Saturday, March 10, 2007

ஏற்றமும் இறக்கமும்...

ஏற்றம்.....

கவிதை எழுத பேனா தேவையில்லை
காதலியும் கற்பனையும் போதும்...

இரவும் நிலவும்
கடலும் அலையும்
கல்லும் கலையும்
காதலும் கற்பனையும்
பூக்களும் மென்மையும்
அடுத்தென்ன நீயும்
என் கவிதையும்தான்....

எல்லோரும் சொல்கிறார்கள் தூக்கத்தில்
நான் உளறுகிறேன் என்று அவர்களுக்கு
எப்படி தெரியும் தூக்கதிலும்
நான் உன்னை கவி பாடுகிறேன் என்று.....



......இறக்கம்

அவள் கப்பல்விட்டு விளையாடுகிறாள்
கடலில் இல்லை என் கண்ணீரில்....

என் இதயக்கண்ணாடியில்
உன் பிம்பத்தை பார் என்றேன்
கல்லெறிந்துவிட்டு சென்றாய்.......

நான் இறந்ததற்கு அவள் மெளன அஞ்சலி
செலுத்தினாள் ஆனால் அவளுக்கு தெரியாது
நான் இறந்ததற்கு அவள் மெளனம் தான் காரணம் என்று...

தொடரும்

அன்புடன்
கருணா

1 comment: