Friday, July 13, 2007

நீ. நான்.. காதல்...


கனவுக்கும் கவிதைக்கும்
இடையில் சற்றே கண் மூடிய சமயத்தில்
கமுக்கமாய் பிறந்த காதலி நீ...

நீ உன் தாயின் வயிற்றில்
கருத்தரிக்கும் முன்னரே
என் காதல் உனக்காக கருவுற்றது...

கவிதை காதல்
காவியம் ஓவியம்
கலை சிற்பம்
இவையனைத்தும் தங்கும் ஓரிடம் நீ...

நீ எனை காணும் நாளெல்லாம்
எனக்கு கவிதை திருநாள்
காண மறக்கும் நாளெல்லாம்
காற்றில்லா வெறும் நான்...

விடுமுறை விரும்பாத
உன் வெட்கத்திடம் வீழ்ந்தது
என் காதல்...

அன்புடன்
கருணா