமில்லாம உன்ன தனியா அனுப்ப எனக்கு மனசு இல்ல அதனால நானே உன்ன college ல drop பண்ணிடறேன்" எனக் கூறி முடிப்பதற்குள் அவள் வண்டியில் அமர, பயணம் கல்லூரியில் முடிந்தது. "கதிர் I had a nice time today ரொம்ப thanks மறக்க மாட்டேன்" என சொல்லி hostel நோக்கி நடந்தாள். வரும் வழியில் ஒரு ஆயிரம் பட்டாம் பூச்சிகளுடன் பறந்து வந்தேன்.</span><br /><br /><span style="color:#009900;">வகுப்பில் ஆசிரியர் இல்லா நேரம் பார்த்து அனைவரும் அரட்டையில் இருக்க இதை என் நண்பர்களிடம் சொல்ல "கோபு இவ்ளோ நடந்திருக்கு இந்த பையன் எதையும் சொல்லல பார்த்தியாட, அந்த பொண்ணு வந்தா நம்மள கழட்டி விட்டுடறான் பாரு இவன் சரியில்லடா" என கரன் பின்னால் அமர்ந்திருந்த கோபுவிடம் கூற கோபு எதையும் காதில் வாங்காமல் வேறு எதோ ஒரு சிந்தனையில் பெண்கள் பக்கம் இருக்கும் இளவரசியை கண்களால் கைது செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தான். "டேய் டேய் போதுண்டா site அடிச்சது அங்கேர்ந்துதான் ஒண்ணும் reaction இல்லதானே அப்பறம் என்ன வெறுமனே லுக் சொல்லு. இந்த பையன் செஞ்சத சொன்னேன் கேட்டியா" என கரன் கூற,<br />"என்னடா சொன்ன, என்ன நம்ம பையன் இவ்ளோ அமைதியா இருக்கான்... ஏன்டா தனியா இருக்க ஏன் அவங்க இப்போ free யா இல்லையா, என்ன பன்றதுடா ஒரே batch ல இவ்ளோ நாள் சந்தோசமா இருந்தான் இப்போ போய் லவ் தூக்கி sorry லாவன்யாவ தூக்கி வேற batch போட்டதால பையனுக்கு ஒரே கஷ்டம் யாரோட வயித்தேரிச்சலோ தெரியலா ஆனா இதுல சிலருக்கு சந்தோசம்தான்" என கோபு என்னை ஓட்டினான். நடந்ததை எல்லாம் கரன் மீண்டும் கூற, கோபு "டேய் மச்சான் ஒரு நாளாவது எங்களுக்கு இடியாப்பம் உங்க வீட்ல செஞ்சி கொடுத்திருக்கியாட ஆனா அவளுக்கு மட்டும், இதெல்லாம் நல்லதுக்கு இல்லடா. கரன் இவன் கொஞ்சம் கொஞ்சமா மலையாலீயா மாறிட்டு வரான் நீ வேணும்னா பாரு இன்னும் கொஞ்ச நாள்ல இவன் கதகளி,மம்மூட்டி, அம்மே, அச்சன்,மலபார் னு சுத்திட்டு இருக்க போறான்" என அடுக்கினான் என்னைப் பற்றி சரியாய். "சும்மா இருடா இப்பவாது அவன் ஒழுங்கா இருக்கட்டும்" என கரன் கூறி முடிக்கும் முன்னர் வகுப்பறைக்கு HOD நுழைந்தார், அது அவரின் வகுப்பு. "Dear students we have to organize the Technical Symposium by next month end so plan and share your ideas, கரன் நான் உன்ன இதுக்கு responsibility எடுத்துக்க சொல்றேன் கூடவே 2nd & 3rd years help வேணும்னாலும் வாங்கிக்கோ" என அவர் கூறினார்.</span><br /><br /><span style="color:#009900;">இதைப்பற்றி பேசிக் கொண்டே வெளி வரும்போது அன்று Notice Board ல் அடுத்த வாரம் ஒரு company campus கு வருவதாக ஒட்டியிருந்தது. இது கொஞ்சம் computer software company அதனால் எங்கள் வகுப்பில் எவருக்கும் விருப்பமில்லாமல் இன்னுமொரு company ஆக நினைத்தார்கள். ஆம் அதில் கடைசிவரை சென்றது இருவர், தட்சணாமூர்த்தி மற்றும் மணி. ஆனால் இருவரும் நாங்கள் எதிர்பார்த்ததை பூர்த்தி செய்யாமல் வெளியேறினார்கள். ஆனால் அதைப் பற்றியெல்லாம் அப்போது எவருக்கும் பெரிய கவலை இல்லை. அடுத்து சில வாரம் கழித்து வந்த Ashok Leyland கம்பெனியில் தட்சணாமூர்த்தி தன் பெயரை பதித்துக் கொண்டான். நான் மீண்டும் முதல் சுற்றிலே வெளியே எரியப்பட்டேன். இதைப் பற்றி எதையும் கவலைப்படா ஒரு கூட்டத்தில் ஒருவன் என்னைப் பார்த்து "டேய் நீ இன்னும் எத்தனை கம்பனிதாண்டா போய் போய் வருவ இந்த கம்பெனியோட Hat trick அடிச்சிட்ட வாழ்த்துக்கள்டா கதிர்" எனக் கூற கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கும் முன்னரே அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டேன். ஆனால் அவன் சொன்ன வார்த்தைகள் மனதில் ஆழமாய் பதிந்தது. அவனை எதிர்த்து பேசமால் வந்ததற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. ஆம் அவன் லாவண்யாவின் ப்ராஜெக்ட் batch. </span><br /><br /><span style="color:#009900;">மனதில் சந்தோசத்தின் சதவிகிதம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவது போல் உணரத் தொடங்கினேன்..<br /><br />(தொடரும்) </span><br /><span style="color:#009900;"></span><br /><span style="color:#990000;"><strong>அன்புடன் </strong></span><br /><span style="color:#990000;"><strong>கருணா</strong></span>கருணாhttp://www.blogger.com/profile/03487998970112799023noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1080223157021907047.post-65163452307758689442008-03-08T12:31:00.000-08:002008-03-08T13:52:25.675-08:00முத்தச்சாரல்....<span style="color:#009900;">ஒரு கோடி முத்தங்களை </span><br /><span style="color:#009900;">ஓர் இரவில் கொடுக்க ஆசைதான்</span><br /><span style="color:#009900;">என்ன செய்ய இருப்பது இதழ் இரண்டுதானே.....</span><br /><br /><span style="color:#009900;">நீ கோபப்படுவதெல்லாம்</span><br /><span style="color:#009900;">என் முத்தப்பரிசை பெறத்தான் என</span><br /><span style="color:#009900;">உன் பொய்க் கோபம் என்னிடம் உண்மை சொன்னது...</span><br /><br /><span style="color:#009900;">கட்டியணைத்து கொடுக்கும் முத்தத்தை விட</span><br /><span style="color:#009900;">கட்டளையிட்டு நீ வாங்கும் முத்தம்</span><br /><span style="color:#009900;">உன் மொத்தத்தையும் சொல்கிறது......</span><br /><br /><span style="color:#009900;">இடைவெளியில்லாமல்<br />இதழ் வலியில்லாமல்</span><br /><span style="color:#009900;">இரு ஜோடி இதழ்களால்</span><br /><span style="color:#009900;">ஒரு கோடி கவிதைகள் வரைவோம் வா...</span><br /><br /><span style="color:#009900;">நீயும் நானும் சேர்ந்து கொடுக்கும் முத்தத்தை </span><br /><span style="color:#009900;">என்னவென்று சொல்வது</span><br /><span style="color:#009900;">கொடுக்கும் முத்தமா?</span><br /><span style="color:#009900;">வாங்கும் முத்தமா?</span><br /><span style="color:#009900;">இல்லை நிசப்த யுத்தமா.....</span><br /><br /><span style="color:#009900;">உன் ஒவ்வொரு முத்தத்தால் ஒரு ஆயுள் அதிகமாகுமென</span><br /><span style="color:#009900;">இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவன் நான்.</span><br /><span style="color:#009900;">இப்போது என் ஆயுள் உன் இதழில்....</span><br /><br /><span style="color:#009900;">இதழ் ரசம் இவள் வசம்</span><br /><span style="color:#009900;">அது என் மீது வழிந்தால் ஆவேன் பரவசம்....</span><br /><br /><span style="color:#009900;">உனக்கும் எனக்கும் அப்படி என்ன பெரிய சண்டை</span><br /><span style="color:#009900;">இப்படி முட்டி மோதிக் கொள்கின்றன நம் உதடுகள்</span><br /><span style="color:#009900;">இதற்குப் பேர்தான் முத்தப்போரோ?</span><br /><br /><span style="color:#990000;"><strong>அன்புடன் </strong></span><br /><span style="color:#990000;"><strong>கருணா</strong></span>கருணாhttp://www.blogger.com/profile/03487998970112799023noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1080223157021907047.post-35213018178289916812008-02-13T10:00:00.000-08:002008-02-13T10:38:36.018-08:00காதல் வரிகள்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYbFmbhwDcmDZ1wmJCPWGSSlS24PYKoTuww0nYDiEUDpIx4lO_ivikPMWDYrRD4Lq_-UEpSsk1WtzikvaIgVXoBJyN-7w4_0-HhuRJXlMmzpUQKPHM3Or7ScjgJWQPNcLMDH4FbCL9RT8/s1600-h/image010.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5166536000014612498" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYbFmbhwDcmDZ1wmJCPWGSSlS24PYKoTuww0nYDiEUDpIx4lO_ivikPMWDYrRD4Lq_-UEpSsk1WtzikvaIgVXoBJyN-7w4_0-HhuRJXlMmzpUQKPHM3Or7ScjgJWQPNcLMDH4FbCL9RT8/s320/image010.jpg" border="0" /></a><br /><div><span style="color:#009900;">"புல்வெளி மீது நடக்காதீர்" </span><br /><span style="color:#009900;">அங்கிருந்த புற்கள் அனைத்தும் வாடியது வாசகத்தைக்கண்டு</span><br /><span style="color:#009900;">உன் பாதம் அதன் மீது படாததால்..."</span><br /><br /><span style="color:#009900;">"நீ கிளம்பி வீட்டைவிட்டு வெளிவரும் முன்னரே</span><br /><span style="color:#009900;">காற்றெல்லாம் தன்னை அழகுபடுத்திக்கொண்டு </span><br /><span style="color:#009900;">உனக்காக விழி வைத்துக் காத்துக் கிடக்கின்றன</span><br /><span style="color:#009900;">உன் பூ முகத்தை முத்தமிட..."</span><br /><br /><span style="color:#009900;">"காதலும் கவிதையும் சண்டையிட்டுக் கொள்கின்றன</span><br /><span style="color:#009900;">உன்னை நான் முதலில் எதைக்கொண்டு வர்ணிப்பேன் என்று..."</span><br /><br /><span style="color:#009900;">"உன் தோட்டத்தில் ரோஜாக்கள் அனைத்தும் மயங்கி கிடக்கின்றன</span><br /><span style="color:#009900;">காலை உன்னைப் பார்த்து பூத்த மயக்கத்தில்..."</span><br /><br /><span style="color:#009900;">"நீ கைதொட்டு பறித்து வைத்துக்கொண்ட ஒரு மலர்,</span><br /><span style="color:#009900;">ஏளனமாக என்னைப் பார்த்து சிரிக்கின்றது </span><br /><span style="color:#009900;">உனை தீண்டிய இன்பத்தில்...."</span><br /><br /><span style="color:#009900;">"காதலுக்குள் காதல்"</span><br /><span style="color:#009900;">இதை இப்படி சொன்னால் என்ன.. </span><br /><span style="color:#009900;">"உனக்குள் நான்"</span><br /><br /><span style="color:#009900;">"கவிதையில் அடங்கிவிடுகிறாய் </span><br /><span style="color:#009900;">உன் காதலில் எனை அடக்கி சிரிக்கிறாய்..." </span><br /><br /><span style="color:#009900;">"நாளை உலகத்தின் கடைசி நாள் </span><br /><span style="color:#009900;">என்றாலும் </span><span style="color:#009900;">கவலை இல்லை</span><br /><span style="color:#009900;">இன்று உனை கண்டு என் காதலை சொன்னால்..."</span><br /><br /><strong><span style="color:#990000;">அன்புடன் </span></strong><br /><strong><span style="color:#990000;">கருணா</span></strong></div>கருணாhttp://www.blogger.com/profile/03487998970112799023noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1080223157021907047.post-22361519577701205552008-02-06T16:05:00.000-08:002008-02-06T16:08:34.775-08:00சுவடுகள்-V<p><br /><span style="color:#009900;"><br />தேர்வுகள் முடிந்த நேரம், மனதில் எந்த கவலையும் இல்லாமல் அரட்டையோடு பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தோம்.<br />எப்போது இறுதி வருட வகுப்பில் காலடி வைப்போம் என்ற கனவுடனே நாட்கள் ஓடியது. மூன்றாமாண்டு முடிந்த நேரமே அனைவரும் CampusI Interview, இதற்கு தங்களை தயார் படுத்திக்கொண்டார்கள். பூவோடு சேர்ந்து நாரும் மணப்பது போல, நானும் கரண் உடன் சேர்ந்து அதற்காக ஏதோ படிக்க ஆரம்பித்தேன். எனக்கும் எப்படியாவது கல்லூரி முடியும் முன்னரே ஒரு வேலை வாங்கி விட வேண்டும் என்ற கனவு மட்டும் கண்களில் தவழ்ந்து கொண்டே இருந்தது. இவையெல்லாம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, எதை பற்றியும் கவலைப்படாதா ஒரு கூட்டமும் ஒன்று உண்டு. சந்தோஷ்தான் இதன் தலைவன். இவன் படிப்பில் கொஞ்சம் கெட்டிக்காரன்.அந்த கூட்டத்திற்கு வேண்டுமானால் எந்த கவலையும் இல்லாமல் இருக்கலாம்.ஆனால் சந்தோஷின் நிலை அவனுக்கு தெரியும்.</span></p><span style="color:#009900;"><p><br />ஆனால் அவன் எப்போதும் எங்கள் வகுப்பின் மீது ஒரு வெறுப்பாகவே இருப்பான், அதன் காரணம் என்னவென்று எங்களுக்கு கேட்க விருப்பமில்லை. எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பது பிடிக்கும், ஆனால் எல்லோரிடமும் அதுமாதிரி இருக்க விரும்பமாட்டான். எங்களிடம் கொஞ்சம் உரிமை அதிகமாக எடுத்துக்கொண்டே பேசுவான் எந்த பாரபட்சமும் இல்லாமல். அவனக்கு எங்கள் வகுப்பு மீது இருக்கும் கோபம் என்னவென்று தெரியும், காரணம் அவன் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு வகுப்பில் நடந்த CR தேர்வில், ஜெயித்து விடலாம் என்ற நம்பிக்கையில் நின்ற அவனால் வெற்றி பெற முடியவில்லை, இரண்டு முறையும் அவன் பெற்றது சில வாக்குகளே. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம், அவன் ஒட்டி ஒட்டாமல் மற்ற நண்பர்களோடு இருப்பதற்கு. எங்களைப் பொருத்தவரை எந்த பாகுபாடில்லாமல் நாங்கள் அவனுடன் பழகுவோம் அவனும் அதுமாதிரிதான். நான் லாவண்யாவின் நண்பன் என்ற ஒரு காரணமும் அதன்பின்னே இருக்கலாம். கடைசி ஆண்டு கல்லூரி தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் எங்கள் கல்லூரிக்கு TVS Motors நிறுவனம் campus Interview வந்தது. எங்கள் வகுப்பில் படிக்கும் அனைவருக்கும் அது கனவு Company. அந்த company க்கு கரணை விட வேற ஒரு ஆள் எப்படியும் select ஆகமாட்டார்கள் என்ற நம்பிக்கை மட்டும் எனக்கு இருந்தது. அன்று நடந்த எழுத்துத் தேர்விலேயே எங்களை எல்லாம் ஓரங்கட்டி விட்டார்கள். அன்று பெரியதாக ஒரு மனக்கஷ்டம் இல்லை, காரணம் கரண் கடைசிவரை சென்றிருந்தான்,அவனுடன் நம்ம சந்தோசும்.</p><p><br />Technical, HR என அனைத்து interview முடிந்து கரணும்,சந்தோசும் இறுதி முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அன்று இரவு ஒரு 10 மணி அளவில் முடிவை சொன்னார்கள், எங்களின் எதிர்பார்ப்பை போலவே கரண் பெயரை சொன்னார்கள். அவனுக்கு மகிழ்ச்சி மனதில் பெருக்கெடுத்து ஓடியது எங்களுக்கும்தான். நாங்கள் அன்று இரவே அதை ஒரு பெரிய விழாவாக கொண்டாடிவிட்டோம். சந்தோஷ் வேகமாக வந்து கரணுக்கு கை குலுக்கிவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.<br /></p><p>கல்லூரியும் தொடங்கியாயிற்று.<br />முதல்நாள் முதல் பாடவேளையே ஒரே அறிவுரையாக சென்றது. அதை எல்லாம் பொருட்படுத்தாமல் நாங்கள் எல்லாம் எப்போது போலவே Interval க்கும் Lunch க்கும் காத்துக் கொண்டிருந்தோம். முதல்நாள் முடியும் வேளையில் மீண்டும் CR election. கரண் என்னிடம் " டேய் கதிர் இந்த election ல நாம மூணு பேர்ல ஒருத்தன் நிக்கறோம், யார் நின்னாலும் நமக்குத்தான் இந்த CR Post. இதுவரைக்கும் நின்னவங்க ஒண்ணும் பெருசா பண்ணல so நாம உருப்படியா எதாவது நம்ம class க்கு செய்யணும் OK வா" என்றான். வகுப்பில் எங்களுக்கு எப்போதும் ஆதரவு இருக்கும் என்று தெரியும், அந்த நம்பிக்கையில்தான் கரண் கூறினான். நாங்கள கரணை முன்மொழிய, அவனுக்கு எதிராய் மீண்டும் சந்தோஷ். "டேய் என்னடா இவன் நம்மகிட்ட ஒழுங்கா பேசறான் ஆனா எதுக்கு இந்த வீனத்த வேலை சொல்லு, கம்முனு வந்தமா ஒரு பொண்ணு pickup ஆச்சு.. போனமா இல்லாம தலய எதிர்த்து ஏன் இந்த election ல அவன்" என கூறினான் கோபு. தேர்தலின் முடிவில் மீண்டும் அவனுக்கு கிடைத்த வாக்குகள் எண்ணிக்கை 7. மிச்சமிருந்த 53 வாக்குகளும் கரணுக்கு விழ அவனுக்கு இன்னும் கொஞ்சம் வெறுப்பு அதிகமானது எங்கள் வகுப்பின் மீது. "டேய் அவன் எவ்ளோ சொல்லியும் கேக்கல நிக்காதனு சொல்லியும் நின்னான் அப்பறம் இந்த அசிங்கமெல்லாம் தேவையா சொல்லு" என செல்வா கூற "டேய் என்னடா இப்படி சொல்ற அவன் பங்காளி பக்கத்துலே இருக்கான், அவன் முன்னாடியே இப்படி சொல்றியே கோச்சிக்க போறான் இவன் " என என்னை நோக்கி வெறுப்பேற்றினான் கோபு. </p><p><br />மறுநாள் லாவண்யா என்னிடம் ஏதாவது பேசுவாள் என்று நினைத்தேன். ஆனால் அப்படி ஒன்றும் நடக்காத காரணத்தால், நானே போய் ஆரம்பித்தேன். "என்ன madam ரொம்ப busy போல, நேத்து கண்லே படல, எங்க போய்டீங்க" எனக் கேட்டேன். லாவண்யா "இல்ல நேத்து கொஞ்சம் தலவலி அதான் hostel போய்ட்டேன்" என்றாள். காரணம் எனக்கு விளங்கியது, அதை எனக்குள்ளே வைத்துக்கொண்டு, ஏதும் தெரியாதது போல், "ஏன் என்ன ஆச்சு இருக்கறப்பவே" எனக் கேட்க, "சந்தோஷ்கிட்ட நான் இந்த CR election ல நிக்க வேணாம்னு எவ்ளோவோ சொன்னேன் கதிர் ஆனா, என் பேச்ச கேட்காம போய் அவன் நின்னான்" என்றாள். "சரி நீ ஏன் அவன்கிட்ட போய் சொல்ற, அப்படி என்ன உங்க 2 பேருக்குல்லேயும்" என்று கேட்டேன். அதற்கு லாவண்யா "எல்லாம் தெரிஞ்சிகிட்டே நடிக்காத கதிர் உனக்கு எதுவும் தெரியாதா" என சற்று கோபமாக கூறினாள். எனக்கும் கொஞ்சம் தைரியம் வந்து "எனக்கு என்ன தெரியும் சொல்லு. நீ ஏதாவது என்கிட்டே சொன்னியா சொல்லு. அப்படி என்ன உங்க ரெண்டு பேருக்குல்லேயும், நீயே சொல்லதப்போ நான் என்னனு எடுத்துகறது" எனக் கேட்டேன். அவளோ "ஏன் கதிர் எதுவும் தெரியாது போல நடிக்கற, அவன நான் Love பண்றது உனக்கு தெரியுமில்ல அப்பறம் என்ன" என அதை முதன் முதாலாக என்னிடம் கூறினாள். ஏனென்று தெரியவில்லை அவள் வாயாலே அதைக் கேட்டது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது ஆனால் அதை நான் எதிர்பார்த்ததுதான். நான் தோழி என்ற நோக்கத்தில் பார்த்தாலும் அடுத்தவன் காதலி என அவளே கூறும்போது சற்று இறுக்கமாகத்தான் இருந்தது மனதில். அதற்கு மேல் அவள் வார்த்தைகளை கேட்க எனக்கு பொறுமையில்லாத காரணத்தால், இதற்குப் பிறகும் இதைப்பற்றி நான் அவளிடம் விசாரித்தால், அது இந்த நட்பின் விரிசலுக்கு காரணம் ஆகிவிடுமோ என்று நினைத்துக்கொண்டு வெளியில் எதையும் காட்டிக் கொள்ளாமல் அப்படியே அங்கிருந்து வந்து விட்டேன்.</p><p><br />"என்னடா நேத்து எதோ ஒரு பெரிய discussion போல, madam அப்பறம் நீங்க எதோ ரொம்ப நேரம் பேசிகிட்டு இருந்தீங்க, நாங்களும் எவ்ளோ நேரம்தாண்டா உனக்கு wait பண்றது சொல்லு, எதோ important discussion நினைச்சோம். அதான் சொல்லிக்காம கிளம்பிட்டோம், " என்றான் கரண். "இல்லடா நேத்து அவ சந்தோஷ பத்தி கொஞ்சம் சொன்னா அதான்" என்றேன். "ஆமா உனக்கு ஒண்ணும் தெரியாது அவங்க எல்லாத்தியும் சொன்னாங்க போடாங்க, நீயும் உன் கதையும்" என்றான் கோபு. அதற்குப்பிறகும் நான் எப்போதும் போலத்தான் அவளிடம் பேசிக் கொண்டிருந்தேன். </p><p><br />ஒரு வாரம் கழித்து அனைவரும் Project முடிவு செய்வதற்கு busy ஆனார்கள். அவரவர் அவர்களின் project ல் ஆட்களை தாங்களாக பிரித்துக் கொண்டார்கள். எங்கள் மூவரை யாரும் வந்து அழைக்கவில்லை அவர்களின் project க்கு, ஏனெனில் எல்லோருக்கும் தெரியும் இந்த மூவர் கூட்டத்தை பிரிக்க முடியாது என்று. இந்த மூவரோடு சேர்த்து நான்கவதாக ஒரு ஆளை சேர்த்துக் கொள்ளலாம் என்று கரண் மற்றும் கோபுவிடம் யோசனை கூறினேன் நான். அவர்களுக்கு அதன் காரணம் தெரிந்துவிட்டது. "டேய் நீயெல்லாம் திருந்தவே மாட்டியாடா, உன்னையெல்லாம் இன்னும் ஒரு 100 கரண் வந்தாலும் திருத்த முடியாதுடா" என நகைத்தான் கோபு. "நீ எதுக்கு கேட்கறனு தெரியும், ஏன் அந்த அக்காவ நம்ம project ல சேர்த்துக்கணும் அதானே" எனக் கூறினான் கரண். "டேய் இவனோட plan எனக்கு தெரிஞ்சு போச்சுடா, நாம 4 பேர் சேர்ந்தா வச்சிக்கோ, இவங்க ரெண்டு பெரும் வேற project பண்ணுவாங்க, நாம ரெண்டு பேர் மட்டும்தாண்டா உண்மையான project பண்ணனும், கோபு இவன நம்பாத" என கரண் முடித்தான். </p><p>நான் குறுக்கிட்டு"டேய் அந்த பொண்ணு என்கிட்டே கேட்டுச்சுடா அத உங்ககிட்ட கேட்டு சொல்றேன்னு சொல்லிருக்கேன், ஆனா நாம 4 பேரும் சேர்ந்து செஞ்சா நல்ல இருக்கும்னு எனக்கு தோனுதுடா", " யாருக்கு உனக்கு நல்லா இருக்கும்டா, ஆனா எங்க நிலமைய கொஞ்சமாவது யோசிச்சியா சொல்லு, கரண் இவன் நம்மள இவங்க ரெண்டு பேருக்கும் ஒரு பாதுகாப்பான படைவீரர்களா மாத்த பார்க்கிறான் இவன நம்பாத" என கூறினான் கோபு. இவ்வளவு நடந்தும் எனக்கோ மனதில் அவள் மேல் இருந்த மரியாதை சற்றும் குறையவில்லை. இதை புரிந்து கொண்ட அவர்கள் என் பொறுமையை சோதித்துப் பார்க்க விளையாட்டுக்கு என்னிடம் "சரிடா இப்போ உனக்கும் எங்களுக்கும் Toss போடலாம், பூ விழுந்தா அவள நாம சேர்த்துக்கலாம், அப்படி தல விழுந்தா தல சொல்றததான் நீ கேட்கணும் சரியா" என்றான் கோபு. நானும் அதிர்ஷ்டத்தை என் பக்கம் வைத்துக் கொண்டு தலை ஆட்டினேன். அந்த பாழாய்ப்போன 1 ரூபாய் தலையை காட்டியது. உடனே நான் குறுக்கிட்டு "டேய் மொத்தம் 3 தடவ போட்டு பார்க்கலாம், இப்போ 1 over so அடுத்த ரெண்டு முறை coin twist பண்ணுவோம், so அதுல என்ன விழுதோ அது படி நடக்கலாம் ஓகேவா" என்றதும் இருவரும் என்னை ஒரு கேவலமான வார்த்தையில் திட்டிவிட்டு மீண்டும் toss போட்டார்கள். மூன்று முறையும் தலையே விழ எனக்கு அதன் பிறகு ஒன்றும் என்னால் பேசமுடியவில்லை. ஆனால் என் மனதை புரிந்து கொண்ட கோபுவும் கரணும் "சரிடா இதெல்லாம் விடுடா நாம 4 பேரும் செய்யலாம், என்ன பண்றது உன்கூட இருக்கறதால இதெல்லாம் எங்களுக்கு தேவைதாண்டா..எல்லாம் உனக்காக" என்றான் கரண். </p><p>4 பேர் என்று முடிவு செய்துவிட்டு எங்கள் project guide அவரை போய் சந்தித்த போது அவர் ஒரு பெரிய குண்டை தலையில் போட்டார். "Sir நாங்க 4 பேர் பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கோம்" என்றான் கரண். உடனே அவர் " இங்க பாருங்கப்பா இந்த வருசதுலேர்ந்து 3 பேருதான் ஒரு project க்கு HOD சொல்லிட்டார் so நீங்க decide பண்ணி சொல்லுங்க" எனக் கூறிவிட்டார். "சரிடா நீங்க 3 பேர் செய்ங்க நான் வேணும்னா செல்வா கூட பண்றேன்" எனக் கூறினான் கோபு, உடனே நான் குறுக்கிட்டு "டேய் நாம 3 பேர்தாண்டா செய்றோம் அவ்ளோதான் நான் அவகிட்ட ஏதாவது சொல்லிடறேன்" என்றேன்.எனக்கு அப்போது அவள் முக்கியமாக தெரியவில்லை ஆனால் அவளிடம் எப்படி சொல்லி புரியவைப்பது என்றுதான் யோசித்தேன்.</p><p><br />இதை எப்படி அவளிடம் போய் சொல்வதென்று தெரியாமல் அவளை அன்று தேடிக் கொண்டிருந்தேன். அனைத்து இடத்திலும் தேடிவிட்டு கடைசியாக பேருந்துக்கு செல்லலாம் என தொடர்ந்த போது லாவண்யா சந்தொஷுடன் வேகமாக வந்து கொண்டிருந்தாள். நான் அவளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று முன்பே தெரிந்ததுபோல் சந்தோஷ் வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். "லாவண்யா... வந்து உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல" என நான் இழுக்கும்போது, அவள் மிகவும் தயக்கமாக "கதிர்.. .நானும் உன்கிட்ட ஒன்னு சொல்லணும், நான் உன்கூட project பண்றேன்னு சொன்னேன்ல ஆனா இப்போ நான் சந்தோஷ்கூட பண்ணலாம்னு இருக்கேன் நீ எதுவும் தப்பா எடுத்துக்காத சரியா.. என் நிலைமை அப்படி. இப்போ எங்களுக்கு ஒரு நல்ல company ல project கிடைச்சிருக்கு அங்கே பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டோம்.. அங்கதான் போய்ட்டு வரேன்" என அடுக்கிக்கொண்டே போனாள். என்னிடம் பேசிக்கொண்டே இருக்கும்போது அவனிடமிருந்து எதோ கண்ணால் சைகை வர "நாளைக்கு பார்க்கலாம் கதிர்" என வேகமாக நகர்ந்தாள், அவளுக்காக wait பண்ணும் சந்தோஷ் திசை நோக்கி. </p><p><br />எனக்கோ என்னடா இவள புரிஞ்சிக்கவே முடியலையே என உள்ளுக்குள்ளே நினைத்துக் கொண்டு ஒரு பெரு மூச்சோடு அங்கிருந்து நகர்ந்தேன். என்னோட நிலையையும் நான் மெல்ல உணர ஆரம்பித்தேன். அன்று மாலை பேருந்தில் நாங்கள் எப்போது பயணிக்கும் கடைசி இருக்கையில் தலை கவிழ்த்த என் மனதில் பல குழப்பங்கள் அரங்கேறத் தொடங்கியது.<br /></p></span><p><span style="color:#009900;">(தொடரும்)<br /></span><br /><span style="color:#009900;"><strong><span style="color:#660000;">அன்புடன்<br />கருணா</span><br /></strong><br /> </span></p><span style="color:#009900;"></span>கருணாhttp://www.blogger.com/profile/03487998970112799023noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1080223157021907047.post-17589390520477601352008-01-01T12:14:00.000-08:002008-01-01T12:23:34.421-08:00சுவடுகள் - IV<div align="left"><span style="color:#009900;">விடுமுறை நாட்களை ஓடத்தில் கடலைக் கடந்தவன் போல மெதுவாய் கடந்துவிட்டேன்.<br />6 வது செமஸ்டர், நானும் மனதில் பல எண்ணங்களுடனும் எதிர்பார்புகளுடனும் தொடங்கினேன். இதோ இன்று ஒரு புதியவளை உங்களுக்கு அறிமுகப்படுத்த போகிறேன் "கீதா". இவளும் எங்கள் வகுப்புதான், எங்களுடன் இருக்கும் 18 பெண்களில் அழகு கொஞ்சம் அதிகமாகவே இவளிடம் கொட்டி கிடந்தது. ஆனால் எப்போதும் தலை நிமிராமல் அவ்வளவு அடக்கமாக செல்வாள். அவளிடம் இதுவரை மூன்று பேர் தன் காதலை சொல்லி தடுக்கி வீழ்ந்திருக்கிறார்கள், அதுவும் எங்கள் department அல்லாதவர்கள். எங்கள் வகுப்பை சேர்ந்த தருண் என்றவனுடன் மட்டும் பேசி கொண்டிருப்பாள், அவன் அவளின் குடும்ப நண்பன் என்பதால். இவள் கதாபாத்திரத்தின் முக்கியம் என்னவென்றால், கீதா மீது கரனுக்கு ஒரு சிறிய கண். நாங்களும் அவனை அவளோடு இணைத்து பேசும் போது<br />மறு வார்த்தை கூற மாட்டான், உள்ளுக்குள் மட்டும் மகிழ்ச்சி வெள்ளத்தில் குதிப்பான். "டேய் மச்சான் கல்யாணம் பன்னா எப்படியும் Love பண்ணிதாண்டா கல்யாணம் பண்ணனும், அதுவும் கல்யாணம் பன்னா அந்த மாதிரி பொண்ணதான் கல்யாணம் பண்ணனும், என்ன தெய்வீகம் அவளுக்குள்ள, எல்லா பெண்களுமே அழகுதாண்டா ஆனால் அவள் அதுக்கும் கொஞ்சம் மேலடா" இது அடிக்கடி அவன் அவளைப் பற்றி கூறும் வார்த்தைகள். நாங்களும் எப்போதும் அவனை ஒட்டிக் கொண்டே இருப்போம்.<br />"ஏன்டா இவ்ளோ பேசற எங்கள எல்லாம் ஓட்ற ஆனா போய் டக்குனு உன் காதல சொல்ல வேண்டியதுதானே" என்றான் கோபு.<br />"டேய் Love சொல்றதுக்கும் கொஞ்சம் யோசிக்கனும்டா, நாம சொல்றதுல அந்த பொண்ணு எந்த எதிர் பேச்சும் பேசாம அப்படியே நம்ம வார்த்தைல விழணும், சும்மா நானும் சொல்றேன்னு சொல்லக் கூடாதுடா, அதுக்கெல்லாம் எவ்ளோ கற்பனை வச்சிருக்கேன்" என்று முடித்தான். "சரி என்ன சொல்லப் போற, எப்படி சொல்லுவ". என்றேன் நான். "அப்படியே ஒரு 50 ரோஜா, நம்ம juniors கிட்ட கொடுத்து யார் கொடுக்கறதுன்னு அவளுக்கே தெரியாம கொடுக்கணும், அதுல கடைசி ரோஜா நான் கொடுத்து என் மனசுல அவள் இருக்கறத சொல்லனும்டா" என்றான் கரன். ஆம் கரன் மனதில் அவள் சற்று அதிகமாகவே ஆட்டம் போட்டு கொடிருந்தாள். அதை கொஞ்சம் வெளியே காட்டமாட்டான். ஆனால் நாங்கள் துருவி அதை எப்படியாவது வெளியே கொண்டு வந்து விடுவோம். அன்று ஒரு நாள் அவன் கூறிய வார்த்தைகள், என்றோ அவளிடம் சொல்வதற்காக "கீதா நான் யார கல்யாணம் பண்ணாலும் சந்தோசமா இருப்பேன், ஆனா நான் உன்ன கல்யாணம் பண்ணா ரொம்ப ரொம்ப சந்தோசமா இருப்பேன், உன்னோட முடிவுக்காக நான் எவ்வளவு நாள் வேணும்னாலும் காத்திருப்பேன், உன் முடிவ நீ சொல்லு". இதை அவன் எங்களிடம் கூறும்போது எங்களுக்கு அவன் காதலை எப்படியாவது சேர்க்க வேண்டும் என்று எண்ணினோம். இவன் காதல் எங்கள் மூவரைத் தவிர வெளியே யாருக்கும் தெரியாது. எங்களுக்கு மட்டும் ஒரு அபார நம்பிக்கை இருந்தது கரன் போய் அவன் காதலை அவளிடம் கூறினால் கண்டிப்பாக அவள் ஏற்று கொள்வாள். அந்த நாட்களுக்காக நாங்களும் காத்துக் கொண்டிருந்தோம்.<br /><br />கல்லூரி திறந்து இரண்டு வாரம் சென்றும் லாவண்யா என்னிடம் பேசவில்லை. இந்த ஆண்டு எந்த labல் அவள் என்னோடு சேர்ந்து செய்ய போகிறாள் என்று யோசித்துக் கொண்டே இருப்பேன். Measurements lab னு ஒரு lab, இதில் மொத்தம் 5 பேர் ஒரு batch கு. அதில் மீண்டும் என்னோடு அவள். நான்,அவள்,கரன்,கார்த்தி மற்றும் லக்ஷ்மணன். மனதில் ஒரு மெல்லிய சந்தோசம். இந்த lab ல் எந்த சந்தேகமாக இருந்தாலும் அவள் என்னிடம் மட்டும் கேட்பாள். </span><br /><br /><span style="color:#009900;">அப்படியே வாழ்க்கை போய் கொண்டிருந்தது. எங்கள் பேச்சும் தொடர்ந்தது. எப்படா free period கிடைக்கும் என்று ஏங்கி கொண்டிருந்த நாட்களும் பல உண்டு, அவளிடம் சற்று நேர பேசலாமே என்பதற்காக. ஒரு நாள் Manufacturing Engg. lab முடித்துவிட்டு திரும்பும் வேளையில், கரன் "டேய் நான் அந்த லாவண்யா பொண்ண கொஞ்ச சத்தமா பேசிட்டேன், ஏதோ பேசிகிட்டு இருக்கறப்போ கொஞ்சம் திட்டிட்டேன் ஆனால் என் மேல எந்த தப்பும் இல்லடா அவ்ளோதாண்டா" என கூறினான். அவள் கண்ணீருடன் என்னருகே வந்தால். நான் என்ன காரணம் என்று விசாரிக்கும் முன்னரே கரன் அவளிடம் சென்று " இங்க பாரு லாவண்யா நான் உன்ன கஷ்ட பண்ணனும் திட்ல அப்படி hurt பன்னிருந்த I am sorry அவ்ளோதான்" என்று கூறிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான். நான் இருவருக்கும் இடையே நின்று கொண்டு, அவளை முதலில் சமாதானம் செய்துவிட்டு வேகமாக கரன் பின்னே ஓடினேன். "டேய் உன்னோட முகத்துக்காகதண்டா நான் sorry கேட்டதே, அவன் ஏன்டா தேவை இல்லாம என்ன பத்தி முன்னால ஒன்னு சொல்லணும் அப்பறம் பின்னால போய் வேற மாதிரி பேசணும் அது எனக்கு பிடிக்கல திட்டிட்டேன், நான் பண்ணது தப்பில்ல அவ்ளோதான்" நான் அவனிடம் என்ன காரணம் என்று கேட்காமலே கூறினான். அதன் பிறகு அவள் கரனை கண்டால் சற்று பயத்தோடுதான் பேசுவாள். "என்ன உன் friend கு அவ்வளோ கோபம் வருது, நான் ஏதோ தெரியாம பேசிட்டேன் அதுக்காக என் என்ன திட்டனும் சொல்லு" என்றாள். ஆனால் அதை பற்றி எனக்கு கேட்க விருப்பமில்லாததால் அதை அவளிடம் விசாரிக்க என் மனம் போகவில்லை. அவளும் என்னிடம் அவனைப் பற்றி தவறாக எதுவும் கூறமாட்டாள். அவர்களை சமாதானப்படுத்தி இருவரையும் என் வழிக்கு கொண்டு வருவதற்குள் நான் மிகவும் கஷ்டப் பட்டுவிட்டேன்.</span><br /><br /><span style="color:#009900;">கரன் அடிக்கடி என்னிடம் கூறுவான் "டேய் நாம மூணு பேரும் எப்பவும் ஒண்ணா இருக்கணும்டா, இதுல ஒரு பொண்ணு வந்து நமக்குள் எந்த மன கஷ்டமும் வரக்ககூடாது". கரனுக்கு அவள் மீது கொஞ்சம் சந்தேகம் எப்பவும் இருந்து கொண்டே இருந்தது, அதற்கு நான் எந்த விதத்தில் ஏமாற்றத்தை கண்டுவிடக்கூடாது என்ற ஒரு காரணமும் உண்டு.</span><br /><br /><span style="color:#009900;">அதுவரை எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்தது. எனக்கும் அவளுக்கும் உள்ள உறவு என்ன என்றே எனக்கே தெரியாமல் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. இதற்கு உலகம் சொன்ன பெயர்கள் பல.. நட்பு,காதல்,கடலை என நீண்டது. ஆனால் என் மனதிற்கும் அது என்னவென்று தெயயவில்லை. அவள் நம்மிடம் பேசினால் மட்டும் போதும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இப்படியே நாட்களை தள்ளிக் கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் கரன் என்னிடம் வந்து "மச்சான் நான் ஒன்னு கேள்வி பட்டேண்டா, பசங்களும் அப்படித்தான் சொல்ராங்கடா, லாவண்யா..லாவண்யா வந்து நம்ம class சந்தோஷ் அவன லவ் பண்ராலாம், ஆனா இது எதுவுமே நமக்கு வெளிய தெரிய மாட்டேங்குது, அப்பறம் என் அவன் உன்கிட்ட இப்படி பேசறானு தெயயல" எனக் கூறி என் மனதை சற்றே கலக்கத்தில் கரையவிட்டான். அது வரை என்ன உறவு என்று மனம் தடுமாறிக் கொண்டிருந்த வேளையில் அவள் மற்றொருவனுக்கு சொந்தமாக போகிறாள் எனத் தெரிந்ததும் மனம் குழப்பத்தில் ததும்பியது."மச்சான் நான் இத உன்னோட நல்லதுக்குத்தான் சொல்றேன், அப்பறம் நாமளும் மனசுல ரொம்ப ஆசைய வளத்துக்க கூடாதுல அதுக்குதாண்டா" என கோபுவும் கூடவே கூற நான் குறுக்கிட்டு "இல்லடா அவள் என்கிட்டே எதுவா இருந்தாலும் சொல்வாடா, ஆனால் அவங்க ரெண்டு பேரும் பேசி நாம பார்த்ததே இல்லையே". "ஆமாண்டா நாங்களும்தாண்டா பார்த்ததில்ல, அவங்க ரெண்டு பேரும் college முடிஞ்சதுக்கு அப்பறம்தான் பேச ஆரம்பிபாங்களாம், அப்பறம் every weekend பார்த்து பேசுவாங்களாம், hostel பசங்க சொல்றாங்க, நாமதான் correct time கு இங்கேர்ந்து கிளம்பிடறோம், அதான் நமக்கும் ஒண்ணும் தெரியறது இல்ல" என கோபு கூறினான். எனக்கோ ஒன்றும் விளங்கவில்லை, இதை பற்றி அவளிடம் கேட்கவும் தைரியமில்லை. </span><br /><br /><span style="color:#009900;">அதற்குப் பிறகும் அவள் என்னுடன் எப்போதும் பேசுவதையும் நிறுத்தவில்லை. அன்று வேண்டுமென்றே நான் கல்லூரி முடிந்த பிறகும் நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தேன். அன்றுதான் முதன் முதலாக அவர்கள் இருவரும் பேசுவதை நான் கண்டேன். இதை நான் நண்பர்களிடமும் கூறினேன். "டேய் எனக்கு அப்பவே தெரியும்டா, இந்த மாதிரி அழுது காரியத்த சாதிக்கற பொண்ணுங்களை நம்பக் கூடாது" என மிக கோபமாக கூறினான் கரன். "நீ பேச வேணாம்னு சொல்லல, அது இதுக்கப்பறம் நாம நம்ம limit பார்த்து நடந்துக்கணும், அவளுக்காக எவ்வளவோ நீ செஞ்சிட்ட அவ்ளோதாண்ட நான் சொல்வேன்." என்று கோபுவும் கூற நான் அவர்கள் சொல்வதிலும் அர்த்தம் இருப்பதை உணர்ந்தேன்.<br />ஆனால் அவளிடம் திடீரென பேசுவதை நிறுத்துவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.<br />ஏனென்றால் என் மனம் நான் சொல்வதை கேட்கும் நிலையில் அப்போது இல்லை. அவளும் என்னிடம் எப்போதும் போல் பேசுவாள்.<br />என்னிடம் எந்த சந்தோசத்துடன் பேசுவாளோ அதே சந்தோசம் மகிழ்ச்சி அவனிடம் பேசும்போதும். நான் அதை சற்றும் கவனிக்காமல் அப்படியே என் பாதை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். மறு நாள் அவள் என்னிடம் இதை சற்றும் காட்டிக் கொள்ளாமல் என்னிடம் எப்போது போல பேசி கொண்டிருந்தாள். அவளின் அந்த காதல் அத்தியாயத்துக்குள் நானும் தலையிட விரும்பவில்லை.</span><br /><br /><span style="color:#009900;">அவள் எப்போதும் என்னிடம் சொல்ல நினைக்கிறாளோ அன்று சொல்லட்டும் என்று விட்டுவிட்டேன். ஆனால் கரனுக்கும், கோபுவுக்கும் அவள் ஏன் இப்படி என்னிடம் சொல்லாமல் எல்லாம் செய்கிறாள் என்ற கோபம் மட்டும் இருந்து கொண்டே இருந்தது. என்னுடன் என்னதான் மணிக்கணக்கில் பேசினாலும் அதை சற்றும் கண்டு கொள்ளாமல் சந்தோஷ் அவன் வேலையை பார்த்துக் கொண்டிருப்பான். லாவண்யாவும் என்னுடன் பேசிக் கொண்டிருக்கும் போது என் நட்பை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டாள். அது நட்பு என்று நான் எனக்குள்ளே உறுதிப் படுத்திக் கொண்டேன். அதை நான் நட்பு என்று எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கும் ஒரு படி மேலாக நினைத்து நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தேன். இப்படியே நாட்கள் செல்ல செல்ல என்ன நடக்கிறது என்று எனக்கே தெரியாமல் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. அவள் ஏன் நம்மிடம் அவனைப் பற்றி பேச மறுக்கிறாள் என்ற கேள்வியையும் நான் எனக்குள்ளே பல முறை கேட்டும் என் மனது அவளிடம் பேசுவதை நிறுத்தவில்லை. 6 வது semester முடியும் தருவாயில் எங்களை final year project செய்வதற்கு இப்போதே batch பிரிக்க சொன்னார்கள். நாங்கள் ப்ராஜெக்ட் தேடும் ஆர்வத்தில் இருந்தபோதும் எனக்கும் உள்ளுக்குள்ளே அவர்களைப் பற்றித்தான் உள் மனதில் சிந்தனை வெள்ளோட்டம் விட்டுக் கொண்டிருந்தது.<br />லாவண்யா என் நட்புக்கும் சந்தோஷின் காதலுக்கும் இடையில் நாட்களை கரைத்துக் கொண்டிருந்தாள்.</span><br /><br /><span style="color:#009900;">இதன் பிறகு என் நிலை என்ன?<br />நான் எப்படி இருக்க வேண்டும் என்று என் மனம் சற்றும் யோசிக்கவில்லை. ஆனால் அவளிடம் மட்டும் பேச வேண்டும். அதை மட்டும் எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன்.</span><br /><br /><br /><strong><span style="color:#660000;">அன்புடன்<br />கருணா</span></strong></div>கருணாhttp://www.blogger.com/profile/03487998970112799023noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1080223157021907047.post-68997145472014699022007-12-31T17:42:00.000-08:002007-12-31T17:58:32.182-08:00காதலும்...கவிதையும்...<span style="color:#009900;"><strong>இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...</strong></span><br /><span style="color:#009900;"><span style="color:#000000;"></span><br />இந்த வருடத்தின் முதல் பதிவு.</span><br /><br /><br /><img id="BLOGGER_PHOTO_ID_5150320335092247154" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikmsCXuyhnLRXdE4N9K4267cPaqzjo1E1Tn70CMaDpkb1gB3TjkS8PFj9zNkxOrxIl1r7DpPfSAKlBtMZl-M8c2s6aoHM_F7XkBp9nHKJLN8Vf0IGonykNsCbcGpOJRlQBd_5U8BvOJnM/s400/tulip-flowers_9220.jpg" border="0" /><br /><span style="color:#009900;">வானில் நீலம் இருக்கும் வரை </span><br /><span style="color:#009900;">நிலவில் கறை நீங்கும் வரை </span><br /><span style="color:#009900;">கடலின் அலை ஓயும் வரை </span><br /><span style="color:#009900;">பூமி அமைதியில் நிற்கும் வரை </span><br /><span style="color:#009900;">என் நிழல் உன்னை விட்டு பிரியும்வரை </span><br /><span style="color:#009900;">விரல்கள் உன்னைப்பற்றி கவி வரைந்துகொண்டே இருக்கும்</span><br /><span style="color:#009900;">இதயம் காதல் வளர்த்துக் கொண்டே இருக்கும்...</span><br /><br /><br /><strong><span style="color:#660000;">அன்புடன்</span></strong><br /><strong><span style="color:#660000;">கருணா</span></strong>கருணாhttp://www.blogger.com/profile/03487998970112799023noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1080223157021907047.post-71824994262088425062007-12-10T04:24:00.000-08:002007-12-11T04:20:43.221-08:00சுவடுகள்-III<p><span style="color:#009900;">மூன்றாமாண்டு பிள்ளையார் சுழி போட்டுவிட்டு கணக்கை தொடங்கினோம்.</span></p><p><span style="color:#009900;">இந்த ஆண்டு கொஞ்சம் முன்னேறி நானும் கரனும் 2 ம் பெஞ்சில் இடம் பெயர்ந்தோம், அதே இரண்டாம் பெஞ்சில் கோபு, ஆனால் அடுத்த வரிசையில் பத்மஸ்ரீ ராஜாமணியோடு. ஆம் எப்போதும் அவன் தன்னை இப்படித்தான் கூறிக் கொள்வான் ராஜாமணி.இவன் தன்னை பற்றி கூறும் அனைத்தையும் தாங்கிக்கொண்டு இவனுடன் இருக்கும்போது நேரம் போவதே தெரியாது. முதல் நாள் ஒன்றும் பெரிதாக வகுப்புகள் நடக்காததால் ஒரு மேட்ச் முடித்துவிட்டு கேன்டீன் அரட்டையுடன் ஒட்டினோம். ஒரு சில நாட்கள் ஓடியது. </span></p><p><span style="color:#009900;">எனக்கும் கரனுக்கும் இருக்கும் Lab சொந்தம் தொடர்ந்தது. 5 வது செமஸ்டர் எங்களுக்கு CAD lab உண்டு, ஆனால் இங்கு இரண்டு பேர்தான் ஒரு batch க்கு. அங்கேயும் நாங்கள் இருவர்தான் என எண்ணிக்கொண்டு lab க்கு நுழைந்தோம். அந்த Lecturer உள்ளே நுழைந்ததும் ஒரு அறிமுகம் செய்துவிட்டு "யாருக்கெல்லாம் இங்க CAD ஏற்கனவே தெரியும்" என கேட்டார். இரண்டாமாண்டு விடுமுறையை சும்மா கழிக்க வேண்டாம் என்று நாங்கள் மூவர் கூட்டத்தோடு CAD class போனோம், அதில் எதோ எங்களுக்கும் கொஞ்சம் தெரியும் என்று கூற எங்களைப் போலவே ஒரு பாதி கூட்டம் கை உயர்த்தியது. உடனே அவர் "சரிப்பா CAD தெரிஞ்சவங்கலாம் தெரியாதவங்ககூட batch சேருங்க so நீங்க அவங்களுக்கு சொல்லி கொடுத்த மாதிரி இருக்கும், சீக்கிரம் excercise முடிச்சிடலாம்" என்று சொன்ன அடுத்த நொடியே லாவண்யா என்னிடம் வந்து "கதிர் நாம ரெண்டு பெரும் ஒன்னா செய்யலாமா, உனக்குத்தான் தெயரியும்ல",என்றால். அவளிடம் பேச நினைத்துக் கொண்டிடுந்த கனவுகள் மீண்டும் உயிர்த்தெழுந்தது. நான் உடனே சரி என்று சொல்லாமல், ஓரக்கண்ணில் கரனையும்,கோபுவையும் பார்த்தேன். அவர்களிடம் போய் "என்ன மச்சான் யார்கூட பண்ண போறோம்" என்றேன். "இல்லடா நான் லக்ஷ்மணன் கூட பண்ணலாம்னு இருக்கேன், கோபு வந்து கிரி கூட பண்ண போறானாம், நீ வேணும்னா நம்ம கார்த்திகூட செய்யேன்" என்றான். "இல்லடா லாவண்யா என்கூட join பண்ண என்கிட்டே கேட்டா, நான் ஒண்ணும் சொல்லல, அதான் உங்ககிட்ட..." என இழுத்தேன். "அப்பறம் என்னடா போய் jolly பண்ணுடா, Lab மட்டும் பண்ணுடா, நீயும் கோபு மாதிரி ஆகிடப்போற, அப்பறம் நான் மட்டும் தனியா மரத்துக்கிட்டதான் பேசிகிட்டு இருக்கணும்" என சொன்னான். </span></p><span style="color:#009900;"><p>என் பதிலுக்கு காத்திருந்த அவளிடம் "சரி லாவண்யா நாம 2 பெரும் சேர்ந்து பண்ணலாம்" என்று கூறி காரனுக்கு அடுத்த கணினியில் நான் அமர்ந்தேன், எனக்கு வலமாக அவள். பேச வாய்ப்பு கிடைத்தும், வெறும் பாடத்தைப் பற்றி மட்டும் பேசிவிட்டு, அவளை செய்ய சொல்லிவிட்டு, நண்பர்களுடன் அரட்டையை தொடர்ந்தேன். 3 வார lab இப்படியே போனது. அடுத்த வாரம் அதே lab ல் லாவண்யா எதோ செய்து கொண்டிருக்க , நானும் கரனும் ஏதோ அலசிக் கொண்டிருந்தோம். HOD யிடமிருந்து அவனுக்கு அழைப்பு வர அவன் அவசரமாக கிளம்பினான். அன்று கோபுவும் வரவில்லை. நான் தனியாக அவள் என்னோடு, அவளிடம் பேசலாம் என்று தோணும் ஆனால் வார்த்தைகள் கிடைக்காது. அவளிடம் ஏதோ கூறிவிட்டு அப்படியே monitorஐ பார்த்துக் கொண்டிருந்தேன். "கதிர் என்ன அப்படி பாக்கற, பார்த்து monitor off ஆகிட போகுது" என நகைத்தாள். "கதிர், ஞாபகம் இருக்க போன வருஷம் 2nd year Intro அப்போ, நான் உன்கிட்ட ஏதோ சொன்னேன், நான் என்ன சொன்னேன்னு எனக்கே மறந்து போச்சு, அதுக்கப்பறமும் ஏன் என்கிட்டே பேசவே இல்ல, நான் எதாவது உன்கிட்ட பேசலாம்னு நினைப்பேன் ஆனா நீ எதாவது தப்பா எடுத்துக்க போறேன்னு கம்முனு இருந்துட்டேன்." என சொல்லி ஒரு படி மேலே போனால் என் மனதில். "சரி இப்போவாது எதாவது பேசு, சரியா... நீ என்ன ஒரே பையனா வீட்ல.." என்றவளுக்கு "இல்ல இல்ல.. நீ" என்று வழிந்தேன் வேறு என்ன கேட்பதன்று தெரியாமல் அவளைப் பற்றி கேட்டேன். "எனக்கு ஒரு அழகான செல்ல தம்பி இருக்கான், 8th படிக்கிறான்". உடனே நான் குறுக்கிட்டு "நீ கேரளானு எல்லோரும் சொன்னாங்க அப்பறம் எப்படி தமிழ் இவ்ளோ நல்லா பேசற" என்றேன். "நான் பொறந்தது வளர்ந்ததெல்லாம் இங்கதான் திருச்சில, அப்பாவுக்கு transfer ஆனதால நான் 5th படிக்கறப்போ அங்க போய் settle ஆகிட்டோம். 11th 12th Madrasla படிச்சேன், தாத்தா வீட்ல தங்கி, இப்போ மீண்டும் hostel இன்னொரு 4 வருஷம், உனக்கெல்லாம் jolly அப்பா அம்மானு எல்லோர் கூடவே எப்போதும்" அப்படியே அந்த lab முழுவதும் நிறைய விஷயங்கள் பகிர்ந்ததில் முடிந்தது.<br />அந்த நேரத்தில் உள்ளே வந்த கரன் என்னை பிரமிப்பாய் பார்த்து அவனிடத்தில் அமர்ந்தான். அந்த Lab முடிய "Bye கதிர், நாளைக்கு பார்க்கலாம் take care"என சொல்லிவிட்டு கிளம்ப, நானும் ஏதோ சிறியதாய் கை அசைத்தேன். "என்ன போகறப்ப மறக்காம bye லாம் சொல்லிட்டு போறாங்க, ஏன்டா ஒரு 2 மணி நேரம்தானே உன்கூட இல்ல அதுக்குள்ளே என்னடா இப்படி மாறிட்ட அதுவும் என்கூட இருந்துகிட்டு" என்று விளையாட்டாய் கேட்டான். நானும் அவள் கூறியதெல்லாம் கூறினேன். அவன் "இவள் இவ்ளோ நாள் அவ ஒரு ஒமனுக்குட்டினு தானே நினச்சேன், நம்ம தமிழ் தானா, சரிடா நீ நல்லா இருந்தா அது போதும்டா எங்களுக்கு" என கூறிக்கொண்டே நாங்கள் இருவரும் பேருந்தை நோக்கி போனோம். அன்று இரவு தூக்கத்தில் அவள் நம்மிடம் பேசியதெல்லாம் ஓடிக் கொண்டே இருந்தது, அதுவும் ஒரு பெண் நம்மை பற்றி விசாரிப்பதும் நெருக்கமாய் பேசுவதும் ஒரு புது அனுபவமாய் இருந்தது. அவளிடம் மீண்டும் மீண்டும் பேச வேண்டுமென மனம் துளிர்த்துக் கொண்டே இருந்தது. அதற்குப் பிறகு ஒவ்வொரு புதன் கிழமைக்காக காத்துக் கொண்டிருந்தேன் அந்த lab வருகைக்காக. ஒவ்வொரு lab லும் எங்கள் உரையாடல் நீண்டு கொண்டே இருந்தது. அன்று lab ல் ஏதோ பேசிக் கொண்டிருக்கையில் அவள் பிறந்த நாளைப் பற்றி விசாரித்தேன். அவள் " அது ஜூலை 18 போன வாரம்தான் போச்சு" எனக் கூற எனக்கு தெரிந்திருந்தால் எதாவது present பண்ணிருக்கலாமே என நினைக்கையில், Lecturer "ஏம்பா semester exam இன்னும் 3 மாசம்தான் இருக்கு நிறைய excercise incomplete இருக்கு so இந்த saturday special lab இருக்கு" னு சொல்லிவிட்டு கிளம்பினார். எனக்கோ உள்ளுக்குள்ளே ஏதோ ஒரு மூலையில் சந்தோசம் துள்ளி குதித்தது. </p><p>சரி அவளுக்கு present எதாவது கொடுத்தால் தப்பாக எடுத்துக் கொள்ள போகிறாள் என்று எதாவது sweet வாங்கலாம் என்று கடைக்கு போய் பார்த்தேன், அங்கே இருப்பதிலே பெரிய Card+Cadburys dairy milk வாங்கினேன். அதை bag ல் பத்திரமாக ஒழித்துக் கொண்டு கல்லூரிக்கு கிளம்பினேன்.வழியில் கரனும் கோபுவும் "என்னடா மூட்டை இவ்ளோ பெருசா இருக்கு, இன்னிக்கு lab மட்டும்தானே" என்றனர். "இல்லடா சும்மா Lunch எடுத்து வந்தேன்" என தப்பித்தேன். அன்று lab ல் கொஞ்சம் பாடத்தில் மூழ்கியதால் அதை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தேன், மனதிலோ அதை எப்படி அவளிடம் கொடுப்பது என்று உள்ளுக்குள்ளே யோசித்துக் கொண்டிருந்தேன். சட்டென்று lab முடிந்தவுடன் ஏதோ அவசரமாக வேலை இருக்கிறது என்று கிளம்பி அவள் hostel நோக்கி நடக்க ஆரம்பித்தாள். "இதோ இருங்கடா ஒரு நிமிஷத்துல வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு Bag உடன் அவள் பாதையை நோக்கி நடந்தேன். </p><p>யாருமில்லா அந்த அமைதியான சாலையில் அவள் சென்று கொண்டிருக்க, பின்னால் சென்று மெல்ல லாவண்யா என்றேன். "என்ன கதிர் கிளம்பலையா" என்றாள். "என்ன இன்னிக்கு எதாவது வேலையா நீ மாட்டும் உடனே கிளம்பிட்ட" என்றேன். அவள் "இல்ல நீ உன் friends கூட ரொம்ப deep discuss பண்ணிட்டு இருக்கறப்போ disturb பண்ண வேணாம்னு உடனே கிளம்பிட்டேன்". "ஒ அப்படியா சரி நான் ஒரு gift கொடுத்தா தப்பா எடுத்துக்க மாட்டனு நினைக்கிறேன், உன்னோட birthday க்கு, அப்போ எனக்கு தெரியாது so" என சொல்லிக் கொண்டே Card+dairy milk எடுத்துக் கொடுத்தேன். அவள் எந்த தயக்கமுமில்லாமல் வாங்கிக் கொண்டு "ரொம்ப thanks கதிர்" என்று கூறி சிறிது நேரத்திற்குப் பிறகு hostel சென்றாள். அவள் செல்வதை கடைசி வரை பார்த்துவிட்டு திரும்புகையில், கரனும் கோபுவும் "என்னடா தனியா இங்க ஈ ஓட்டிகிட்டு இருக்க, அதுவும் அந்த குட்டி போகற வேலையில". "இல்லடா அந்த பொண்ணுக்கு போன வாரம் birthday வாம் அதான் ஒரு card கொஞ்சம் sweets வாங்கனேன் அத கொடுத்தேன்" என்று சொல்லி முடிப்பதற்குள் "டேய் நான் அப்பவே சொல்லல அத பார்த்த lunch bag மாதிரி தெரியல எதோ விஷயம் இருக்குன்னு நினச்சோம் சரி உன் கதை சேது மாதிரி ஆகாத இருந்த சரி தான்" என கூறினர். "இல்லடா அவன் என் friend அதான்" என இழுக்க. "டேய் நாங்களும் தான் வருஷம் வருஷம் birthday கொண்டாடறோம் ஒரு 25 காசு choclate கொடுத்திருப்பியா ஆனா அங்க Cadbury's அதுவும் extra large size ல, கோபு எனக்கென்னவோ பையன் நம்மள கூடிய சீக்கிரம் கழட்டி விட்டுடுவானு நினைக்கிறேன் நீ என்ன சொல்ற" என்றான் கரன்.</p><p>வகுப்பு வாசலில் நுழையும்போதே எனைப் பார்த்து ஒரு புன்னகையோடு போய் அமர்வாள். வகுப்புக்கு இடை இடையில் observation இடம் மாறுவதும் அவள் சந்தேகத்தை தீர்ப்பதும் என கொஞ்சம் நீண்டது இந்த பந்தம். இதற்கு பிறகு நாங்கள் பேசும் நேரமும் தன்னை நீட்டித்துக் கொண்டது. எதாவது ஒரு சிறிய சொல்லில் தொடங்கி ஒரு 100 பக்கம் தொடர்வதுபோல் உரையாடல் நீண்டது. "ஏன்டா அப்படி என்னடா பேசுவ அதுவும் வெட்டியா அந்த பொண்ணுகிட்ட" என கோபு கேட்டான். " டேய் நீ என்ன பண்ற அந்த இளவரசிக் கூட அதேதான் இவன் கொஞ்சம் விளக்கமா பேசி இருப்பான், உங்க ரெண்டு பேருகிட்டேயும் மாட்டிகிட்டு நான் நடுவுல தனியாதான் பேசனம்னு நினைக்கிறேன்" எனக் கரன் கூற அவன் பேச்சை மாற்றினான். 5 வது semester முடியும் நேரம் நாங்கள் Record, Mid semester, என கொஞ்சம் வேகமாய் பறந்தோம். தேர்வு அட்டவணையும் தயார் ஆக சற்று அதிலும் மூழ்கி இருந்தோம். அன்று கடைசித்தேர்வு நல்லபடியாக முடிந்தது அவள் என்னருகே வந்து "கதிர் நான் இன்னிக்கு ஊருக்கு கிளம்பறேன் semester leave முடிஞ்சுதான் வருவேன் ok வா, எங்க அப்பா அம்மா கூட ஜாலியா இருக்க போறேன்" என்று சொல்லிவிட்டு வேகமாய் பறந்தாள். அன்று கடைசி exam என்பதால் அனைவரும் ஒரு படத்தை முடித்துவிட்டு மாலை beach ல் பொழுதை கழித்தோம். எனக்கு எதோ ஒன்று நம்முடன் இல்லாதது போல் இருந்தது. "என்னடா அமைதியா இருக்க எதாவது தொன தொனனு பேசிட்டே இருப்பியே இப்போ என்ன கடல அமைதியா பார்த்திட்டு இருக்க" என கோபு கேட்டான்."அதெல்லாம் ஒண்ணுமில்லடா இன்னிக்கு கொஞ்சம் exam சரியா பண்ணல அதான்" என சொல்லி சமாளித்தேன். எனக்கு எப்படி இந்த ஒரு மாத காலத்தை கழிப்பது என்று தெரியாமல் இருந்தது. அந்த விடுமுறையில் எனக்கு என்னவோ மனதில் தோன்ற அன்று வலுக் கட்டாயமாக நான் இருவரையும் கல்லூரிக்கு அழைத்து சென்றேன். அங்கே நாங்கள் பேசிக் கொண்டிருந்த இடத்தை மட்டும் தனியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். அங்கே போய் எதாவது கனவு காண்பேன் எதையோ நினைத்துக்கொண்டு, பின்பு இதுவே வாடிக்கையாகிவிட்டது.</p><p>நாட்கள் மெதுவாய் நகர 6 வது semester முதல் நாளை எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன்.</p><p>(தொடரும்).... </p><p></span><br /><strong><span style="color:#660000;">என்றும் அன்புடன் </span></strong><br /><strong><span style="color:#660000;">கருணா</span></strong> </p>கருணாhttp://www.blogger.com/profile/03487998970112799023noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1080223157021907047.post-65940352767880847292007-12-10T04:18:00.000-08:002007-12-10T04:32:27.035-08:00சுவடுகள்-II<span style="color:#009900;"><br />முதல் நாள் கல்லூரி... வரப்போகும் நான்கு வருட பாதையை இன்று முதல் தொடங்க போகிறேன்.<br />கல்லூரி வாசல் நுழையும்போதே ஒரு வித பயம் கலந்த பரவசம் மனதில், அன்று முதல் நாள் என்பதால் காலையில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு அறிமுக விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அனைவரின் பெயர் வரிசை பார்த்து வகுப்பறைகள் பிரிக்கப் பட்டிருந்தது. அதனால் என் பள்ளி நண்பர்களெல்லாம் வேறு ஒரு பிரிவிற்கு நான் வேறு பிரிவிற்கு செல்ல வேண்டியதாயிற்று. என் பெயர் C section அட்டவணையில் ஒட்டியிருப்பதை பார்த்தேன். அதில் எனக்கு தெரிந்தவர்கள் எவருமில்லாமல் நீண்டு கொண்டே சென்றது. கடைசியில் என் வீட்டருகினில் இருக்கும் மற்றொரு நண்பன் பெயரும் இருந்தது. முதல் ஆண்டு எல்லோருக்கும் ஒரே பாடம் என்பதால் அனைத்து department மாணவர்களும் ஒன்றாகவே இருக்க வேண்டிய கட்டாயம். வகுப்பினில் காலடி எடுத்து வைக்கும்போது, எல்லோரும் போல அவ்வளவு சந்தோஷம் என் மனதில் இல்லை, நமக்கு இங்கே யாரையும் தெரியாது, முதல் பெஞ்சில் தெரியாத நண்பன் பக்கத்தில் நான் அமர்ந்தேன், ஆனால் அவன் என்னை சற்றும் கவனிக்காமல் அவன் பள்ளி தோழர்களிடம் மட்டுமே பேசி கொண்டிருந்தான். நான் மட்டும் தனிமையில் எதையோ யோசித்துக் கொண்டிருந்தேன். அச்சமயம் அடர்ந்து பெய்து நிற்கும் மழை சத்தத்தை போல பேச்சு சத்தம் குறைந்து கொண்டே வந்தது, Physics Lecturer உள்ளே வருகிறார்.</span><br /><br /><span style="color:#009900;">அவர் தன்னைப்பற்றி அறிமுகம் செய்து முடித்துவிட்டு, எங்களை ஒருவர் ஒருவராக விசாரித்தார். 4 ஆம் மாணவன் நான். நடுக்கத்திலே எழுந்து "I am Kathiravan, from Paul's Hr sec school and my department is Civil Engineering" கொஞ்சம் அமைதியாக சொன்னேன்.இது அந்த பாழாய்ப்போன ஆசிரியருக்கு காதில் விழவில்லை, மீண்டும் சொல் என்றார். அதை மீண்டும் அப்படியே ஒப்பித்துவிட்டு அமர்ந்தேன். அந்த நேரத்தில் அப்படியே வரும் ஒவ்வொரு ஆசிரியர்கும் அதே வாய்ப்பாட்டை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியதாயிற்று. யாரும் நம் அருகே ஒட்டி வருவதை போல் எனக்கு படவில்லை, நானாகவே சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டேன். இப்படியே முதல் நாள் போனது... அன்று மாலை வீட்டுக்கு கிளம்பலாம் என்று வெளியே வரும்போது என் பள்ளி நண்பனின் அப்பா கார் கொண்டு வந்திருப்பதாக சொன்னான். "ஏய் கதிர் வா இதுலே போயிடலாம் வழியிலே drop பண்ணிறேன்" என்று கூற நானும் சென்றேன், உள்ளே என் section சேர்ந்த மற்றொரு நண்பனும் இருந்தான். என்னை பார்த்து "நீ C section தானே sorry பேரு மறந்துபோச்சு" நானும் கதிர் .. கதிரவன் என்றேன், அவனும் "என் பேரு கரண் நான் Mechanical... ". என்று சொன்ன வேளையில் நான் இறங்குமிடம் வந்ததால் வழியிலே இறங்கினேன். அடுத்து அதிக வார்த்தைகள் பறிமாறக் கொள்ள முடியவில்லை.</span><br /><br /><span style="color:#009900;">என்னோட முதல் Lab, அதுவும் அது Chemistry lab, எல்லோரையும் 2 நபர்களாக, பிரிய சொன்னார்கள். எல்லோரும் அவரவர் நண்பர்களாய் பார்த்து சேர, நான் தனியாக நின்றேன். நான் தனி ஆளாய் நிற்பதை பார்த்து கரண் "என்ன நீ தனியா நிக்கற, உனக்கு யார் batchmate" என்றான், நான் விழித்ததை பார்த்து "நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்யலாமா "என்றான். நானும் தயக்கமில்லாமல் ஒட்டிக் கொண்டேன். அந்த Lab மட்டுமில்லாமல் Physics, Workshop என அனைத்து Lab நாங்கள் இருவரும் இணைந்தே செய்ய வாய்ப்பு கிடைத்தது. எதாவது கதை அடித்துக் கொண்டே எல்லா lab ம் சென்றது, எங்கள் இருவருக்குள் நட்பின் வேர் துளிர்க்க ஆரம்பித்தது. அவன் இருக்கும் காரணத்தால் நான் எந்த கவலையும் இல்லாமல் என் நாட்களை தள்ளி கொண்டிருந்தேன். அவன் ஆங்கிலம் ஆசிரியரையே அளரடிக்கும், அதை ஆவென்று பார்ப்பதே எங்களுக்கு வாடிக்கையாகிவிட்டது,ஆனால் அவன் நண்பர்களிடம் பேசும் விதம் அவ்வளவு அருமையாகவும், நகைச்சுவை உணர்வோடு இருக்கும். வாழ்நாள் முழுவதற்குமான நண்பன் எனக்கு கிடைத்து விட்டான் என்று அப்போதே தெரிந்து விட்டது. </span><br /><br /><span style="color:#009900;">ஒரு நாள் phusyics lab ல் நாங்கள் அரட்டையாக ஏதோ ஒரு experiment பண்ணிக் கொண்டிருக்கும் போது ஒரு பெண் " கதிரவன் உங்ககிட்ட calc இருக்கா" என்றால், யாருடா அது நம்ம பேர ஒரு பொண்ணு voice ல யாரோ கூப்பிடறாங்கனு பார்த்து "calc யா என தலை சொறிந்தேன்" எனக்கு அதற்கான அர்த்தம் புரியவில்லை, கரண் என் தலையிலே போட்டு "அதாண்டா இந்த calculator தான், அவங்க இப்படி சொல்றாங்க, கொடுடா வள்ளல் பிரபுவே" என்று நக்கலாக சொன்னான்."டேய் இங்க calc னு சொல்லுவாளுக, observation இத obsc னு எல்லாத்தையும் சுருக்கி சுருக்கி சொல்லுவாளுக இவளுக, ஆனா அவளுக பேச்ச மட்டும் சுருக்க மாட்டாளுக " என்று அந்த பெண் காதில் சத்தமாக விழும்படியே கூறினான். இதே மாதிரி பல இடத்தில் தலை சொரியவும் அவன் எனக்கு தெளிய வைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. நாட்கள் எல்லாம் வேகமாக கரைய ஆரம்பித்தன. ஒவ்வொரு நாட்களும், வாரமும்,மாதமும் கண்மூடி திறக்கும் வேளையில் முடிந்தது. 2 semester தேர்வும் முடிந்தது, முதலாண்டும் அதன் நாட்களை முடித்துக் கொண்டது.<br />2 ம் ஆண்டு வேறு இடம் வேறு நண்பர்கள், என்னுடனே இருந்த கரண் வேறு department ல் என யோசித்துக் கொண்டே சாலையில் நடந்து கொண்டிருந்த போது, கரண் வேகமாக ஓடிவந்து "மச்சான் ஒரு சந்தோசமான செய்தி group change list ஒட்டியிருக்காங்க பார்க்கலையா, உன்ன Mechanical department கு மாத்திட்டங்கடா" என்றான், "அடுத்த மூணு வருஷத்துக்கு நாம ரெண்டு பேரும் ஒன்னாத்தான் குப்பை கொட்டனும்" என நகைக்க, மனதில் மகிழ்ச்சி வெள்ளமோட, இருவரும் ஒன்றாக mechanical department போனோம். இங்கே இப்போது புது முகங்கள் புது நண்பர்கள் புது சுற்றம், இருந்தும் பல மாணவர்கள் ஏற்கனவே முதல் ஆண்டில் என்னோடு படித்தவர்களே. எந்த பயமும் இல்லாமல், சற்று அதிகமாகவே பேச ஆரம்பித்து விட்டேன். பொதுவாக Mechanical departmentl அதிகம் பெண்கள் இருக்க மாட்டார்கள், ஆனால் எங்கள் வகுப்பில் 18 பெண்கள், இது எண்ணிக்கையில் சற்று அதிகமே. என் பள்ளியிலே படித்த ஒரு பெண்ணும் இருந்தால்,ஆனால் என்னிடம் அதிகமாக பேசியதில்லை அவள். என் வீட்டருகே அவள் இருந்தாலும் கேட்ட கேள்விக்கு பதில் கூறும் அளவிற்கு இருந்தால் அவ்வளவுதான். </span><br /><br /><span style="color:#009900;">அப்போது கரண் எனக்கு இன்னொரு நல்ல தோழனை அறிமுகம் செய்தான், கோபு, அவர்கள் இருவரும் ஒரே கல்லூரி பேருந்தில் பயணம் செய்ததில் தொடங்கிய அவர்கள் நட்பு, இருவர் கூட்டணி மூவராக மாறியது. கோபு பார்ப்பதற்கு கொஞ்சம் குண்டு பையன் ஆனால் இவன் பவ்யமாக இருந்தாலும், பரம கில்லாடி பெண்களை ஓட்டுவதிலும் தன் பின்னே ஓட வைப்பதிலும். ஆனால் நம்ம கரண் பெண்களிடம் எப்போது cut n right ஆக இருப்பதாலும், அடிக்கடி அவர்களின் மூக்கை உடைப்பதாலும் இவன் பக்கம் ஒரு பெண் தொடர்ந்து 5 நிமிடம் பேசினாலே அது நாங்கள் பெரிய சாதனையாக கருதினோம். எங்கள் மூவரின் நெருக்கமும் நாளுக்கு நாள் அதிகமானது, எந்த ஒளிவு மறைவில்லாமல் ஒவ்வொருக்கொருவர் நல்ல புரிதலுடன் நட்பு தொடர்ந்தது.</span><br /><br /><span style="color:#009900;">இவர்களின் நட்பு கிடைக்க ஏதோ ஒரு ஜென்மத்தில் புண்ணியம் சத்தியமாக செய்திருக்க வேண்டும் என எண்ணினேன்.<br />நான் யாரிடமும் அதிகம் பேசாமல் எனக்கென ஒரு சிறு வட்டத்துக்குள்ளேயே என் முதல் வருடம் முழுவதியும் முடித்தேன். ஆனால் அதை தொடர என் மனம் விரும்பவில்லை, அதற்கான நல்ல சந்தர்பத்தை எதிர் பார்த்த சமயத்தில், அப்போது junior மாணவர்களுக்காக நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் என் வகுப்பு தோழர்கள்,seniors என அனைவரும் இருக்கும் கூட்டத்தில் முதன் முதாலாய் பேசினேன். senior கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சற்று நகைச்சுவையாகவும் கிண்டலுமாக பதில் சொன்னேன். அன்று நான் கலகலப்பாகப் பேசியதிலும், நகைச்சுவையாய் சில கவிதைகள் சொன்னதிலும் அனைவருக்கும் பிடித்தது. அந்த மேடையில் நிற்கும்போது நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அமைதியாக ஒரு புன்முறுவலோடு இதழ்களுக்கே வலிக்காமல் ஒருவள் சிரித்துக் கொண்டிருந்தால். லாவண்யா...என் வகுப்பு தோழி.. பேசும்போதே என் கண்கள் ஒரே திசையில் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது அவளை நோக்கி. இங்கு வந்த ஒரு மாதத்தில் மனதில் நின்றவள்.அந்த வரவேற்பு முடிந்த நேரம் அனைவரும் கலைந்து நேரம் லாவண்யா அருகே வந்து. "கதிர் நீ இப்படிலாம் கூட பேசுவியா? நீ சரியான உம்மனாமூஞ்சினுதானு நினச்சேன், உங்கிட்டேயிருந்து நான் இதெல்லாம் எதி பார்க்கவே இல்ல நல்லா பேசன keep it up " கூறிவிட்டு அடுத்த நொடியே மறைந்து ஓடினாள். எனக்கோ ஒன்றும் புரியவில்லை,எனக்கும் மீண்டும் மறு வார்த்தை கூற எதுவும் தோணவில்லை.. பல்லை இளிச்சிகிட்ட்டே ஒரு thanks சொன்னேன்.</span><br /><br /><span style="color:#009900;">அவள் வேறு யாரிடமும் பேசிகூட நான் கண்டதில்லை மனதில் ஓரமாக எங்கேயோ போய் ஏதோ ஒன்று ஒட்டிக் கொண்டது. நாட்களும் வேகமாக கரைந்தன. சற்றே என் நட்பு வட்டம் பெருகியது<br />செல்வகுமரன்,நந்தகோபால்,கார்த்திகேயன்,தட்சணாமூர்த்தி,ராஜாமணி,லக்ஷ்மிகாந்தன்,உதயா நீண்டு கொண்டே போச்சு. இவர்கள் இருக்கும்<br />இடத்தில் எங்கள் மூவரை கண்டிப்பாக பார்க்கலாம். அரட்டையுடன் சேர்ந்தே எப்போதும் ஆனந்தமாய் நாட்கள் ஓடின.<br />இளவரசி, இவள், கோபுவோட batch mate, அதனால் கோபு lab வகுப்புகளை எப்போதும் விரும்பி எதிர் பர்த்துகொண்டிருப்பான். அப்போதானே இருவரும் ஒன்றாக சேர்ந்து இருக்க முடியும். சில நேரங்களில் நாங்கள் எங்கே என்று தேட ஆரம்பித்தால் பையன் இளவரசியிடம் நாட்டு நடப்புகளை பேசி கொண்டிருப்பான் என்று நாங்களே புரிந்து கொள்வோம். எப்போதும் போல நாங்கள் 2 பேரும் lab ல் நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான், அவனாவது வாழட்டும்டா,என்று ஆசிர்வதித்து எங்கள் வேலையை பார்ப்போம்.<br />இரண்டாம் ஆண்டும் வேகமாக ஓடியது, ஓய்வில்லாமல். அவ்வப்போது எப்படியாவது நம்மிடம் முதலில் தானாக வந்து பேசிய லாவண்யாவிடம் ஒரு வார்த்தை பேச வேண்டுமென மனம் அலறிக் கொண்டே இருந்தது.அவளின் நட்பை நாட என் மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அவளை பற்றி என் பள்ளி தோழியிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். அவள் கேரளாவை சேர்ந்தவள் என்று மட்டும்தான் எனக்கு அவளிடமிருந்து தெரிந்தது. எனக்கோ ஒரே குழப்பம் "நம்மகிட்ட அன்னிக்கு நல்லா தமிழ் பேசனாலே, அப்பறம் எப்படி" என்று மண்டையை எனக்குள்ளே பிய்த்துக் கொண்டேன்.</span><br /><br /><span style="color:#009900;">இதை என் நண்பர்களிடம் கேட்டால் என்னை ஒட்டியே தள்ளி விடுவார்கள். இப்போது இருக்கும் வரிசையின் படி நான்,கரண்,லாவண்யா... என தொடர்ந்தது.. நம்ம கோபுவோட வழிய follow பண்ணலாம்னு பார்த்தா Lab ல் நான்கு நான்கு பேராக பிரித்தால் அவள் வேறொரு batch போக வேண்டியதாயிற்று. ஒரு வார்த்தை பேச வாய்ப்பே இல்லாமல் போனது.. அப்படி ஒரு அமைதியையும் அடக்கத்தையும் தன்னுள்ளே வைத்திருந்தாள்.ஆனால் எங்கு பார்த்தாலும் அவள் உண்டு அவள் வேலை உண்டு இருப்பாள். யாரிடமும் வீண் பேச்சு பேசாமல் கல்லூரி முடிந்த பின் அடுத்த நொடியே ஹாஸ்டலுக்கு பறந்து செல்வாள். மீண்டும் செமஸ்டர் தேர்வு அது இது என்று மனம் ஒரிடமில்லாமல் சிதறியதால், அதற்குப் பிறகு எனக்கும் அவளைப் பற்றி துருவ மனம் போகவில்லை.<br />யோசிக்கவும் நேரமில்லை, என் பாதையில் நடக்க ஆரம்பித்தேன்.<br />இரண்டாம் வருடமும் தன் கணக்கை முடித்துக் கொண்டது. மூன்றாம் வருடம் ஆரம்பம். ஆரம்பமே நான் எதிர் பார்க்காதது எல்லாம் நடந்தது. </span><br /><br /><span style="color:#009900;">(தொடரும்)... </span><br /><br /><strong><span style="color:#660000;">என்றும் அன்புடன் </span></strong><br /><span style="color:#009900;"><strong><span style="color:#660000;">கருணா</span></strong> </span>கருணாhttp://www.blogger.com/profile/03487998970112799023noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1080223157021907047.post-7249914457117911732007-11-19T13:20:00.000-08:002007-12-10T04:34:03.110-08:00சுவடுகள்-I<span style="color:#009900;">காலத்தை பின்னோக்கி பார்ப்பதில் இருக்கும் ஆனந்தம் வேறு எதிலும் எளிதில் கிடைக்காது..<br />எத்தனை எத்தனை இன்ப நிகழ்வுகள்<br />இனிய நினைவுகள்<br />அழியா கனவுகள்<br />அழுத அனுபவங்கள்<br />வெற்றி, தோல்வி, சிரிப்பு, கண்ணீர்,<br />குதூகலம், கவலை, ஏறுமுகம், ஏமாற்றம்,<br />இன்பம், துன்பம்,..<br />இவையனைத்தும் கலந்துதான் வாழ்க்கை..<br />இதில் இவன் மட்டும் விதி விளக்கல்ல..<br />இதோ வாழ்க்கை போகும் பாதையில் பயணித்த என் நாயகனின் பயணச்சுவடுகளை இன்று முதல் தொடங்குகிறேன்…<br /><br />அன்று 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவரப்போகிறது.<br />காலை எழுந்த முதலே ஒரே பதற்றம் மட்டும்தான் என் நெஞ்சில் ஓடிக் கொண்டிருந்தது. அன்று என் நண்பர்களுடன் நானும் மதிப்பெண்ணை பார்க்க கல்வி அலுவலகத்திற்கு அனைவரும் மிதிவண்டியில் ஒரு கூட்டமாக சென்றோம். பாஸ் ஆகிவிடுவேன் ஆனால் மதிப்பெண் தானே முக்கியம். அதை தெரிந்து கொள்ளத்தான் அன்று சுமார் 1 மணி நேர காத்திருந்த பிறகு, அந்த அலுவலக ஊழியர் நாங்கள் எழுதிக் கொடுத்த எண்களுக்கு ஒருவர் பின் ஒருவராக மதிப்பெண்களை சொல்லி கொண்டிருந்தார். அதில் என் எண் மட்டும் வரவில்லை. அதற்குள்ளே அனைத்து நண்பர்களும் மகிழ்ச்சியை கொண்டாட ஆரம்பித்துவிட எனக்கோ மனதில் நடுக்கத்துடன் பயம் அதிகமானது.<br /><br />அடுத்ததாக என் பெயர் வந்தது. "யாருப்பா இங்க கதிரவன்" என் கால்கள் விரைந்தன அவரை நோக்கி... என் மதிப்பெண்ணை பார்த்து என்னாலே என்னை நம்ப முடியவில்லை, 1138/1200 நண்பர்களை காட்டிலும் நான்தான் அதிக மதிப்பெண். சந்தோசத்தில் மிதக்க ஆரம்பித்துவிட்டேன். வழியில் சைக்கிளில் வந்த என் அண்ணனிடம் சொல்லிவிட்டு,வீட்டில் என் அப்பாவிடம் சொன்னதில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி.அவருக்கு அந்த மதிப்பெண்ணின் என் எதிர்காலத்துக்கு எவ்வளவு முக்கியம் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். பள்ளியில் ஒட்டிய பலகையைப் போய் பார்த்தால் நான் பள்ளியிலே மூன்றாமிடம், யாரும் எதிர்பார்க்காத ஒன்று ஏனென்றால் சாதரணமாக படிக்கும் இவன் இந்த இடத்தை பிடிப்பான் என்று யாரும் எதிர் பாராதது. மறக்க முடியவில்லை அந்த ஒரு தினத்தை.<br /><br />நான் இந்த ஆங்கிலம் மிரட்டும் பள்ளியில் சேர்ந்து +1 ல் நடந்த முதல் தேர்வில் எடுத்த மதிப்பெண் தேர்ச்சி மதிப்பெண்ணுக்கு சற்று கூட அவ்வளவுதான். மதிப்பெண் சான்றிதழ் வாங்குவதற்கு பள்ளிக்கு என் அப்பாவோடு சென்று வாங்கிவிட்டு வரும் வேளையில் தலைமை ஆசிரியரை பார்க்க என் அப்பா விரும்பினார். எனக்கோ அவரிடம் செல்ல சற்றே தயக்கம், அவரிடம் எப்படி ஆங்கிலத்தில் பேசி சமாளிப்பது எப்படி என்று. என் சான்றிதழை அவரிடம் அப்பா கொடுத்து, "நீங்க +1 சீட் கொடுக்க மாட்டேன்னு சொன்னீங்களே, இப்போ 3rd வந்திருக்கான்" என்று மிக்க ஆணவத்தோடு கூறினார். ஆம் நான் பத்தாம் வகுப்பு தமிழ் வழி படித்த ஒரே காரணத்துக்காக என்னை இந்த பள்ளியில் சேர்க்க முடியாது என்று அன்று அவர் சொன்னார், ஆனால் என் அப்பாவின் நண்பர் ஒருவர் சிபாரிசு செய்ததில் கிடைத்தது இந்த பள்ளியில் அனுமதி. ஆனால் அதை இப்போது நான் மறந்திருந்தாலும் என் அப்பா மறக்கவில்லை.<br /><br />எல்லாம் நல்லபடியாக முடிந்தது, அடுத்த கட்டம் எல்லா மாணவர்கள் போல இன்ஜினியரிங் ஆசை என்னையும் விடவில்லை, 12 ஆம் வகுப்பு அரையாண்டு வரை அதை பற்றி ஒரு ஆர்வமில்லாமல் இருந்த எனக்கு என் அண்ணனின் வார்த்தைகள் என்னை அந்த படிப்பை திரும்பி பார்க்க வைத்தது. நுழைவுத்தேர்வில் எவ்வளவோ என்னை தயார் படுத்தியும் என்னால் அதிகமாக மதிப்பெண் பெற முடியவில்லை. +2 மதிப்பெண் இதனுடன் சேர்த்து பார்க்கும் பொழுது நம்பிக்கை கொஞ்சம் இருந்தது.<br />எத்தனை தனியார் கல்லூரிகள் இருந்தாலும் எனக்கோ அரசு பொறியியல் கல்லூரியில் சேர்வதில்தான் தனி ஆர்வம், ஏனென்றால் அங்குதான் கல்லூரியில் படித்தவுடனே அங்கேயே சுலபமாக வேலை கிடைத்து விடுமென்று அனைவரின் சொல் கேட்டதால். என் அப்பா தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சைன்ஸ் எடுக்கலாம் என்று எவ்வளவோ சொல்லியும் நான் அரசு கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் தேர்ந்தெடுத்தேன். எனக்கு அப்போது கிடைத்ததும் அதுதான். அந்த கல்லூரியில் முதல் ஆண்டு நன்றாக படித்தால் 2 ஆம் ஆண்டு நுழையும்போது நம் மதிப்பெண் ஏற்றாற்போல் நாம் கேட்கும் துறையை அவர்கள் தருவார்கள். அந்த நம்பிக்கையில் நானும் தயக்கமில்லாமல் சேர்ந்தேன்.<br /><br />எனக்கு இங்கு படிப்பதில் கொஞ்சம் பெருமையாக இருந்தது, கூடவே என் பள்ளி நண்பர்களுக்கும் அதிலே நல்ல துறைகளில் இடம் கிடைத்தது. அவர்களும் மகிழ்ச்சியாக அவரவர் பாதையை அமைத்துக் கொண்டனர். அப்போது எங்கள் ஊரில் இன்ஜினியரிங் படித்தவர்கள் எண்ணிக்கையில் கொஞ்சம் குறைவுதான். எங்கள் வீட்டருகினில் இருக்கும் முருகன் அண்ணா, இவர் அங்கு படித்துவிட்டு நல்ல கம்பெனியில் வேலை செய்கிறார் என்று என் அண்ணனும் அப்பாவும் அடிக்கடி சொல்வார்கள். அவரை எனக்கு முன்னோடி என்று வைத்துக் கொண்டேன். பக்கத்து தெருவில் மற்றொருவர் அவ்வளவுதான் எனக்கு தெரிந்தது.<br /><br />இதோ இப்போது நானும் அந்த எண்ணிக்கையில் ஒன்றை அதிகமாக்கினேன். வாழ்க்கையில் எவ்வளவோ கனவுகளுடன் அதை எப்படியும் சாதித்துவிட முடியும் என்ற சந்தோசத்தோடு ஆரம்பித்தேன் என் கல்லூரி வாழ்க்கையை....<br /><br />முதல் நாள் கல்லூரி….<br /><br />(தொடரும்.)</span><span style="color:#006600;"> </span><br /><span style="color:#006600;"></span><br /><strong><span style="color:#663333;">என்றும் அன்புடன் </span></strong><br /><span style="color:#006600;"><strong><span style="color:#663333;">கருணா</span></strong> </span>கருணாhttp://www.blogger.com/profile/03487998970112799023noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1080223157021907047.post-81921784116259320452007-07-18T13:51:00.000-07:002007-07-18T02:10:16.765-07:00தபூசங்கரின் 'தேவதைகளின் தேவதை'<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXD-GImlmppe9rtq1ZwiA-avzW6lDMDSqLtGSxkhFFjXbn7VLzP3581_HDz6Ifp3L54WR6ApahkuaKzm-8DKjRJhqWE7kLEv-oJEB5Dljxm6-MauxM4-EFmg650l_PWhsulD9Dc1yfL_8/s1600-h/14.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5088461624245620850" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXD-GImlmppe9rtq1ZwiA-avzW6lDMDSqLtGSxkhFFjXbn7VLzP3581_HDz6Ifp3L54WR6ApahkuaKzm-8DKjRJhqWE7kLEv-oJEB5Dljxm6-MauxM4-EFmg650l_PWhsulD9Dc1yfL_8/s400/14.bmp" border="0" /></a><br /><div><span style="color:#009900;">இந்த <strong>'தேவதைகளின் தேவதை'</strong> ஆனந்தவிகடனில் வந்த </span><br /><span style="color:#009900;">கவிதைகளின் தொகுப்பு...</span><br /><span style="color:#009900;">அவற்றில் சிலவற்றை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.</span><br /><br /><strong><span style="color:#009900;">ஒரு தாய் தன் குழந்தைக்குச்</span></strong><br /><strong><span style="color:#009900;">சோறூட்டுகையில்</span></strong><br /><strong><span style="color:#009900;">நிலவைக் காட்டுவது மாதிரி</span></strong><br /><strong><span style="color:#009900;">காதல் உன்னை எனக்குக் காட்டியது</span></strong><br /><strong><span style="color:#009900;"></span></strong><br /><strong><span style="color:#009900;">எதற்காக நீ</span></strong><br /><strong><span style="color:#009900;">கஷ்டப்பட்டுக் கோலம்</span></strong><br /><strong><span style="color:#009900;">போடுகிறாய்?</span></strong><br /><strong><span style="color:#009900;">பேசாமல்</span></strong><br /><strong><span style="color:#009900;">வாசலிலேயே</span></strong><br /><strong><span style="color:#009900;">சிறிது நேரம் </span></strong><br /><strong><span style="color:#009900;">உட்கார்ந்திரு</span></strong><br /><strong><span style="color:#009900;">போதும்!</span></strong><br /><strong><span style="color:#009900;"></span></strong><br /><strong><span style="color:#009900;">நீ எப்போதும்</span></strong><br /><strong><span style="color:#009900;">தலையைக் குனிந்தே</span></strong><br /><strong><span style="color:#009900;">வெட்கப்படுவதால்</span></strong><br /><strong><span style="color:#009900;">உன் மதிப்புமிக்க</span></strong><br /><strong><span style="color:#009900;">வெட்கத்தை எல்லாம்</span></strong><br /><strong><span style="color:#009900;">இந்தப் பூமி மட்டுமே</span></strong><br /><strong><span style="color:#009900;">தரிசிக்க முடிகிறது!</span></strong><br /><strong><span style="color:#009900;">ஒரேயொரு முறை</span></strong><br /><strong><span style="color:#009900;">கொஞ்சம் உன் தலையை நிமிர்த்தி</span></strong><br /><strong><span style="color:#009900;">வெட்கப்படேன்!</span></strong><br /><strong><span style="color:#009900;">வெகுநாட்களாய்</span></strong><br /><strong><span style="color:#009900;">உன் வெட்கத்தைத் தரிசிக்கத்</span></strong><br /><strong><span style="color:#009900;">துடிக்கிறது வானம்!</span></strong><br /><strong><span style="color:#009900;"></span></strong><br /><strong><span style="color:#009900;">முனிவர்கள்</span></strong><br /><strong><span style="color:#009900;">கடவுளைப் பார்ப்பதற்காகத்</span></strong><br /><strong><span style="color:#009900;">தவம் இருக்கிறார்கள்.</span></strong><br /><strong><span style="color:#009900;">நானோ,<br />ஒரு தேவதையைப்</span></strong><br /><strong><span style="color:#009900;">பார்த்து விட்டுத்</span></strong><br /><strong><span style="color:#009900;">தவமிருக்கிறேன்.</span></strong><br /><strong><span style="color:#009900;"></span></strong><br /><strong><span style="color:#009900;">கர்ப்பக் கிரகம்</span></strong><br /><strong><span style="color:#009900;">தன்னைத் தானே</span></strong><br /><strong><span style="color:#009900;">அபிஷேகம் செய்து கொள்ளுமா</span></strong><br /><strong><span style="color:#009900;">என்ன?</span></strong><br /><strong><span style="color:#009900;">நீ சொம்பில் நீரெடுத்துத்</span></strong><br /><strong><span style="color:#009900;">தலையில் ஊற்றிக் குளித்ததைப்</span></strong><br /><strong><span style="color:#009900;">பார்த்ததிலிருந்து</span></strong><br /><strong><span style="color:#009900;">இப்படித்தான் கேட்டுக்</span></strong><br /><strong><span style="color:#009900;">கொண்டிருக்கிறேன்</span></strong><br /><strong><span style="color:#009900;">என்னை நானே!</span></strong><br /><strong><span style="color:#009900;"></span></strong><br /><strong><span style="color:#009900;">நீ யாருக்கோ செய்த</span></strong><br /><strong><span style="color:#009900;">மெளன அஞ்சலியைப்</span></strong><br /><strong><span style="color:#009900;">பார்த்ததும்...</span></strong><br /><strong><span style="color:#009900;">எனக்கும்செத்துவிடத் தோன்றியது.</span></strong><br /><strong><span style="color:#009900;"></span></strong><br /><strong><span style="color:#009900;">நான் உன்னைக்</span></strong><br /><strong><span style="color:#009900;">காதலிக்கிறேன்</span></strong><br /><strong><span style="color:#009900;">என்பதற்காக</span></strong><br /><strong><span style="color:#009900;">நீயும் என்னைக்</span></strong><br /><strong><span style="color:#009900;">காதலித்து விடாதே!</span></strong><br /><strong><span style="color:#009900;">என் கொடிய காதலை</span></strong><br /><strong><span style="color:#009900;">உன் பிஞ்சு இதயத்தால்</span></strong><br /><strong><span style="color:#009900;">தாங்க முடியாது!</span></strong><br /><strong><span style="color:#009900;"></span></strong><br /><span style="color:#009900;"></span><br /><strong><span style="color:#990000;">அன்புடன்</span></strong><br /><strong><span style="color:#990000;">கருணா</span></strong></div>கருணாhttp://www.blogger.com/profile/03487998970112799023noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1080223157021907047.post-73635040605619031552007-07-13T14:46:00.000-07:002007-07-13T03:57:05.972-07:00நீ. நான்.. காதல்...<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9nRS5Wg2XXIQccV_0mubGabbDKshwE1zl7uHYvyb5SL6iBb9WqMRujffRbyfVWwidssbJfJjVqurbulffwxJ2fYSuEmTGP9D4gkiESns67Fmzco9bGjZ3psRgPakTaGtXm0lwnQOMJa8/s1600-h/untitled.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5086630104161718370" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9nRS5Wg2XXIQccV_0mubGabbDKshwE1zl7uHYvyb5SL6iBb9WqMRujffRbyfVWwidssbJfJjVqurbulffwxJ2fYSuEmTGP9D4gkiESns67Fmzco9bGjZ3psRgPakTaGtXm0lwnQOMJa8/s400/untitled.bmp" border="0" /></a><br /><div><strong><span style="color:#009900;">கனவுக்கும் கவிதைக்கும் </span></strong></div><div><strong><span style="color:#009900;">இடையில் சற்றே கண் மூடிய சமயத்தில் </span></strong></div><div><strong><span style="color:#009900;">கமுக்கமாய் பிறந்த காதலி நீ...</span></strong></div><br /><div><strong><span style="color:#009900;">நீ உன் தாயின் வயிற்றில் </span></strong></div><div><strong><span style="color:#009900;">கருத்தரிக்கும் முன்னரே </span></strong></div><div><strong><span style="color:#009900;">என் காதல் உனக்காக கருவுற்றது...</span></strong></div><br /><div><strong><span style="color:#009900;">கவிதை காதல் </span></strong></div><div><strong><span style="color:#009900;">காவியம் ஓவியம் </span></strong></div><div><strong><span style="color:#009900;">கலை சிற்பம் </span></strong></div><div><strong><span style="color:#009900;">இவையனைத்தும் தங்கும் ஓரிடம் நீ...</span></strong></div><br /><div><strong><span style="color:#009900;"></span></strong></div><div><strong><span style="color:#009900;"></span></strong></div><div><strong><span style="color:#009900;">நீ எனை காணும் நாளெல்லாம் </span></strong></div><div><strong><span style="color:#009900;">எனக்கு கவிதை திருநாள்</span></strong></div><div><strong><span style="color:#009900;">காண மறக்கும் நாளெல்லாம் </span></strong></div><div><strong><span style="color:#009900;">காற்றில்லா வெறும் நான்...</span></strong></div><div><strong><span style="color:#009900;"></span></strong></div><div><strong><span style="color:#009900;"></span></strong></div><br /><span style="color:#009900;"><strong>விடுமுறை விரும்பாத </strong></span><br /><span style="color:#009900;"><strong>உன் வெட்கத்திடம் வீழ்ந்தது </strong></span><br /><span style="color:#009900;"><strong>என் காதல்...</strong></span><br /><br /><span style="font-size:85%;color:#663366;"><strong>அன்புடன்<br />கருணா </strong></span>கருணாhttp://www.blogger.com/profile/03487998970112799023noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1080223157021907047.post-5280569107283536962007-03-15T11:40:00.000-07:002007-03-15T03:07:38.043-07:00ஞாநியின் எழுத்துப்பிழைகள்(1)<span style="font-size:130%;color:#009900;"><strong>"மின்மினி பூச்சிகள்"</strong></span><br /><br /><span style="color:#009900;"><strong>அவளைக் காணும் ஆசையில்<br />பூமிக்கு வந்து உருமாறி திரியும்<br />நட்சத்திர கூட்டங்கள்!...</strong></span><br /><br /><span style="color:#009900;"><strong><span style="font-size:130%;">"குற்றவாளி"</span> </strong></span><br /><strong><span style="color:#009900;"></span></strong><br /><span style="color:#009900;"><strong>வனவிலங்குகள் வதைப்பு சட்டத்தின் கீழ் </strong></span><br /><span style="color:#009900;"><strong>குற்றவாளியாய் நான் இன்று! </strong></span><br /><span style="color:#009900;"><strong>உனக்கு அட்சதையாக்கி தூவ </strong></span><br /><span style="color:#009900;"><strong>சின்ன சின்ன பட்டாம்பூச்சிகளை </strong></span><br /><span style="color:#009900;"><strong>சேர்ப்பதாய் என் மீது வழக்கு!...</strong></span><br /><br /><span style="color:#009900;"><strong><span style="font-size:130%;">"விழி"</span> </strong></span><br /><span style="color:#009900;"><strong></strong></span><br /><span style="color:#009900;"><strong>அன்பே என் கண்களை சற்று உற்று நோக்கு! </strong></span><br /><span style="color:#009900;"><strong>என் இதயத்தில் குடிகொண்டிருக்கும் நீ </strong></span><br /><span style="color:#009900;"><strong>எட்டிப்பார்ப்பது தெரியும்!...</strong></span><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVCj3bChIEmiILP2ZmNAnY2w4U-eZvxfNzQrqMPeQv_9VYrnnX4R2hf_QYZ9wxV6EFvP2-BWNQ6RmJoDWr__0XuMxtNlnRNhxY_WbAMcKGGJ3SkWsPCg8xiQefBruO4qbDJr7S_A64ozw/s1600-h/girl.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5042024923513998354" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVCj3bChIEmiILP2ZmNAnY2w4U-eZvxfNzQrqMPeQv_9VYrnnX4R2hf_QYZ9wxV6EFvP2-BWNQ6RmJoDWr__0XuMxtNlnRNhxY_WbAMcKGGJ3SkWsPCg8xiQefBruO4qbDJr7S_A64ozw/s400/girl.bmp" border="0" /></a><br /><div><strong><span style="font-size:130%;color:#009900;">"விடுகதை"</span></strong></div><br /><div><strong><span style="color:#009900;">இரண்டு வானவில்</span></strong></div><div><strong><span style="color:#009900;">மத்தியில் சிகப்பு நிலா</span></strong></div><div><strong><span style="color:#009900;">இவையனைத்தும் ஒரு மூன்றாம் பிறையில்!</span></strong></div><div><strong><span style="color:#009900;">விடுகதை அல்ல!</span></strong></div><div><strong><span style="color:#009900;">அவளின் நெற்றியை சொன்னேன்!...</span></strong></div><br /><div><strong><span style="color:#009900;"></span></strong></div><div><strong><span style="font-size:130%;color:#009900;">"மயிலிறகு"</span></strong></div><div><br /><strong><span style="color:#009900;">உன் காதோரம் சுழன்றிருக்கும் </span></strong></div><div><strong><span style="color:#009900;">கார்குழலை சற்று இரவல் கொடு!</span></strong></div><div><strong><span style="color:#009900;">என் புத்தகத்தில் நான் பதுக்கி வைத்த </span></strong></div><div><strong><span style="color:#009900;">மயிலிறகை நேற்று முதல் காணவில்லை!...<br /></span></strong></div><div><strong><span style="color:#009900;"></span></strong></div><br /><div><strong><span style="color:#009900;"><span style="font-size:130%;">"முத்துக்கள்"</span> </span></strong></div><div><strong><span style="color:#009900;"><br /></div></span></strong><div><strong><span style="color:#009900;">அவளின் பல் வரிசைக்காக<br />பிரம்மன் எடுத்த முயற்சியில்<br />ஆழியில் வீசியெறியப்பட்ட எஞ்சிய கழிவுகள்!...</span></strong></div><br /><div><strong><span style="color:#009900;"></span></strong></div><br /><div><span style="color:#009900;">இவையனைத்தும் என் நண்பர் ஞாநியின் எழுத்துப்பிழைகள்<br />(படித்ததும் பிடித்தது)</span></div><div><br /><span style="color:#009900;">பிழைகள் தொடரும்....<br /></span><br /><span style="font-size:85%;color:#990000;"><strong>அன்புடன்<br />கருணா</strong></span></div>கருணாhttp://www.blogger.com/profile/03487998970112799023noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1080223157021907047.post-56937211959947342182007-03-13T06:52:00.000-07:002007-03-14T05:43:14.691-07:00காதல் கடல்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIRJ8cD3STkcDfcxxT3C4tuK1CVIg9IS1hmwEdEltnGfOdVt3pSENkgd2htR4nIhufZmDYISD6qxJcRDsbXA106SwG5QJX_BdtmfpTl73FAVwDL4HDzyoQ5-uYMSqOHtd0URazS6wFwCA/s1600-h/loosu.png"><img id="BLOGGER_PHOTO_ID_5041399962822757362" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIRJ8cD3STkcDfcxxT3C4tuK1CVIg9IS1hmwEdEltnGfOdVt3pSENkgd2htR4nIhufZmDYISD6qxJcRDsbXA106SwG5QJX_BdtmfpTl73FAVwDL4HDzyoQ5-uYMSqOHtd0URazS6wFwCA/s400/loosu.png" border="0" /></a><br /><div><strong><span style="color:#ff0000;"></span></strong></div><br /><div><strong><span style="color:#006600;"></span></strong></div><br /><div><strong><span style="color:#006600;"></span></strong></div><div><strong><span style="color:#006600;"></span></strong></div><div><strong><span style="color:#006600;"></span></strong></div><div><strong><span style="color:#006600;"></span></strong></div><div><strong><span style="font-size:85%;color:#990000;">அன்புடன்</span></strong></div><div><strong><span style="font-size:85%;color:#990000;">கருணா</span></strong></div><br /><div></div>கருணாhttp://www.blogger.com/profile/03487998970112799023noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1080223157021907047.post-78769953863129795432007-03-10T14:40:00.000-08:002007-03-10T02:37:50.428-08:00காதல் களம்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjE-KXjjwtHTu6iUXAC252ADGYDeWf3UvA99SdjuxibDOdHBIz7mavdfLS1spWIjrrFif2_JRODOafs8UwCoCatco3oLmUUQtzQSzn4-WOfW9VLnfGgXPhmRaTeqt2fPOZ1JcGGQim_FqM/s1600-h/66.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5040215071540104114" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjE-KXjjwtHTu6iUXAC252ADGYDeWf3UvA99SdjuxibDOdHBIz7mavdfLS1spWIjrrFif2_JRODOafs8UwCoCatco3oLmUUQtzQSzn4-WOfW9VLnfGgXPhmRaTeqt2fPOZ1JcGGQim_FqM/s400/66.bmp" border="0" /></a><br /><div><div><strong><span style="color:#006600;">ஒவ்வொரு இரவும் என் கண்ணாடி முன்னே </span></strong></div><div><strong><span style="color:#006600;">நான் பழகி பார்க்கிறேன்</span></strong></div><div><strong><span style="color:#006600;">என் இதயத்தில் இருப்பதை </span></strong></div><div><strong><span style="color:#006600;">எப்படி சொல்வதென்று</span></strong></div><div><strong><span style="color:#006600;">ஒவ்வொரு காலையும் </span></strong></div><div><strong><span style="color:#006600;">மகிழ்ச்சி பொங்கியிருக்கும் என் இதயத்தோடு </span></strong></div><div><strong><span style="color:#006600;">போருக்கு என்னை ஆயத்தப்படுத்துகிறேன்...</span></strong></div><div><strong><span style="color:#006600;">என் போர் </span></strong></div><div><strong><span style="color:#006600;">"என் இனியவளுக்கு எப்படி என் காதலை சொல்வதென்று"</span></strong></div><div><strong><span style="color:#006600;">ஆனால் நீ என் முன்னெ வரும் நேரம் </span></strong></div><div><strong><span style="color:#006600;">வார்த்தைகள் தொலைந்து போகிறது!...</span></strong></div><div><strong><span style="color:#006600;">உன் முகத்தைப் பார்த்து </span></strong></div><div><strong><span style="color:#006600;">என் கண்கள் சிலையாகிறது!...</span></strong></div><div><strong><span style="color:#006600;">முகத்தை கண்ட பிறகு </span></strong></div><div><strong><span style="color:#006600;">எப்படி சொல்லாமல் இருப்பது சொல்...</span></strong></div><div><strong><span style="color:#006600;">இதோ சொல்லப்போகிறேன்</span></strong></div><div><strong><span style="color:#006600;">"நீதான் என் முழு உலகம்" </span></strong></div><div><strong><span style="color:#006600;">உன் புன்னகையில் என்னை மறந்தேன்</span></strong></div><div><strong><span style="color:#006600;">அதனால் மீண்டும் தோல்வியே!...</span></strong></div><div><strong><span style="color:#006600;">மனதினில் சுகமான, சுமையான ஏக்கங்கள்<br />சுமையானது </span></strong></div><div><strong><span style="color:#006600;">"மீண்டும் என் காதலை சொல்ல தோற்றுவிட்டேன்"</span></strong></div><div><strong><span style="color:#006600;">சுகமானது </span></strong></div><div><strong><span style="color:#006600;">"உன்போல் அழகான தேவதையிடம் தோற்றதினால்"</span></strong></div><div><strong><span style="color:#006600;">என் மனம் உடையவில்லை</span></strong></div><div><strong><span style="color:#006600;">வெற்றிபெறும் வரை போர் தொடுப்பேன்</span></strong></div><div><strong><span style="color:#006600;">தோல்வியில் வீழ்ந்திடமாட்டேன்</span></strong></div><div><strong><span style="color:#006600;">இனியவளே என்னை ஒருமுறை வெற்றிபெறவிடு,</span></strong></div><div><strong><span style="color:#006600;">அதன்பின் நீ சொன்னால் அனைத்தையும் விட்டுக்கொடுத்துவிடுவேன்....</span></strong></div><br /><div><strong><span style="color:#006600;">"உன்னைத்தவிர"</span></strong></div><br /><div><strong><span style="color:#006600;"></span></strong></div><div><span style="font-size:85%;color:#990000;"><strong>அன்புடன்</strong></span></div><div><span style="font-size:85%;color:#990000;"><strong>கருணா</strong></span></div><br /><div></div></div>கருணாhttp://www.blogger.com/profile/03487998970112799023noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1080223157021907047.post-16999712667827679092007-03-10T10:20:00.001-08:002007-03-12T05:10:11.529-07:00ஏற்றமும் இறக்கமும்...<span style="color:#006600;"><strong><span style="font-size:130%;">ஏற்றம்.....</span> </strong></span><br /><span style="color:#006600;"><strong></strong></span><br /><span style="color:#006600;"><strong>கவிதை எழுத பேனா தேவையில்லை </strong></span><br /><span style="color:#006600;"><strong>காதலியும் கற்பனையும் போதும்... </strong></span><br /><span style="color:#006600;"><strong></strong></span><br /><span style="color:#006600;"><strong>இரவும் நிலவும் </strong></span><br /><span style="color:#006600;"><strong>கடலும் அலையும் </strong></span><br /><span style="color:#006600;"><strong>கல்லும் கலையும் </strong></span><br /><span style="color:#006600;"><strong>காதலும் கற்பனையும் </strong></span><br /><span style="color:#006600;"><strong>பூக்களும் மென்மையும் </strong></span><br /><span style="color:#006600;"><strong>அடுத்தென்ன நீயும் </strong></span><br /><span style="color:#006600;"><strong>என் கவிதையும்தான்.... </strong></span><br /><span style="color:#006600;"><strong></strong></span><br /><span style="color:#006600;"><strong>எல்லோரும் சொல்கிறார்கள் தூக்கத்தில் </strong></span><br /><span style="color:#006600;"><strong>நான் உளறுகிறேன் என்று அவர்களுக்கு </strong></span><br /><span style="color:#006600;"><strong>எப்படி தெரியும் தூக்கதிலும் </strong></span><br /><span style="color:#006600;"><strong>நான் உன்னை கவி பாடுகிறேன் என்று..... </strong></span><br /><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEga1ar4_j2pwCkcmG7yKmQaE9XnhBxLfOsXMEWV743ySL9GtXRLU0ag67bNpsjDFwtDLPUCK48yU-7YFrC7t_jbmG8WcXDZ2FIQkOzEvjCW8egXcKzlGO5feiBNJsPc0WCfjhpPwU_c99A/s1600-h/55.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5040895982770310114" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEga1ar4_j2pwCkcmG7yKmQaE9XnhBxLfOsXMEWV743ySL9GtXRLU0ag67bNpsjDFwtDLPUCK48yU-7YFrC7t_jbmG8WcXDZ2FIQkOzEvjCW8egXcKzlGO5feiBNJsPc0WCfjhpPwU_c99A/s400/55.JPG" border="0" /></a><br /><div><div><strong><span style="font-size:130%;color:#006600;">......இறக்கம்</span></strong></div><div><br /><strong><span style="color:#006600;">அவள் கப்பல்விட்டு விளையாடுகிறாள்</span></strong></div><div><strong><span style="color:#006600;">கடலில் இல்லை என் கண்ணீரில்....</span></strong><strong><span style="color:#006600;"><br /></div></span></strong><br /><div><strong><span style="color:#006600;">என் இதயக்கண்ணாடியில்<br />உன் பிம்பத்தை பார் என்றேன்<br />கல்லெறிந்துவிட்டு சென்றாய்....... </span></strong></div><div><strong><span style="color:#006600;"></span></strong><br /></div><div><strong><span style="color:#006600;">நான் இறந்ததற்கு அவள் மெளன அஞ்சலி </span></strong><br /></div><div><strong><span style="color:#006600;">செலுத்தினாள் </span></strong><strong><span style="color:#006600;">ஆனால் அவளுக்கு தெரியாது </span></strong><br /></div><div><strong><span style="color:#006600;">நான் இறந்ததற்கு </span></strong><strong><span style="color:#006600;">அவள் மெளனம் தான் காரணம் என்று... </span></strong></div><div><br /></div><div><span style="color:#990000;">தொடரும்</span><br /></div><br /><div><strong><span style="color:#990000;">அன்புடன்<br />கருணா</span></strong></div></div>கருணாhttp://www.blogger.com/profile/03487998970112799023noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1080223157021907047.post-47433569989884136192007-03-08T04:17:00.000-08:002007-03-08T23:37:32.047-08:00என் கல்லூரியின் சிற்பங்கள்...<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAaGv2ZcsnmmuSe89uSYyO-FxEatSzf4xUrqoFe4GyxyWKPkjpBtqjl8ZKZOWuTX_-IQ8C1Rf7vmxVYfhYK6v5u34A2bKchQVOU-CliSj6LbrvkjD5vSShY7tHKz0P5d-5pPHss5aXiT0/s1600-h/adblock_straightview.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5039538122544566130" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAaGv2ZcsnmmuSe89uSYyO-FxEatSzf4xUrqoFe4GyxyWKPkjpBtqjl8ZKZOWuTX_-IQ8C1Rf7vmxVYfhYK6v5u34A2bKchQVOU-CliSj6LbrvkjD5vSShY7tHKz0P5d-5pPHss5aXiT0/s400/adblock_straightview.jpg" border="0" /></a><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgK9h-WEPzUEOJSNF2fcXA1AGC6ZgCF3ciSbba6MZi_imWk9Y_NFWUlTKa19HV6fJbeNMajKuJCzinMTbRFf4FFnsVUvPr7FeU06GQgPsGDQ5qtdhqhXVB6zvLSvSuO-XIFAQjapDB7go/s1600-h/adblock_beachview.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5039537985105612642" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgK9h-WEPzUEOJSNF2fcXA1AGC6ZgCF3ciSbba6MZi_imWk9Y_NFWUlTKa19HV6fJbeNMajKuJCzinMTbRFf4FFnsVUvPr7FeU06GQgPsGDQ5qtdhqhXVB6zvLSvSuO-XIFAQjapDB7go/s400/adblock_beachview.jpg" border="0" /></a><br /><div><span style="color:#990000;">உங்களுக்காக புதுவை பொறியியல் கல்லூரியின் புகைப்படங்கள்......</span></div><div><span style="color:#990000;">மீண்டும் அழகிய நினைவுகளை திரும்பி பார்க்கிறேன்.</span></div><div><span style="color:#990000;"></span></div><div><span style="color:#990000;">எத்தனை இனிமையான காலம் அது.... </span></div><div><span style="color:#990000;">நினைத்தாலே மனதில் ஆராவாரம்...</span></div><br /><div><span style="color:#990000;">நான்கு வருடங்களை நான்கு நிமிடங்களில் கழித்துவிட்டோம்.....</span></div><div></div><div><strong><span style="color:#009900;"></span></strong></div></div><div><br /></div><div><strong><span style="color:#006600;">"காலை கண் விழிப்பதில் தாமதம்,</span></strong></div><div><strong><span style="color:#006600;">கொஞ்சம் உணவு, </span></strong></div><div><strong><span style="color:#006600;">பேருந்தில் பெண்கள்,</span></strong></div><div><strong><span style="color:#006600;">படிக்கட்டில் பயணம், </span></strong></div><div><strong><span style="color:#006600;">அவ்வப்போது வருகைப்பதிவும் வகுப்பறையும், </span></strong></div><div><strong><span style="color:#006600;">பகிர்ந்தே உணவுகள், </span></strong></div><div><strong><span style="color:#006600;">பல காதல் முன்மொழிதல்,</span></strong></div><div><strong><span style="color:#006600;">கல்லூரி முடிந்தும் அரட்டைகள், </span></strong></div><div><strong><span style="color:#006600;">மறந்துவிடும் பகைகள்,</span></strong></div><div><strong><span style="color:#006600;">எப்போதும் நண்பர்கள் கூட்டம்,</span></strong></div><div><strong><span style="color:#006600;">தேர்விற்கு முன் சின்ன சின்ன துண்டு சீட்டுகள்,</span></strong></div><div><strong><span style="color:#006600;">அதிக மதிப்பெண் எட்டாக்கனி, </span></strong></div><div><strong><span style="color:#006600;">தேர்வில் தோல்வி பெருமிதம்,</span></strong></div><div><strong><span style="color:#006600;">விடுமுறைக்கு பின் முதல் நாள், </span></strong></div><div><strong><span style="color:#006600;">வகுப்பறையில் நாமில்லாமல் ஆசான், </span></strong></div><div><strong><span style="color:#006600;">வெள்ளிதோறும் திரையரங்கம், </span></strong></div><div><strong><span style="color:#006600;">கண்ணீருடன் பிரிவு உபச்சாரம்....</span></strong></div><div><strong><span style="color:#006600;"></span></strong></div><br /><div><br /></div><div><strong><span style="color:#006600;">கல்லூரி வாழ்க்கை - சொர்க்கம்</span></strong></div><div><strong><span style="color:#006600;"></span></strong></div><div><strong><span style="color:#006600;"></span></strong></div><div><strong><span style="color:#006600;"></span></strong></div><div><strong><span style="color:#006600;"></span></strong></div><div><strong><span style="color:#006600;"></span></strong></div><div><strong><span style="color:#006600;"></span></strong></div><div><span style="font-size:85%;color:#990000;">இன்னும் தொடரும்</span></div><div></div><div></div><div></div><div></div><div></div><div></div><div><strong><span style="font-size:85%;color:#990000;"></span></strong></div><div><strong><span style="font-size:85%;color:#990000;"></span></strong></div><div><strong><span style="font-size:85%;color:#990000;">அன்புடன் </span></strong><strong><span style="font-size:85%;color:#990000;"><br />கருணா</span></strong></div><div></div>கருணாhttp://www.blogger.com/profile/03487998970112799023noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1080223157021907047.post-45256682041497627722007-03-08T00:17:00.000-08:002007-03-08T05:41:27.494-08:00இன்று தோண்டி எடுக்கப்பட்டவை...<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6o9BRp0IyiZunjAP482H02UZ2-fLuG1V3nFBabjM9Xqg1SdTXFcehusftUOMMKU7eZ-A-ArMToyegGQlBwA0qrf249L7DmII5R8NMLMZq0tPdjLP5SJ7LXQHfzkamdWyVfTRZ3W7sB_A/s1600-h/mine2.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5039467852584636146" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6o9BRp0IyiZunjAP482H02UZ2-fLuG1V3nFBabjM9Xqg1SdTXFcehusftUOMMKU7eZ-A-ArMToyegGQlBwA0qrf249L7DmII5R8NMLMZq0tPdjLP5SJ7LXQHfzkamdWyVfTRZ3W7sB_A/s320/mine2.bmp" border="0" /></a><br /><div><br /><span style="font-size:85%;color:#990000;">கவிதையை ரசித்த </span></div><div><span style="font-size:85%;color:#990000;">என்னுள் இருந்த கவிஞன் </span></div><div><span style="font-size:85%;color:#990000;">இன்று எழுத தொடங்குகிறான்<br />சில படைப்புகள் நான் (சொந்தமாய்) கிறுக்கியவை......</span></div><br /><div><br /><strong><span style="color:#006600;">"நானும் இன்று முதல் கவிஞன் ஆகிறேன்<br />உன் காதல் அரங்கேற்றத்தால்..."</span></strong></div><br /><div><br /><strong><span style="color:#006600;">"உன்னை எண்ணியே<br />என் காதல் கவிதையாகிறது....."</span></strong></div><br /><div><br /><strong><span style="color:#006600;">"என் இதய அறையில் முழு உலகம்<br />அது நீ....."</span></strong></div><br /><div><br /><strong><span style="color:#006600;">"பிரிவு என்பதன் பொருள்<br />உன்னை பிரிந்த பின்புதான் தெரிந்தது....."</span></strong></div><br /><div><br /><strong><span style="color:#006600;">"பிறவிபயன் அடைந்தேன்<br />ஆம் உன் காதல் பயன் அடைந்ததால்...."</span></strong></div><br /><div><br /><strong><span style="color:#006600;">"கனவுக்கும் கவிதைக்கும் இடையில் ஒரு வானவில்<br />என் வாழ்க்கையின் ஒரு வார்த்தை சொல்...."</span></strong></div><br /><div><br /><strong><span style="color:#006600;">"என் தோட்டத்தில் பூக்களை காணவில்லை...<br />யாவும் உன் வீட்டு வாசலில் வாசமிட்டிருக்கின்றன.....<br />உன் புன்னகையில் கண் விழிக்க....."</span></strong></div><br /><div><br /><strong><span style="color:#006600;">"கவிதையை மட்டும்தான் காதலிக்க நினைத்தேன்<br />ஆனால் காதலியே ஒரு கவிதையாக என்னிடம்....."</span></strong></div><br /><div><br /><strong><span style="color:#006600;">"யார் சொன்னது கனவுகள் பலிக்காதென்று....<br />இதோ என் காதல்(லி) ஒரு சாட்சி....."</span></strong></div><br /><div><br /><strong><span style="color:#006600;">"என் கவிதைகளுக்கு சொற்கள் வேண்டாம்<br />சொப்பனம் போதும்....."</span></strong></div><br /><div><br /><strong><span style="color:#006600;">"அழுதுகொண்டிருப்பேன் என்கிறாய் நான் வந்து அணைக்கும் வரை...<br />உன்னை அணைப்பதா !!!<br />அள்ளி கொஞ்சுவதா !!!"</span></strong></div><br /><div><br /><strong><span style="color:#006600;">"உனக்கும் எனக்கும் நடக்கும் சண்டையில் நீ வென்றுவிடுகிறாய்<br />உன் அரை நொடி முத்தத்தால்....."</span></strong></div><br /><div><br /><strong><span style="color:#006600;">"காதலி முத்தம்,<br />அடுத்த தழுவல்,<br />கண்ணில் தூண்டில்,<br />சேர்ந்தே உதடுகள்,<br />செலவாகும் முத்தங்கள்,<br />காலையில் அவள் முகம்,<br />கவிதையில் அவள் பெயர்......<br />யோசிக்கும் வேளையில்<br />கலைந்தது கனவு"</span></strong></div><br /><div><br /><br /><span style="color:#009900;"><span style="color:#990000;">இவையாவும் இன்று தோண்டி எடுக்கப்பட்டவை...<br />இன்னும் தொடரும்<br />உங்கள் கருத்துக்களை வரவேற்கின்றேன்</span> </span></div><br /><div><br /><strong><span style="font-size:85%;color:#990000;">அன்புடன்<br />கருணா</span></strong></div>கருணாhttp://www.blogger.com/profile/03487998970112799023noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1080223157021907047.post-69769918608590393182007-03-07T23:30:00.000-08:002007-03-10T02:21:51.915-08:00கருவறையில் தொடங்கியது ...<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjN1-DFtMM7FONSlXN6EfxuBVFR-LOzhfCLyNriaB56eejKqhngRj5iYZEYpGojzZOZnSIcwcvmrJpMkCkx8NKuZ-red_pfAwc8zrw1CE2YdDDVss_ObWPDBqSWUQKVsBjeClFRg9txvlo/s1600-h/1.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5040238698155199442" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjN1-DFtMM7FONSlXN6EfxuBVFR-LOzhfCLyNriaB56eejKqhngRj5iYZEYpGojzZOZnSIcwcvmrJpMkCkx8NKuZ-red_pfAwc8zrw1CE2YdDDVss_ObWPDBqSWUQKVsBjeClFRg9txvlo/s400/1.bmp" border="0" /></a><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEqfIJIzN21hrzC3xbk0tWlLgJNGt0O5DlrALn07xPPzCtE4CyDziI47iu9-CYDsILNPZFFsVhDOB4uajHzHftddhsOnsf6SVTVCgtdwo1tQWZAIrZe6aluia5yxC-1IHVLtK1M8TRV8g/s1600-h/2.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5040238603665918914" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEqfIJIzN21hrzC3xbk0tWlLgJNGt0O5DlrALn07xPPzCtE4CyDziI47iu9-CYDsILNPZFFsVhDOB4uajHzHftddhsOnsf6SVTVCgtdwo1tQWZAIrZe6aluia5yxC-1IHVLtK1M8TRV8g/s400/2.bmp" border="0" /></a><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1Q5JOnAo96rYSnPopovM-BpQg8a3zE4634VKUOwkQSmTptZDs2UWBd3yGq81Cfji4qMcsIuJfp3o4RAB0UG7T_TIQuXCXWfcy656hH1SrDazeY09fgJ-MPgzBdXHRFjY-WaH4zsQY-_s/s1600-h/1.bmp"></a><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5hrpojfsJS204DBDGsPDIce8Sd0GpUkozcdiVb1kN38rVgJnXuOwwmOD3HA4DIRjC5FvK8DmLdf10g-V23n5tYT8xIC_4yeY9vAfo3viiSMObO37T536uZ8MnAExBkzgUhZGfiZ7w-EI/s1600-h/2.bmp"></a><span style="color:#009900;">(படக்கவிதை படித்ததில் பிடித்தது)</span><br /><div><div><div><div><div><div><span style="color:#009900;"></span></div><div><span style="color:#009900;">"அம்மா என்றொரு தெய்வம் என் முன்னே தினமும்....</span></div><div><span style="color:#009900;">தொழுவாமல் இருக்காது மனமும்..."</span></div><br /><div><span style="color:#009900;"></span></div><div><span style="font-size:85%;color:#990000;"><strong>அன்புடன்</strong></span></div><div><span style="font-size:85%;color:#990000;"><strong>கருணா</strong></span><br /></div></div></div></div></div></div></div></div>கருணாhttp://www.blogger.com/profile/03487998970112799023noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1080223157021907047.post-65764093826081246102007-03-07T23:00:00.000-08:002007-03-08T03:44:28.825-08:00இதோ என் முதல் பதிவு...<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0kLP5nh4-DDonLvb5D6i-JMbk9ZBB5hNE25Y8miMdUF-kP6f3-LZ968P3RQNc6KDnyrAxpm71Mcu_KQHOAa3TrQmJCfcMmuc68pn3HTp129oLgJFNAdXzX8gPtTkC82JfrWQuSBxlm5s/s1600-h/mine.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5039455710712090338" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0kLP5nh4-DDonLvb5D6i-JMbk9ZBB5hNE25Y8miMdUF-kP6f3-LZ968P3RQNc6KDnyrAxpm71Mcu_KQHOAa3TrQmJCfcMmuc68pn3HTp129oLgJFNAdXzX8gPtTkC82JfrWQuSBxlm5s/s320/mine.bmp" border="0" /></a><br /><div><span style="color:#006600;"><strong>இதோ என் முதல் பதிவு.....</strong><br /><br /><strong>இன்று முதல் நானும் எழுத தொடங்கிவிட்டேன்...</strong><br /><strong>என்னையும் ஏற்று கொள்ளுங்கள்...</strong><br /><strong>உங்கள் கற்பனைகளை கவிதைகளுடன் நான் சொல்வேன்.....</strong></span><br /><br /><span style="font-family:arial;font-size:85%;color:#993300;"><strong>நன்றியுடன் </strong></span><br /><span style="font-family:arial;font-size:85%;color:#993300;"><strong>கருணா</strong></span></div>கருணாhttp://www.blogger.com/profile/03487998970112799023noreply@blogger.com1