Saturday, March 08, 2008
முத்தச்சாரல்....
ஓர் இரவில் கொடுக்க ஆசைதான்
என்ன செய்ய இருப்பது இதழ் இரண்டுதானே.....
நீ கோபப்படுவதெல்லாம்
என் முத்தப்பரிசை பெறத்தான் என
உன் பொய்க் கோபம் என்னிடம் உண்மை சொன்னது...
கட்டியணைத்து கொடுக்கும் முத்தத்தை விட
கட்டளையிட்டு நீ வாங்கும் முத்தம்
உன் மொத்தத்தையும் சொல்கிறது......
இடைவெளியில்லாமல்
இதழ் வலியில்லாமல்
இரு ஜோடி இதழ்களால்
ஒரு கோடி கவிதைகள் வரைவோம் வா...
நீயும் நானும் சேர்ந்து கொடுக்கும் முத்தத்தை
என்னவென்று சொல்வது
கொடுக்கும் முத்தமா?
வாங்கும் முத்தமா?
இல்லை நிசப்த யுத்தமா.....
உன் ஒவ்வொரு முத்தத்தால் ஒரு ஆயுள் அதிகமாகுமென
இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவன் நான்.
இப்போது என் ஆயுள் உன் இதழில்....
இதழ் ரசம் இவள் வசம்
அது என் மீது வழிந்தால் ஆவேன் பரவசம்....
உனக்கும் எனக்கும் அப்படி என்ன பெரிய சண்டை
இப்படி முட்டி மோதிக் கொள்கின்றன நம் உதடுகள்
இதற்குப் பேர்தான் முத்தப்போரோ?
அன்புடன்
கருணா
Wednesday, February 13, 2008
காதல் வரிகள்

அங்கிருந்த புற்கள் அனைத்தும் வாடியது வாசகத்தைக்கண்டு
உன் பாதம் அதன் மீது படாததால்..."
"நீ கிளம்பி வீட்டைவிட்டு வெளிவரும் முன்னரே
காற்றெல்லாம் தன்னை அழகுபடுத்திக்கொண்டு
உனக்காக விழி வைத்துக் காத்துக் கிடக்கின்றன
உன் பூ முகத்தை முத்தமிட..."
"காதலும் கவிதையும் சண்டையிட்டுக் கொள்கின்றன
உன்னை நான் முதலில் எதைக்கொண்டு வர்ணிப்பேன் என்று..."
"உன் தோட்டத்தில் ரோஜாக்கள் அனைத்தும் மயங்கி கிடக்கின்றன
காலை உன்னைப் பார்த்து பூத்த மயக்கத்தில்..."
"நீ கைதொட்டு பறித்து வைத்துக்கொண்ட ஒரு மலர்,
ஏளனமாக என்னைப் பார்த்து சிரிக்கின்றது
உனை தீண்டிய இன்பத்தில்...."
"காதலுக்குள் காதல்"
இதை இப்படி சொன்னால் என்ன..
"உனக்குள் நான்"
"கவிதையில் அடங்கிவிடுகிறாய்
உன் காதலில் எனை அடக்கி சிரிக்கிறாய்..."
"நாளை உலகத்தின் கடைசி நாள்
என்றாலும் கவலை இல்லை
இன்று உனை கண்டு என் காதலை சொன்னால்..."
அன்புடன்
கருணா
Wednesday, February 06, 2008
சுவடுகள்-V
தேர்வுகள் முடிந்த நேரம், மனதில் எந்த கவலையும் இல்லாமல் அரட்டையோடு பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தோம்.
எப்போது இறுதி வருட வகுப்பில் காலடி வைப்போம் என்ற கனவுடனே நாட்கள் ஓடியது. மூன்றாமாண்டு முடிந்த நேரமே அனைவரும் CampusI Interview, இதற்கு தங்களை தயார் படுத்திக்கொண்டார்கள். பூவோடு சேர்ந்து நாரும் மணப்பது போல, நானும் கரண் உடன் சேர்ந்து அதற்காக ஏதோ படிக்க ஆரம்பித்தேன். எனக்கும் எப்படியாவது கல்லூரி முடியும் முன்னரே ஒரு வேலை வாங்கி விட வேண்டும் என்ற கனவு மட்டும் கண்களில் தவழ்ந்து கொண்டே இருந்தது. இவையெல்லாம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, எதை பற்றியும் கவலைப்படாதா ஒரு கூட்டமும் ஒன்று உண்டு. சந்தோஷ்தான் இதன் தலைவன். இவன் படிப்பில் கொஞ்சம் கெட்டிக்காரன்.அந்த கூட்டத்திற்கு வேண்டுமானால் எந்த கவலையும் இல்லாமல் இருக்கலாம்.ஆனால் சந்தோஷின் நிலை அவனுக்கு தெரியும்.
ஆனால் அவன் எப்போதும் எங்கள் வகுப்பின் மீது ஒரு வெறுப்பாகவே இருப்பான், அதன் காரணம் என்னவென்று எங்களுக்கு கேட்க விருப்பமில்லை. எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பது பிடிக்கும், ஆனால் எல்லோரிடமும் அதுமாதிரி இருக்க விரும்பமாட்டான். எங்களிடம் கொஞ்சம் உரிமை அதிகமாக எடுத்துக்கொண்டே பேசுவான் எந்த பாரபட்சமும் இல்லாமல். அவனக்கு எங்கள் வகுப்பு மீது இருக்கும் கோபம் என்னவென்று தெரியும், காரணம் அவன் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு வகுப்பில் நடந்த CR தேர்வில், ஜெயித்து விடலாம் என்ற நம்பிக்கையில் நின்ற அவனால் வெற்றி பெற முடியவில்லை, இரண்டு முறையும் அவன் பெற்றது சில வாக்குகளே. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம், அவன் ஒட்டி ஒட்டாமல் மற்ற நண்பர்களோடு இருப்பதற்கு. எங்களைப் பொருத்தவரை எந்த பாகுபாடில்லாமல் நாங்கள் அவனுடன் பழகுவோம் அவனும் அதுமாதிரிதான். நான் லாவண்யாவின் நண்பன் என்ற ஒரு காரணமும் அதன்பின்னே இருக்கலாம். கடைசி ஆண்டு கல்லூரி தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் எங்கள் கல்லூரிக்கு TVS Motors நிறுவனம் campus Interview வந்தது. எங்கள் வகுப்பில் படிக்கும் அனைவருக்கும் அது கனவு Company. அந்த company க்கு கரணை விட வேற ஒரு ஆள் எப்படியும் select ஆகமாட்டார்கள் என்ற நம்பிக்கை மட்டும் எனக்கு இருந்தது. அன்று நடந்த எழுத்துத் தேர்விலேயே எங்களை எல்லாம் ஓரங்கட்டி விட்டார்கள். அன்று பெரியதாக ஒரு மனக்கஷ்டம் இல்லை, காரணம் கரண் கடைசிவரை சென்றிருந்தான்,அவனுடன் நம்ம சந்தோசும்.
Technical, HR என அனைத்து interview முடிந்து கரணும்,சந்தோசும் இறுதி முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அன்று இரவு ஒரு 10 மணி அளவில் முடிவை சொன்னார்கள், எங்களின் எதிர்பார்ப்பை போலவே கரண் பெயரை சொன்னார்கள். அவனுக்கு மகிழ்ச்சி மனதில் பெருக்கெடுத்து ஓடியது எங்களுக்கும்தான். நாங்கள் அன்று இரவே அதை ஒரு பெரிய விழாவாக கொண்டாடிவிட்டோம். சந்தோஷ் வேகமாக வந்து கரணுக்கு கை குலுக்கிவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.
கல்லூரியும் தொடங்கியாயிற்று.
முதல்நாள் முதல் பாடவேளையே ஒரே அறிவுரையாக சென்றது. அதை எல்லாம் பொருட்படுத்தாமல் நாங்கள் எல்லாம் எப்போது போலவே Interval க்கும் Lunch க்கும் காத்துக் கொண்டிருந்தோம். முதல்நாள் முடியும் வேளையில் மீண்டும் CR election. கரண் என்னிடம் " டேய் கதிர் இந்த election ல நாம மூணு பேர்ல ஒருத்தன் நிக்கறோம், யார் நின்னாலும் நமக்குத்தான் இந்த CR Post. இதுவரைக்கும் நின்னவங்க ஒண்ணும் பெருசா பண்ணல so நாம உருப்படியா எதாவது நம்ம class க்கு செய்யணும் OK வா" என்றான். வகுப்பில் எங்களுக்கு எப்போதும் ஆதரவு இருக்கும் என்று தெரியும், அந்த நம்பிக்கையில்தான் கரண் கூறினான். நாங்கள கரணை முன்மொழிய, அவனுக்கு எதிராய் மீண்டும் சந்தோஷ். "டேய் என்னடா இவன் நம்மகிட்ட ஒழுங்கா பேசறான் ஆனா எதுக்கு இந்த வீனத்த வேலை சொல்லு, கம்முனு வந்தமா ஒரு பொண்ணு pickup ஆச்சு.. போனமா இல்லாம தலய எதிர்த்து ஏன் இந்த election ல அவன்" என கூறினான் கோபு. தேர்தலின் முடிவில் மீண்டும் அவனுக்கு கிடைத்த வாக்குகள் எண்ணிக்கை 7. மிச்சமிருந்த 53 வாக்குகளும் கரணுக்கு விழ அவனுக்கு இன்னும் கொஞ்சம் வெறுப்பு அதிகமானது எங்கள் வகுப்பின் மீது. "டேய் அவன் எவ்ளோ சொல்லியும் கேக்கல நிக்காதனு சொல்லியும் நின்னான் அப்பறம் இந்த அசிங்கமெல்லாம் தேவையா சொல்லு" என செல்வா கூற "டேய் என்னடா இப்படி சொல்ற அவன் பங்காளி பக்கத்துலே இருக்கான், அவன் முன்னாடியே இப்படி சொல்றியே கோச்சிக்க போறான் இவன் " என என்னை நோக்கி வெறுப்பேற்றினான் கோபு.
மறுநாள் லாவண்யா என்னிடம் ஏதாவது பேசுவாள் என்று நினைத்தேன். ஆனால் அப்படி ஒன்றும் நடக்காத காரணத்தால், நானே போய் ஆரம்பித்தேன். "என்ன madam ரொம்ப busy போல, நேத்து கண்லே படல, எங்க போய்டீங்க" எனக் கேட்டேன். லாவண்யா "இல்ல நேத்து கொஞ்சம் தலவலி அதான் hostel போய்ட்டேன்" என்றாள். காரணம் எனக்கு விளங்கியது, அதை எனக்குள்ளே வைத்துக்கொண்டு, ஏதும் தெரியாதது போல், "ஏன் என்ன ஆச்சு இருக்கறப்பவே" எனக் கேட்க, "சந்தோஷ்கிட்ட நான் இந்த CR election ல நிக்க வேணாம்னு எவ்ளோவோ சொன்னேன் கதிர் ஆனா, என் பேச்ச கேட்காம போய் அவன் நின்னான்" என்றாள். "சரி நீ ஏன் அவன்கிட்ட போய் சொல்ற, அப்படி என்ன உங்க 2 பேருக்குல்லேயும்" என்று கேட்டேன். அதற்கு லாவண்யா "எல்லாம் தெரிஞ்சிகிட்டே நடிக்காத கதிர் உனக்கு எதுவும் தெரியாதா" என சற்று கோபமாக கூறினாள். எனக்கும் கொஞ்சம் தைரியம் வந்து "எனக்கு என்ன தெரியும் சொல்லு. நீ ஏதாவது என்கிட்டே சொன்னியா சொல்லு. அப்படி என்ன உங்க ரெண்டு பேருக்குல்லேயும், நீயே சொல்லதப்போ நான் என்னனு எடுத்துகறது" எனக் கேட்டேன். அவளோ "ஏன் கதிர் எதுவும் தெரியாது போல நடிக்கற, அவன நான் Love பண்றது உனக்கு தெரியுமில்ல அப்பறம் என்ன" என அதை முதன் முதாலாக என்னிடம் கூறினாள். ஏனென்று தெரியவில்லை அவள் வாயாலே அதைக் கேட்டது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது ஆனால் அதை நான் எதிர்பார்த்ததுதான். நான் தோழி என்ற நோக்கத்தில் பார்த்தாலும் அடுத்தவன் காதலி என அவளே கூறும்போது சற்று இறுக்கமாகத்தான் இருந்தது மனதில். அதற்கு மேல் அவள் வார்த்தைகளை கேட்க எனக்கு பொறுமையில்லாத காரணத்தால், இதற்குப் பிறகும் இதைப்பற்றி நான் அவளிடம் விசாரித்தால், அது இந்த நட்பின் விரிசலுக்கு காரணம் ஆகிவிடுமோ என்று நினைத்துக்கொண்டு வெளியில் எதையும் காட்டிக் கொள்ளாமல் அப்படியே அங்கிருந்து வந்து விட்டேன்.
"என்னடா நேத்து எதோ ஒரு பெரிய discussion போல, madam அப்பறம் நீங்க எதோ ரொம்ப நேரம் பேசிகிட்டு இருந்தீங்க, நாங்களும் எவ்ளோ நேரம்தாண்டா உனக்கு wait பண்றது சொல்லு, எதோ important discussion நினைச்சோம். அதான் சொல்லிக்காம கிளம்பிட்டோம், " என்றான் கரண். "இல்லடா நேத்து அவ சந்தோஷ பத்தி கொஞ்சம் சொன்னா அதான்" என்றேன். "ஆமா உனக்கு ஒண்ணும் தெரியாது அவங்க எல்லாத்தியும் சொன்னாங்க போடாங்க, நீயும் உன் கதையும்" என்றான் கோபு. அதற்குப்பிறகும் நான் எப்போதும் போலத்தான் அவளிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
ஒரு வாரம் கழித்து அனைவரும் Project முடிவு செய்வதற்கு busy ஆனார்கள். அவரவர் அவர்களின் project ல் ஆட்களை தாங்களாக பிரித்துக் கொண்டார்கள். எங்கள் மூவரை யாரும் வந்து அழைக்கவில்லை அவர்களின் project க்கு, ஏனெனில் எல்லோருக்கும் தெரியும் இந்த மூவர் கூட்டத்தை பிரிக்க முடியாது என்று. இந்த மூவரோடு சேர்த்து நான்கவதாக ஒரு ஆளை சேர்த்துக் கொள்ளலாம் என்று கரண் மற்றும் கோபுவிடம் யோசனை கூறினேன் நான். அவர்களுக்கு அதன் காரணம் தெரிந்துவிட்டது. "டேய் நீயெல்லாம் திருந்தவே மாட்டியாடா, உன்னையெல்லாம் இன்னும் ஒரு 100 கரண் வந்தாலும் திருத்த முடியாதுடா" என நகைத்தான் கோபு. "நீ எதுக்கு கேட்கறனு தெரியும், ஏன் அந்த அக்காவ நம்ம project ல சேர்த்துக்கணும் அதானே" எனக் கூறினான் கரண். "டேய் இவனோட plan எனக்கு தெரிஞ்சு போச்சுடா, நாம 4 பேர் சேர்ந்தா வச்சிக்கோ, இவங்க ரெண்டு பெரும் வேற project பண்ணுவாங்க, நாம ரெண்டு பேர் மட்டும்தாண்டா உண்மையான project பண்ணனும், கோபு இவன நம்பாத" என கரண் முடித்தான்.
நான் குறுக்கிட்டு"டேய் அந்த பொண்ணு என்கிட்டே கேட்டுச்சுடா அத உங்ககிட்ட கேட்டு சொல்றேன்னு சொல்லிருக்கேன், ஆனா நாம 4 பேரும் சேர்ந்து செஞ்சா நல்ல இருக்கும்னு எனக்கு தோனுதுடா", " யாருக்கு உனக்கு நல்லா இருக்கும்டா, ஆனா எங்க நிலமைய கொஞ்சமாவது யோசிச்சியா சொல்லு, கரண் இவன் நம்மள இவங்க ரெண்டு பேருக்கும் ஒரு பாதுகாப்பான படைவீரர்களா மாத்த பார்க்கிறான் இவன நம்பாத" என கூறினான் கோபு. இவ்வளவு நடந்தும் எனக்கோ மனதில் அவள் மேல் இருந்த மரியாதை சற்றும் குறையவில்லை. இதை புரிந்து கொண்ட அவர்கள் என் பொறுமையை சோதித்துப் பார்க்க விளையாட்டுக்கு என்னிடம் "சரிடா இப்போ உனக்கும் எங்களுக்கும் Toss போடலாம், பூ விழுந்தா அவள நாம சேர்த்துக்கலாம், அப்படி தல விழுந்தா தல சொல்றததான் நீ கேட்கணும் சரியா" என்றான் கோபு. நானும் அதிர்ஷ்டத்தை என் பக்கம் வைத்துக் கொண்டு தலை ஆட்டினேன். அந்த பாழாய்ப்போன 1 ரூபாய் தலையை காட்டியது. உடனே நான் குறுக்கிட்டு "டேய் மொத்தம் 3 தடவ போட்டு பார்க்கலாம், இப்போ 1 over so அடுத்த ரெண்டு முறை coin twist பண்ணுவோம், so அதுல என்ன விழுதோ அது படி நடக்கலாம் ஓகேவா" என்றதும் இருவரும் என்னை ஒரு கேவலமான வார்த்தையில் திட்டிவிட்டு மீண்டும் toss போட்டார்கள். மூன்று முறையும் தலையே விழ எனக்கு அதன் பிறகு ஒன்றும் என்னால் பேசமுடியவில்லை. ஆனால் என் மனதை புரிந்து கொண்ட கோபுவும் கரணும் "சரிடா இதெல்லாம் விடுடா நாம 4 பேரும் செய்யலாம், என்ன பண்றது உன்கூட இருக்கறதால இதெல்லாம் எங்களுக்கு தேவைதாண்டா..எல்லாம் உனக்காக" என்றான் கரண்.
4 பேர் என்று முடிவு செய்துவிட்டு எங்கள் project guide அவரை போய் சந்தித்த போது அவர் ஒரு பெரிய குண்டை தலையில் போட்டார். "Sir நாங்க 4 பேர் பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கோம்" என்றான் கரண். உடனே அவர் " இங்க பாருங்கப்பா இந்த வருசதுலேர்ந்து 3 பேருதான் ஒரு project க்கு HOD சொல்லிட்டார் so நீங்க decide பண்ணி சொல்லுங்க" எனக் கூறிவிட்டார். "சரிடா நீங்க 3 பேர் செய்ங்க நான் வேணும்னா செல்வா கூட பண்றேன்" எனக் கூறினான் கோபு, உடனே நான் குறுக்கிட்டு "டேய் நாம 3 பேர்தாண்டா செய்றோம் அவ்ளோதான் நான் அவகிட்ட ஏதாவது சொல்லிடறேன்" என்றேன்.எனக்கு அப்போது அவள் முக்கியமாக தெரியவில்லை ஆனால் அவளிடம் எப்படி சொல்லி புரியவைப்பது என்றுதான் யோசித்தேன்.
இதை எப்படி அவளிடம் போய் சொல்வதென்று தெரியாமல் அவளை அன்று தேடிக் கொண்டிருந்தேன். அனைத்து இடத்திலும் தேடிவிட்டு கடைசியாக பேருந்துக்கு செல்லலாம் என தொடர்ந்த போது லாவண்யா சந்தொஷுடன் வேகமாக வந்து கொண்டிருந்தாள். நான் அவளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று முன்பே தெரிந்ததுபோல் சந்தோஷ் வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். "லாவண்யா... வந்து உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல" என நான் இழுக்கும்போது, அவள் மிகவும் தயக்கமாக "கதிர்.. .நானும் உன்கிட்ட ஒன்னு சொல்லணும், நான் உன்கூட project பண்றேன்னு சொன்னேன்ல ஆனா இப்போ நான் சந்தோஷ்கூட பண்ணலாம்னு இருக்கேன் நீ எதுவும் தப்பா எடுத்துக்காத சரியா.. என் நிலைமை அப்படி. இப்போ எங்களுக்கு ஒரு நல்ல company ல project கிடைச்சிருக்கு அங்கே பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டோம்.. அங்கதான் போய்ட்டு வரேன்" என அடுக்கிக்கொண்டே போனாள். என்னிடம் பேசிக்கொண்டே இருக்கும்போது அவனிடமிருந்து எதோ கண்ணால் சைகை வர "நாளைக்கு பார்க்கலாம் கதிர்" என வேகமாக நகர்ந்தாள், அவளுக்காக wait பண்ணும் சந்தோஷ் திசை நோக்கி.
எனக்கோ என்னடா இவள புரிஞ்சிக்கவே முடியலையே என உள்ளுக்குள்ளே நினைத்துக் கொண்டு ஒரு பெரு மூச்சோடு அங்கிருந்து நகர்ந்தேன். என்னோட நிலையையும் நான் மெல்ல உணர ஆரம்பித்தேன். அன்று மாலை பேருந்தில் நாங்கள் எப்போது பயணிக்கும் கடைசி இருக்கையில் தலை கவிழ்த்த என் மனதில் பல குழப்பங்கள் அரங்கேறத் தொடங்கியது.
(தொடரும்)
அன்புடன்
கருணா
Tuesday, January 01, 2008
சுவடுகள் - IV
6 வது செமஸ்டர், நானும் மனதில் பல எண்ணங்களுடனும் எதிர்பார்புகளுடனும் தொடங்கினேன். இதோ இன்று ஒரு புதியவளை உங்களுக்கு அறிமுகப்படுத்த போகிறேன் "கீதா". இவளும் எங்கள் வகுப்புதான், எங்களுடன் இருக்கும் 18 பெண்களில் அழகு கொஞ்சம் அதிகமாகவே இவளிடம் கொட்டி கிடந்தது. ஆனால் எப்போதும் தலை நிமிராமல் அவ்வளவு அடக்கமாக செல்வாள். அவளிடம் இதுவரை மூன்று பேர் தன் காதலை சொல்லி தடுக்கி வீழ்ந்திருக்கிறார்கள், அதுவும் எங்கள் department அல்லாதவர்கள். எங்கள் வகுப்பை சேர்ந்த தருண் என்றவனுடன் மட்டும் பேசி கொண்டிருப்பாள், அவன் அவளின் குடும்ப நண்பன் என்பதால். இவள் கதாபாத்திரத்தின் முக்கியம் என்னவென்றால், கீதா மீது கரனுக்கு ஒரு சிறிய கண். நாங்களும் அவனை அவளோடு இணைத்து பேசும் போது
மறு வார்த்தை கூற மாட்டான், உள்ளுக்குள் மட்டும் மகிழ்ச்சி வெள்ளத்தில் குதிப்பான். "டேய் மச்சான் கல்யாணம் பன்னா எப்படியும் Love பண்ணிதாண்டா கல்யாணம் பண்ணனும், அதுவும் கல்யாணம் பன்னா அந்த மாதிரி பொண்ணதான் கல்யாணம் பண்ணனும், என்ன தெய்வீகம் அவளுக்குள்ள, எல்லா பெண்களுமே அழகுதாண்டா ஆனால் அவள் அதுக்கும் கொஞ்சம் மேலடா" இது அடிக்கடி அவன் அவளைப் பற்றி கூறும் வார்த்தைகள். நாங்களும் எப்போதும் அவனை ஒட்டிக் கொண்டே இருப்போம்.
"ஏன்டா இவ்ளோ பேசற எங்கள எல்லாம் ஓட்ற ஆனா போய் டக்குனு உன் காதல சொல்ல வேண்டியதுதானே" என்றான் கோபு.
"டேய் Love சொல்றதுக்கும் கொஞ்சம் யோசிக்கனும்டா, நாம சொல்றதுல அந்த பொண்ணு எந்த எதிர் பேச்சும் பேசாம அப்படியே நம்ம வார்த்தைல விழணும், சும்மா நானும் சொல்றேன்னு சொல்லக் கூடாதுடா, அதுக்கெல்லாம் எவ்ளோ கற்பனை வச்சிருக்கேன்" என்று முடித்தான். "சரி என்ன சொல்லப் போற, எப்படி சொல்லுவ". என்றேன் நான். "அப்படியே ஒரு 50 ரோஜா, நம்ம juniors கிட்ட கொடுத்து யார் கொடுக்கறதுன்னு அவளுக்கே தெரியாம கொடுக்கணும், அதுல கடைசி ரோஜா நான் கொடுத்து என் மனசுல அவள் இருக்கறத சொல்லனும்டா" என்றான் கரன். ஆம் கரன் மனதில் அவள் சற்று அதிகமாகவே ஆட்டம் போட்டு கொடிருந்தாள். அதை கொஞ்சம் வெளியே காட்டமாட்டான். ஆனால் நாங்கள் துருவி அதை எப்படியாவது வெளியே கொண்டு வந்து விடுவோம். அன்று ஒரு நாள் அவன் கூறிய வார்த்தைகள், என்றோ அவளிடம் சொல்வதற்காக "கீதா நான் யார கல்யாணம் பண்ணாலும் சந்தோசமா இருப்பேன், ஆனா நான் உன்ன கல்யாணம் பண்ணா ரொம்ப ரொம்ப சந்தோசமா இருப்பேன், உன்னோட முடிவுக்காக நான் எவ்வளவு நாள் வேணும்னாலும் காத்திருப்பேன், உன் முடிவ நீ சொல்லு". இதை அவன் எங்களிடம் கூறும்போது எங்களுக்கு அவன் காதலை எப்படியாவது சேர்க்க வேண்டும் என்று எண்ணினோம். இவன் காதல் எங்கள் மூவரைத் தவிர வெளியே யாருக்கும் தெரியாது. எங்களுக்கு மட்டும் ஒரு அபார நம்பிக்கை இருந்தது கரன் போய் அவன் காதலை அவளிடம் கூறினால் கண்டிப்பாக அவள் ஏற்று கொள்வாள். அந்த நாட்களுக்காக நாங்களும் காத்துக் கொண்டிருந்தோம்.
கல்லூரி திறந்து இரண்டு வாரம் சென்றும் லாவண்யா என்னிடம் பேசவில்லை. இந்த ஆண்டு எந்த labல் அவள் என்னோடு சேர்ந்து செய்ய போகிறாள் என்று யோசித்துக் கொண்டே இருப்பேன். Measurements lab னு ஒரு lab, இதில் மொத்தம் 5 பேர் ஒரு batch கு. அதில் மீண்டும் என்னோடு அவள். நான்,அவள்,கரன்,கார்த்தி மற்றும் லக்ஷ்மணன். மனதில் ஒரு மெல்லிய சந்தோசம். இந்த lab ல் எந்த சந்தேகமாக இருந்தாலும் அவள் என்னிடம் மட்டும் கேட்பாள்.
அப்படியே வாழ்க்கை போய் கொண்டிருந்தது. எங்கள் பேச்சும் தொடர்ந்தது. எப்படா free period கிடைக்கும் என்று ஏங்கி கொண்டிருந்த நாட்களும் பல உண்டு, அவளிடம் சற்று நேர பேசலாமே என்பதற்காக. ஒரு நாள் Manufacturing Engg. lab முடித்துவிட்டு திரும்பும் வேளையில், கரன் "டேய் நான் அந்த லாவண்யா பொண்ண கொஞ்ச சத்தமா பேசிட்டேன், ஏதோ பேசிகிட்டு இருக்கறப்போ கொஞ்சம் திட்டிட்டேன் ஆனால் என் மேல எந்த தப்பும் இல்லடா அவ்ளோதாண்டா" என கூறினான். அவள் கண்ணீருடன் என்னருகே வந்தால். நான் என்ன காரணம் என்று விசாரிக்கும் முன்னரே கரன் அவளிடம் சென்று " இங்க பாரு லாவண்யா நான் உன்ன கஷ்ட பண்ணனும் திட்ல அப்படி hurt பன்னிருந்த I am sorry அவ்ளோதான்" என்று கூறிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான். நான் இருவருக்கும் இடையே நின்று கொண்டு, அவளை முதலில் சமாதானம் செய்துவிட்டு வேகமாக கரன் பின்னே ஓடினேன். "டேய் உன்னோட முகத்துக்காகதண்டா நான் sorry கேட்டதே, அவன் ஏன்டா தேவை இல்லாம என்ன பத்தி முன்னால ஒன்னு சொல்லணும் அப்பறம் பின்னால போய் வேற மாதிரி பேசணும் அது எனக்கு பிடிக்கல திட்டிட்டேன், நான் பண்ணது தப்பில்ல அவ்ளோதான்" நான் அவனிடம் என்ன காரணம் என்று கேட்காமலே கூறினான். அதன் பிறகு அவள் கரனை கண்டால் சற்று பயத்தோடுதான் பேசுவாள். "என்ன உன் friend கு அவ்வளோ கோபம் வருது, நான் ஏதோ தெரியாம பேசிட்டேன் அதுக்காக என் என்ன திட்டனும் சொல்லு" என்றாள். ஆனால் அதை பற்றி எனக்கு கேட்க விருப்பமில்லாததால் அதை அவளிடம் விசாரிக்க என் மனம் போகவில்லை. அவளும் என்னிடம் அவனைப் பற்றி தவறாக எதுவும் கூறமாட்டாள். அவர்களை சமாதானப்படுத்தி இருவரையும் என் வழிக்கு கொண்டு வருவதற்குள் நான் மிகவும் கஷ்டப் பட்டுவிட்டேன்.
கரன் அடிக்கடி என்னிடம் கூறுவான் "டேய் நாம மூணு பேரும் எப்பவும் ஒண்ணா இருக்கணும்டா, இதுல ஒரு பொண்ணு வந்து நமக்குள் எந்த மன கஷ்டமும் வரக்ககூடாது". கரனுக்கு அவள் மீது கொஞ்சம் சந்தேகம் எப்பவும் இருந்து கொண்டே இருந்தது, அதற்கு நான் எந்த விதத்தில் ஏமாற்றத்தை கண்டுவிடக்கூடாது என்ற ஒரு காரணமும் உண்டு.
அதுவரை எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்தது. எனக்கும் அவளுக்கும் உள்ள உறவு என்ன என்றே எனக்கே தெரியாமல் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. இதற்கு உலகம் சொன்ன பெயர்கள் பல.. நட்பு,காதல்,கடலை என நீண்டது. ஆனால் என் மனதிற்கும் அது என்னவென்று தெயயவில்லை. அவள் நம்மிடம் பேசினால் மட்டும் போதும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இப்படியே நாட்களை தள்ளிக் கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் கரன் என்னிடம் வந்து "மச்சான் நான் ஒன்னு கேள்வி பட்டேண்டா, பசங்களும் அப்படித்தான் சொல்ராங்கடா, லாவண்யா..லாவண்யா வந்து நம்ம class சந்தோஷ் அவன லவ் பண்ராலாம், ஆனா இது எதுவுமே நமக்கு வெளிய தெரிய மாட்டேங்குது, அப்பறம் என் அவன் உன்கிட்ட இப்படி பேசறானு தெயயல" எனக் கூறி என் மனதை சற்றே கலக்கத்தில் கரையவிட்டான். அது வரை என்ன உறவு என்று மனம் தடுமாறிக் கொண்டிருந்த வேளையில் அவள் மற்றொருவனுக்கு சொந்தமாக போகிறாள் எனத் தெரிந்ததும் மனம் குழப்பத்தில் ததும்பியது."மச்சான் நான் இத உன்னோட நல்லதுக்குத்தான் சொல்றேன், அப்பறம் நாமளும் மனசுல ரொம்ப ஆசைய வளத்துக்க கூடாதுல அதுக்குதாண்டா" என கோபுவும் கூடவே கூற நான் குறுக்கிட்டு "இல்லடா அவள் என்கிட்டே எதுவா இருந்தாலும் சொல்வாடா, ஆனால் அவங்க ரெண்டு பேரும் பேசி நாம பார்த்ததே இல்லையே". "ஆமாண்டா நாங்களும்தாண்டா பார்த்ததில்ல, அவங்க ரெண்டு பேரும் college முடிஞ்சதுக்கு அப்பறம்தான் பேச ஆரம்பிபாங்களாம், அப்பறம் every weekend பார்த்து பேசுவாங்களாம், hostel பசங்க சொல்றாங்க, நாமதான் correct time கு இங்கேர்ந்து கிளம்பிடறோம், அதான் நமக்கும் ஒண்ணும் தெரியறது இல்ல" என கோபு கூறினான். எனக்கோ ஒன்றும் விளங்கவில்லை, இதை பற்றி அவளிடம் கேட்கவும் தைரியமில்லை.
அதற்குப் பிறகும் அவள் என்னுடன் எப்போதும் பேசுவதையும் நிறுத்தவில்லை. அன்று வேண்டுமென்றே நான் கல்லூரி முடிந்த பிறகும் நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தேன். அன்றுதான் முதன் முதலாக அவர்கள் இருவரும் பேசுவதை நான் கண்டேன். இதை நான் நண்பர்களிடமும் கூறினேன். "டேய் எனக்கு அப்பவே தெரியும்டா, இந்த மாதிரி அழுது காரியத்த சாதிக்கற பொண்ணுங்களை நம்பக் கூடாது" என மிக கோபமாக கூறினான் கரன். "நீ பேச வேணாம்னு சொல்லல, அது இதுக்கப்பறம் நாம நம்ம limit பார்த்து நடந்துக்கணும், அவளுக்காக எவ்வளவோ நீ செஞ்சிட்ட அவ்ளோதாண்ட நான் சொல்வேன்." என்று கோபுவும் கூற நான் அவர்கள் சொல்வதிலும் அர்த்தம் இருப்பதை உணர்ந்தேன்.
ஆனால் அவளிடம் திடீரென பேசுவதை நிறுத்துவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
ஏனென்றால் என் மனம் நான் சொல்வதை கேட்கும் நிலையில் அப்போது இல்லை. அவளும் என்னிடம் எப்போதும் போல் பேசுவாள்.
என்னிடம் எந்த சந்தோசத்துடன் பேசுவாளோ அதே சந்தோசம் மகிழ்ச்சி அவனிடம் பேசும்போதும். நான் அதை சற்றும் கவனிக்காமல் அப்படியே என் பாதை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். மறு நாள் அவள் என்னிடம் இதை சற்றும் காட்டிக் கொள்ளாமல் என்னிடம் எப்போது போல பேசி கொண்டிருந்தாள். அவளின் அந்த காதல் அத்தியாயத்துக்குள் நானும் தலையிட விரும்பவில்லை.
அவள் எப்போதும் என்னிடம் சொல்ல நினைக்கிறாளோ அன்று சொல்லட்டும் என்று விட்டுவிட்டேன். ஆனால் கரனுக்கும், கோபுவுக்கும் அவள் ஏன் இப்படி என்னிடம் சொல்லாமல் எல்லாம் செய்கிறாள் என்ற கோபம் மட்டும் இருந்து கொண்டே இருந்தது. என்னுடன் என்னதான் மணிக்கணக்கில் பேசினாலும் அதை சற்றும் கண்டு கொள்ளாமல் சந்தோஷ் அவன் வேலையை பார்த்துக் கொண்டிருப்பான். லாவண்யாவும் என்னுடன் பேசிக் கொண்டிருக்கும் போது என் நட்பை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டாள். அது நட்பு என்று நான் எனக்குள்ளே உறுதிப் படுத்திக் கொண்டேன். அதை நான் நட்பு என்று எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கும் ஒரு படி மேலாக நினைத்து நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தேன். இப்படியே நாட்கள் செல்ல செல்ல என்ன நடக்கிறது என்று எனக்கே தெரியாமல் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. அவள் ஏன் நம்மிடம் அவனைப் பற்றி பேச மறுக்கிறாள் என்ற கேள்வியையும் நான் எனக்குள்ளே பல முறை கேட்டும் என் மனது அவளிடம் பேசுவதை நிறுத்தவில்லை. 6 வது semester முடியும் தருவாயில் எங்களை final year project செய்வதற்கு இப்போதே batch பிரிக்க சொன்னார்கள். நாங்கள் ப்ராஜெக்ட் தேடும் ஆர்வத்தில் இருந்தபோதும் எனக்கும் உள்ளுக்குள்ளே அவர்களைப் பற்றித்தான் உள் மனதில் சிந்தனை வெள்ளோட்டம் விட்டுக் கொண்டிருந்தது.
லாவண்யா என் நட்புக்கும் சந்தோஷின் காதலுக்கும் இடையில் நாட்களை கரைத்துக் கொண்டிருந்தாள்.
இதன் பிறகு என் நிலை என்ன?
நான் எப்படி இருக்க வேண்டும் என்று என் மனம் சற்றும் யோசிக்கவில்லை. ஆனால் அவளிடம் மட்டும் பேச வேண்டும். அதை மட்டும் எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அன்புடன்
கருணா
Monday, December 31, 2007
காதலும்...கவிதையும்...
இந்த வருடத்தின் முதல் பதிவு.

வானில் நீலம் இருக்கும் வரை
நிலவில் கறை நீங்கும் வரை
கடலின் அலை ஓயும் வரை
பூமி அமைதியில் நிற்கும் வரை
என் நிழல் உன்னை விட்டு பிரியும்வரை
விரல்கள் உன்னைப்பற்றி கவி வரைந்துகொண்டே இருக்கும்
இதயம் காதல் வளர்த்துக் கொண்டே இருக்கும்...
அன்புடன்
கருணா
Monday, December 10, 2007
சுவடுகள்-III
மூன்றாமாண்டு பிள்ளையார் சுழி போட்டுவிட்டு கணக்கை தொடங்கினோம்.
இந்த ஆண்டு கொஞ்சம் முன்னேறி நானும் கரனும் 2 ம் பெஞ்சில் இடம் பெயர்ந்தோம், அதே இரண்டாம் பெஞ்சில் கோபு, ஆனால் அடுத்த வரிசையில் பத்மஸ்ரீ ராஜாமணியோடு. ஆம் எப்போதும் அவன் தன்னை இப்படித்தான் கூறிக் கொள்வான் ராஜாமணி.இவன் தன்னை பற்றி கூறும் அனைத்தையும் தாங்கிக்கொண்டு இவனுடன் இருக்கும்போது நேரம் போவதே தெரியாது. முதல் நாள் ஒன்றும் பெரிதாக வகுப்புகள் நடக்காததால் ஒரு மேட்ச் முடித்துவிட்டு கேன்டீன் அரட்டையுடன் ஒட்டினோம். ஒரு சில நாட்கள் ஓடியது.
எனக்கும் கரனுக்கும் இருக்கும் Lab சொந்தம் தொடர்ந்தது. 5 வது செமஸ்டர் எங்களுக்கு CAD lab உண்டு, ஆனால் இங்கு இரண்டு பேர்தான் ஒரு batch க்கு. அங்கேயும் நாங்கள் இருவர்தான் என எண்ணிக்கொண்டு lab க்கு நுழைந்தோம். அந்த Lecturer உள்ளே நுழைந்ததும் ஒரு அறிமுகம் செய்துவிட்டு "யாருக்கெல்லாம் இங்க CAD ஏற்கனவே தெரியும்" என கேட்டார். இரண்டாமாண்டு விடுமுறையை சும்மா கழிக்க வேண்டாம் என்று நாங்கள் மூவர் கூட்டத்தோடு CAD class போனோம், அதில் எதோ எங்களுக்கும் கொஞ்சம் தெரியும் என்று கூற எங்களைப் போலவே ஒரு பாதி கூட்டம் கை உயர்த்தியது. உடனே அவர் "சரிப்பா CAD தெரிஞ்சவங்கலாம் தெரியாதவங்ககூட batch சேருங்க so நீங்க அவங்களுக்கு சொல்லி கொடுத்த மாதிரி இருக்கும், சீக்கிரம் excercise முடிச்சிடலாம்" என்று சொன்ன அடுத்த நொடியே லாவண்யா என்னிடம் வந்து "கதிர் நாம ரெண்டு பெரும் ஒன்னா செய்யலாமா, உனக்குத்தான் தெயரியும்ல",என்றால். அவளிடம் பேச நினைத்துக் கொண்டிடுந்த கனவுகள் மீண்டும் உயிர்த்தெழுந்தது. நான் உடனே சரி என்று சொல்லாமல், ஓரக்கண்ணில் கரனையும்,கோபுவையும் பார்த்தேன். அவர்களிடம் போய் "என்ன மச்சான் யார்கூட பண்ண போறோம்" என்றேன். "இல்லடா நான் லக்ஷ்மணன் கூட பண்ணலாம்னு இருக்கேன், கோபு வந்து கிரி கூட பண்ண போறானாம், நீ வேணும்னா நம்ம கார்த்திகூட செய்யேன்" என்றான். "இல்லடா லாவண்யா என்கூட join பண்ண என்கிட்டே கேட்டா, நான் ஒண்ணும் சொல்லல, அதான் உங்ககிட்ட..." என இழுத்தேன். "அப்பறம் என்னடா போய் jolly பண்ணுடா, Lab மட்டும் பண்ணுடா, நீயும் கோபு மாதிரி ஆகிடப்போற, அப்பறம் நான் மட்டும் தனியா மரத்துக்கிட்டதான் பேசிகிட்டு இருக்கணும்" என சொன்னான்.
என் பதிலுக்கு காத்திருந்த அவளிடம் "சரி லாவண்யா நாம 2 பெரும் சேர்ந்து பண்ணலாம்" என்று கூறி காரனுக்கு அடுத்த கணினியில் நான் அமர்ந்தேன், எனக்கு வலமாக அவள். பேச வாய்ப்பு கிடைத்தும், வெறும் பாடத்தைப் பற்றி மட்டும் பேசிவிட்டு, அவளை செய்ய சொல்லிவிட்டு, நண்பர்களுடன் அரட்டையை தொடர்ந்தேன். 3 வார lab இப்படியே போனது. அடுத்த வாரம் அதே lab ல் லாவண்யா எதோ செய்து கொண்டிருக்க , நானும் கரனும் ஏதோ அலசிக் கொண்டிருந்தோம். HOD யிடமிருந்து அவனுக்கு அழைப்பு வர அவன் அவசரமாக கிளம்பினான். அன்று கோபுவும் வரவில்லை. நான் தனியாக அவள் என்னோடு, அவளிடம் பேசலாம் என்று தோணும் ஆனால் வார்த்தைகள் கிடைக்காது. அவளிடம் ஏதோ கூறிவிட்டு அப்படியே monitorஐ பார்த்துக் கொண்டிருந்தேன். "கதிர் என்ன அப்படி பாக்கற, பார்த்து monitor off ஆகிட போகுது" என நகைத்தாள். "கதிர், ஞாபகம் இருக்க போன வருஷம் 2nd year Intro அப்போ, நான் உன்கிட்ட ஏதோ சொன்னேன், நான் என்ன சொன்னேன்னு எனக்கே மறந்து போச்சு, அதுக்கப்பறமும் ஏன் என்கிட்டே பேசவே இல்ல, நான் எதாவது உன்கிட்ட பேசலாம்னு நினைப்பேன் ஆனா நீ எதாவது தப்பா எடுத்துக்க போறேன்னு கம்முனு இருந்துட்டேன்." என சொல்லி ஒரு படி மேலே போனால் என் மனதில். "சரி இப்போவாது எதாவது பேசு, சரியா... நீ என்ன ஒரே பையனா வீட்ல.." என்றவளுக்கு "இல்ல இல்ல.. நீ" என்று வழிந்தேன் வேறு என்ன கேட்பதன்று தெரியாமல் அவளைப் பற்றி கேட்டேன். "எனக்கு ஒரு அழகான செல்ல தம்பி இருக்கான், 8th படிக்கிறான்". உடனே நான் குறுக்கிட்டு "நீ கேரளானு எல்லோரும் சொன்னாங்க அப்பறம் எப்படி தமிழ் இவ்ளோ நல்லா பேசற" என்றேன். "நான் பொறந்தது வளர்ந்ததெல்லாம் இங்கதான் திருச்சில, அப்பாவுக்கு transfer ஆனதால நான் 5th படிக்கறப்போ அங்க போய் settle ஆகிட்டோம். 11th 12th Madrasla படிச்சேன், தாத்தா வீட்ல தங்கி, இப்போ மீண்டும் hostel இன்னொரு 4 வருஷம், உனக்கெல்லாம் jolly அப்பா அம்மானு எல்லோர் கூடவே எப்போதும்" அப்படியே அந்த lab முழுவதும் நிறைய விஷயங்கள் பகிர்ந்ததில் முடிந்தது.
அந்த நேரத்தில் உள்ளே வந்த கரன் என்னை பிரமிப்பாய் பார்த்து அவனிடத்தில் அமர்ந்தான். அந்த Lab முடிய "Bye கதிர், நாளைக்கு பார்க்கலாம் take care"என சொல்லிவிட்டு கிளம்ப, நானும் ஏதோ சிறியதாய் கை அசைத்தேன். "என்ன போகறப்ப மறக்காம bye லாம் சொல்லிட்டு போறாங்க, ஏன்டா ஒரு 2 மணி நேரம்தானே உன்கூட இல்ல அதுக்குள்ளே என்னடா இப்படி மாறிட்ட அதுவும் என்கூட இருந்துகிட்டு" என்று விளையாட்டாய் கேட்டான். நானும் அவள் கூறியதெல்லாம் கூறினேன். அவன் "இவள் இவ்ளோ நாள் அவ ஒரு ஒமனுக்குட்டினு தானே நினச்சேன், நம்ம தமிழ் தானா, சரிடா நீ நல்லா இருந்தா அது போதும்டா எங்களுக்கு" என கூறிக்கொண்டே நாங்கள் இருவரும் பேருந்தை நோக்கி போனோம். அன்று இரவு தூக்கத்தில் அவள் நம்மிடம் பேசியதெல்லாம் ஓடிக் கொண்டே இருந்தது, அதுவும் ஒரு பெண் நம்மை பற்றி விசாரிப்பதும் நெருக்கமாய் பேசுவதும் ஒரு புது அனுபவமாய் இருந்தது. அவளிடம் மீண்டும் மீண்டும் பேச வேண்டுமென மனம் துளிர்த்துக் கொண்டே இருந்தது. அதற்குப் பிறகு ஒவ்வொரு புதன் கிழமைக்காக காத்துக் கொண்டிருந்தேன் அந்த lab வருகைக்காக. ஒவ்வொரு lab லும் எங்கள் உரையாடல் நீண்டு கொண்டே இருந்தது. அன்று lab ல் ஏதோ பேசிக் கொண்டிருக்கையில் அவள் பிறந்த நாளைப் பற்றி விசாரித்தேன். அவள் " அது ஜூலை 18 போன வாரம்தான் போச்சு" எனக் கூற எனக்கு தெரிந்திருந்தால் எதாவது present பண்ணிருக்கலாமே என நினைக்கையில், Lecturer "ஏம்பா semester exam இன்னும் 3 மாசம்தான் இருக்கு நிறைய excercise incomplete இருக்கு so இந்த saturday special lab இருக்கு" னு சொல்லிவிட்டு கிளம்பினார். எனக்கோ உள்ளுக்குள்ளே ஏதோ ஒரு மூலையில் சந்தோசம் துள்ளி குதித்தது.
சரி அவளுக்கு present எதாவது கொடுத்தால் தப்பாக எடுத்துக் கொள்ள போகிறாள் என்று எதாவது sweet வாங்கலாம் என்று கடைக்கு போய் பார்த்தேன், அங்கே இருப்பதிலே பெரிய Card+Cadburys dairy milk வாங்கினேன். அதை bag ல் பத்திரமாக ஒழித்துக் கொண்டு கல்லூரிக்கு கிளம்பினேன்.வழியில் கரனும் கோபுவும் "என்னடா மூட்டை இவ்ளோ பெருசா இருக்கு, இன்னிக்கு lab மட்டும்தானே" என்றனர். "இல்லடா சும்மா Lunch எடுத்து வந்தேன்" என தப்பித்தேன். அன்று lab ல் கொஞ்சம் பாடத்தில் மூழ்கியதால் அதை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தேன், மனதிலோ அதை எப்படி அவளிடம் கொடுப்பது என்று உள்ளுக்குள்ளே யோசித்துக் கொண்டிருந்தேன். சட்டென்று lab முடிந்தவுடன் ஏதோ அவசரமாக வேலை இருக்கிறது என்று கிளம்பி அவள் hostel நோக்கி நடக்க ஆரம்பித்தாள். "இதோ இருங்கடா ஒரு நிமிஷத்துல வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு Bag உடன் அவள் பாதையை நோக்கி நடந்தேன்.
யாருமில்லா அந்த அமைதியான சாலையில் அவள் சென்று கொண்டிருக்க, பின்னால் சென்று மெல்ல லாவண்யா என்றேன். "என்ன கதிர் கிளம்பலையா" என்றாள். "என்ன இன்னிக்கு எதாவது வேலையா நீ மாட்டும் உடனே கிளம்பிட்ட" என்றேன். அவள் "இல்ல நீ உன் friends கூட ரொம்ப deep discuss பண்ணிட்டு இருக்கறப்போ disturb பண்ண வேணாம்னு உடனே கிளம்பிட்டேன்". "ஒ அப்படியா சரி நான் ஒரு gift கொடுத்தா தப்பா எடுத்துக்க மாட்டனு நினைக்கிறேன், உன்னோட birthday க்கு, அப்போ எனக்கு தெரியாது so" என சொல்லிக் கொண்டே Card+dairy milk எடுத்துக் கொடுத்தேன். அவள் எந்த தயக்கமுமில்லாமல் வாங்கிக் கொண்டு "ரொம்ப thanks கதிர்" என்று கூறி சிறிது நேரத்திற்குப் பிறகு hostel சென்றாள். அவள் செல்வதை கடைசி வரை பார்த்துவிட்டு திரும்புகையில், கரனும் கோபுவும் "என்னடா தனியா இங்க ஈ ஓட்டிகிட்டு இருக்க, அதுவும் அந்த குட்டி போகற வேலையில". "இல்லடா அந்த பொண்ணுக்கு போன வாரம் birthday வாம் அதான் ஒரு card கொஞ்சம் sweets வாங்கனேன் அத கொடுத்தேன்" என்று சொல்லி முடிப்பதற்குள் "டேய் நான் அப்பவே சொல்லல அத பார்த்த lunch bag மாதிரி தெரியல எதோ விஷயம் இருக்குன்னு நினச்சோம் சரி உன் கதை சேது மாதிரி ஆகாத இருந்த சரி தான்" என கூறினர். "இல்லடா அவன் என் friend அதான்" என இழுக்க. "டேய் நாங்களும் தான் வருஷம் வருஷம் birthday கொண்டாடறோம் ஒரு 25 காசு choclate கொடுத்திருப்பியா ஆனா அங்க Cadbury's அதுவும் extra large size ல, கோபு எனக்கென்னவோ பையன் நம்மள கூடிய சீக்கிரம் கழட்டி விட்டுடுவானு நினைக்கிறேன் நீ என்ன சொல்ற" என்றான் கரன்.
வகுப்பு வாசலில் நுழையும்போதே எனைப் பார்த்து ஒரு புன்னகையோடு போய் அமர்வாள். வகுப்புக்கு இடை இடையில் observation இடம் மாறுவதும் அவள் சந்தேகத்தை தீர்ப்பதும் என கொஞ்சம் நீண்டது இந்த பந்தம். இதற்கு பிறகு நாங்கள் பேசும் நேரமும் தன்னை நீட்டித்துக் கொண்டது. எதாவது ஒரு சிறிய சொல்லில் தொடங்கி ஒரு 100 பக்கம் தொடர்வதுபோல் உரையாடல் நீண்டது. "ஏன்டா அப்படி என்னடா பேசுவ அதுவும் வெட்டியா அந்த பொண்ணுகிட்ட" என கோபு கேட்டான். " டேய் நீ என்ன பண்ற அந்த இளவரசிக் கூட அதேதான் இவன் கொஞ்சம் விளக்கமா பேசி இருப்பான், உங்க ரெண்டு பேருகிட்டேயும் மாட்டிகிட்டு நான் நடுவுல தனியாதான் பேசனம்னு நினைக்கிறேன்" எனக் கரன் கூற அவன் பேச்சை மாற்றினான். 5 வது semester முடியும் நேரம் நாங்கள் Record, Mid semester, என கொஞ்சம் வேகமாய் பறந்தோம். தேர்வு அட்டவணையும் தயார் ஆக சற்று அதிலும் மூழ்கி இருந்தோம். அன்று கடைசித்தேர்வு நல்லபடியாக முடிந்தது அவள் என்னருகே வந்து "கதிர் நான் இன்னிக்கு ஊருக்கு கிளம்பறேன் semester leave முடிஞ்சுதான் வருவேன் ok வா, எங்க அப்பா அம்மா கூட ஜாலியா இருக்க போறேன்" என்று சொல்லிவிட்டு வேகமாய் பறந்தாள். அன்று கடைசி exam என்பதால் அனைவரும் ஒரு படத்தை முடித்துவிட்டு மாலை beach ல் பொழுதை கழித்தோம். எனக்கு எதோ ஒன்று நம்முடன் இல்லாதது போல் இருந்தது. "என்னடா அமைதியா இருக்க எதாவது தொன தொனனு பேசிட்டே இருப்பியே இப்போ என்ன கடல அமைதியா பார்த்திட்டு இருக்க" என கோபு கேட்டான்."அதெல்லாம் ஒண்ணுமில்லடா இன்னிக்கு கொஞ்சம் exam சரியா பண்ணல அதான்" என சொல்லி சமாளித்தேன். எனக்கு எப்படி இந்த ஒரு மாத காலத்தை கழிப்பது என்று தெரியாமல் இருந்தது. அந்த விடுமுறையில் எனக்கு என்னவோ மனதில் தோன்ற அன்று வலுக் கட்டாயமாக நான் இருவரையும் கல்லூரிக்கு அழைத்து சென்றேன். அங்கே நாங்கள் பேசிக் கொண்டிருந்த இடத்தை மட்டும் தனியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். அங்கே போய் எதாவது கனவு காண்பேன் எதையோ நினைத்துக்கொண்டு, பின்பு இதுவே வாடிக்கையாகிவிட்டது.
நாட்கள் மெதுவாய் நகர 6 வது semester முதல் நாளை எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன்.
(தொடரும்)....
என்றும் அன்புடன்
கருணா
சுவடுகள்-II
முதல் நாள் கல்லூரி... வரப்போகும் நான்கு வருட பாதையை இன்று முதல் தொடங்க போகிறேன்.
கல்லூரி வாசல் நுழையும்போதே ஒரு வித பயம் கலந்த பரவசம் மனதில், அன்று முதல் நாள் என்பதால் காலையில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு அறிமுக விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அனைவரின் பெயர் வரிசை பார்த்து வகுப்பறைகள் பிரிக்கப் பட்டிருந்தது. அதனால் என் பள்ளி நண்பர்களெல்லாம் வேறு ஒரு பிரிவிற்கு நான் வேறு பிரிவிற்கு செல்ல வேண்டியதாயிற்று. என் பெயர் C section அட்டவணையில் ஒட்டியிருப்பதை பார்த்தேன். அதில் எனக்கு தெரிந்தவர்கள் எவருமில்லாமல் நீண்டு கொண்டே சென்றது. கடைசியில் என் வீட்டருகினில் இருக்கும் மற்றொரு நண்பன் பெயரும் இருந்தது. முதல் ஆண்டு எல்லோருக்கும் ஒரே பாடம் என்பதால் அனைத்து department மாணவர்களும் ஒன்றாகவே இருக்க வேண்டிய கட்டாயம். வகுப்பினில் காலடி எடுத்து வைக்கும்போது, எல்லோரும் போல அவ்வளவு சந்தோஷம் என் மனதில் இல்லை, நமக்கு இங்கே யாரையும் தெரியாது, முதல் பெஞ்சில் தெரியாத நண்பன் பக்கத்தில் நான் அமர்ந்தேன், ஆனால் அவன் என்னை சற்றும் கவனிக்காமல் அவன் பள்ளி தோழர்களிடம் மட்டுமே பேசி கொண்டிருந்தான். நான் மட்டும் தனிமையில் எதையோ யோசித்துக் கொண்டிருந்தேன். அச்சமயம் அடர்ந்து பெய்து நிற்கும் மழை சத்தத்தை போல பேச்சு சத்தம் குறைந்து கொண்டே வந்தது, Physics Lecturer உள்ளே வருகிறார்.
அவர் தன்னைப்பற்றி அறிமுகம் செய்து முடித்துவிட்டு, எங்களை ஒருவர் ஒருவராக விசாரித்தார். 4 ஆம் மாணவன் நான். நடுக்கத்திலே எழுந்து "I am Kathiravan, from Paul's Hr sec school and my department is Civil Engineering" கொஞ்சம் அமைதியாக சொன்னேன்.இது அந்த பாழாய்ப்போன ஆசிரியருக்கு காதில் விழவில்லை, மீண்டும் சொல் என்றார். அதை மீண்டும் அப்படியே ஒப்பித்துவிட்டு அமர்ந்தேன். அந்த நேரத்தில் அப்படியே வரும் ஒவ்வொரு ஆசிரியர்கும் அதே வாய்ப்பாட்டை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியதாயிற்று. யாரும் நம் அருகே ஒட்டி வருவதை போல் எனக்கு படவில்லை, நானாகவே சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டேன். இப்படியே முதல் நாள் போனது... அன்று மாலை வீட்டுக்கு கிளம்பலாம் என்று வெளியே வரும்போது என் பள்ளி நண்பனின் அப்பா கார் கொண்டு வந்திருப்பதாக சொன்னான். "ஏய் கதிர் வா இதுலே போயிடலாம் வழியிலே drop பண்ணிறேன்" என்று கூற நானும் சென்றேன், உள்ளே என் section சேர்ந்த மற்றொரு நண்பனும் இருந்தான். என்னை பார்த்து "நீ C section தானே sorry பேரு மறந்துபோச்சு" நானும் கதிர் .. கதிரவன் என்றேன், அவனும் "என் பேரு கரண் நான் Mechanical... ". என்று சொன்ன வேளையில் நான் இறங்குமிடம் வந்ததால் வழியிலே இறங்கினேன். அடுத்து அதிக வார்த்தைகள் பறிமாறக் கொள்ள முடியவில்லை.
என்னோட முதல் Lab, அதுவும் அது Chemistry lab, எல்லோரையும் 2 நபர்களாக, பிரிய சொன்னார்கள். எல்லோரும் அவரவர் நண்பர்களாய் பார்த்து சேர, நான் தனியாக நின்றேன். நான் தனி ஆளாய் நிற்பதை பார்த்து கரண் "என்ன நீ தனியா நிக்கற, உனக்கு யார் batchmate" என்றான், நான் விழித்ததை பார்த்து "நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்யலாமா "என்றான். நானும் தயக்கமில்லாமல் ஒட்டிக் கொண்டேன். அந்த Lab மட்டுமில்லாமல் Physics, Workshop என அனைத்து Lab நாங்கள் இருவரும் இணைந்தே செய்ய வாய்ப்பு கிடைத்தது. எதாவது கதை அடித்துக் கொண்டே எல்லா lab ம் சென்றது, எங்கள் இருவருக்குள் நட்பின் வேர் துளிர்க்க ஆரம்பித்தது. அவன் இருக்கும் காரணத்தால் நான் எந்த கவலையும் இல்லாமல் என் நாட்களை தள்ளி கொண்டிருந்தேன். அவன் ஆங்கிலம் ஆசிரியரையே அளரடிக்கும், அதை ஆவென்று பார்ப்பதே எங்களுக்கு வாடிக்கையாகிவிட்டது,ஆனால் அவன் நண்பர்களிடம் பேசும் விதம் அவ்வளவு அருமையாகவும், நகைச்சுவை உணர்வோடு இருக்கும். வாழ்நாள் முழுவதற்குமான நண்பன் எனக்கு கிடைத்து விட்டான் என்று அப்போதே தெரிந்து விட்டது.
ஒரு நாள் phusyics lab ல் நாங்கள் அரட்டையாக ஏதோ ஒரு experiment பண்ணிக் கொண்டிருக்கும் போது ஒரு பெண் " கதிரவன் உங்ககிட்ட calc இருக்கா" என்றால், யாருடா அது நம்ம பேர ஒரு பொண்ணு voice ல யாரோ கூப்பிடறாங்கனு பார்த்து "calc யா என தலை சொறிந்தேன்" எனக்கு அதற்கான அர்த்தம் புரியவில்லை, கரண் என் தலையிலே போட்டு "அதாண்டா இந்த calculator தான், அவங்க இப்படி சொல்றாங்க, கொடுடா வள்ளல் பிரபுவே" என்று நக்கலாக சொன்னான்."டேய் இங்க calc னு சொல்லுவாளுக, observation இத obsc னு எல்லாத்தையும் சுருக்கி சுருக்கி சொல்லுவாளுக இவளுக, ஆனா அவளுக பேச்ச மட்டும் சுருக்க மாட்டாளுக " என்று அந்த பெண் காதில் சத்தமாக விழும்படியே கூறினான். இதே மாதிரி பல இடத்தில் தலை சொரியவும் அவன் எனக்கு தெளிய வைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. நாட்கள் எல்லாம் வேகமாக கரைய ஆரம்பித்தன. ஒவ்வொரு நாட்களும், வாரமும்,மாதமும் கண்மூடி திறக்கும் வேளையில் முடிந்தது. 2 semester தேர்வும் முடிந்தது, முதலாண்டும் அதன் நாட்களை முடித்துக் கொண்டது.
2 ம் ஆண்டு வேறு இடம் வேறு நண்பர்கள், என்னுடனே இருந்த கரண் வேறு department ல் என யோசித்துக் கொண்டே சாலையில் நடந்து கொண்டிருந்த போது, கரண் வேகமாக ஓடிவந்து "மச்சான் ஒரு சந்தோசமான செய்தி group change list ஒட்டியிருக்காங்க பார்க்கலையா, உன்ன Mechanical department கு மாத்திட்டங்கடா" என்றான், "அடுத்த மூணு வருஷத்துக்கு நாம ரெண்டு பேரும் ஒன்னாத்தான் குப்பை கொட்டனும்" என நகைக்க, மனதில் மகிழ்ச்சி வெள்ளமோட, இருவரும் ஒன்றாக mechanical department போனோம். இங்கே இப்போது புது முகங்கள் புது நண்பர்கள் புது சுற்றம், இருந்தும் பல மாணவர்கள் ஏற்கனவே முதல் ஆண்டில் என்னோடு படித்தவர்களே. எந்த பயமும் இல்லாமல், சற்று அதிகமாகவே பேச ஆரம்பித்து விட்டேன். பொதுவாக Mechanical departmentl அதிகம் பெண்கள் இருக்க மாட்டார்கள், ஆனால் எங்கள் வகுப்பில் 18 பெண்கள், இது எண்ணிக்கையில் சற்று அதிகமே. என் பள்ளியிலே படித்த ஒரு பெண்ணும் இருந்தால்,ஆனால் என்னிடம் அதிகமாக பேசியதில்லை அவள். என் வீட்டருகே அவள் இருந்தாலும் கேட்ட கேள்விக்கு பதில் கூறும் அளவிற்கு இருந்தால் அவ்வளவுதான்.
அப்போது கரண் எனக்கு இன்னொரு நல்ல தோழனை அறிமுகம் செய்தான், கோபு, அவர்கள் இருவரும் ஒரே கல்லூரி பேருந்தில் பயணம் செய்ததில் தொடங்கிய அவர்கள் நட்பு, இருவர் கூட்டணி மூவராக மாறியது. கோபு பார்ப்பதற்கு கொஞ்சம் குண்டு பையன் ஆனால் இவன் பவ்யமாக இருந்தாலும், பரம கில்லாடி பெண்களை ஓட்டுவதிலும் தன் பின்னே ஓட வைப்பதிலும். ஆனால் நம்ம கரண் பெண்களிடம் எப்போது cut n right ஆக இருப்பதாலும், அடிக்கடி அவர்களின் மூக்கை உடைப்பதாலும் இவன் பக்கம் ஒரு பெண் தொடர்ந்து 5 நிமிடம் பேசினாலே அது நாங்கள் பெரிய சாதனையாக கருதினோம். எங்கள் மூவரின் நெருக்கமும் நாளுக்கு நாள் அதிகமானது, எந்த ஒளிவு மறைவில்லாமல் ஒவ்வொருக்கொருவர் நல்ல புரிதலுடன் நட்பு தொடர்ந்தது.
இவர்களின் நட்பு கிடைக்க ஏதோ ஒரு ஜென்மத்தில் புண்ணியம் சத்தியமாக செய்திருக்க வேண்டும் என எண்ணினேன்.
நான் யாரிடமும் அதிகம் பேசாமல் எனக்கென ஒரு சிறு வட்டத்துக்குள்ளேயே என் முதல் வருடம் முழுவதியும் முடித்தேன். ஆனால் அதை தொடர என் மனம் விரும்பவில்லை, அதற்கான நல்ல சந்தர்பத்தை எதிர் பார்த்த சமயத்தில், அப்போது junior மாணவர்களுக்காக நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் என் வகுப்பு தோழர்கள்,seniors என அனைவரும் இருக்கும் கூட்டத்தில் முதன் முதாலாய் பேசினேன். senior கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சற்று நகைச்சுவையாகவும் கிண்டலுமாக பதில் சொன்னேன். அன்று நான் கலகலப்பாகப் பேசியதிலும், நகைச்சுவையாய் சில கவிதைகள் சொன்னதிலும் அனைவருக்கும் பிடித்தது. அந்த மேடையில் நிற்கும்போது நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அமைதியாக ஒரு புன்முறுவலோடு இதழ்களுக்கே வலிக்காமல் ஒருவள் சிரித்துக் கொண்டிருந்தால். லாவண்யா...என் வகுப்பு தோழி.. பேசும்போதே என் கண்கள் ஒரே திசையில் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது அவளை நோக்கி. இங்கு வந்த ஒரு மாதத்தில் மனதில் நின்றவள்.அந்த வரவேற்பு முடிந்த நேரம் அனைவரும் கலைந்து நேரம் லாவண்யா அருகே வந்து. "கதிர் நீ இப்படிலாம் கூட பேசுவியா? நீ சரியான உம்மனாமூஞ்சினுதானு நினச்சேன், உங்கிட்டேயிருந்து நான் இதெல்லாம் எதி பார்க்கவே இல்ல நல்லா பேசன keep it up " கூறிவிட்டு அடுத்த நொடியே மறைந்து ஓடினாள். எனக்கோ ஒன்றும் புரியவில்லை,எனக்கும் மீண்டும் மறு வார்த்தை கூற எதுவும் தோணவில்லை.. பல்லை இளிச்சிகிட்ட்டே ஒரு thanks சொன்னேன்.
அவள் வேறு யாரிடமும் பேசிகூட நான் கண்டதில்லை மனதில் ஓரமாக எங்கேயோ போய் ஏதோ ஒன்று ஒட்டிக் கொண்டது. நாட்களும் வேகமாக கரைந்தன. சற்றே என் நட்பு வட்டம் பெருகியது
செல்வகுமரன்,நந்தகோபால்,கார்த்திகேயன்,தட்சணாமூர்த்தி,ராஜாமணி,லக்ஷ்மிகாந்தன்,உதயா நீண்டு கொண்டே போச்சு. இவர்கள் இருக்கும்
இடத்தில் எங்கள் மூவரை கண்டிப்பாக பார்க்கலாம். அரட்டையுடன் சேர்ந்தே எப்போதும் ஆனந்தமாய் நாட்கள் ஓடின.
இளவரசி, இவள், கோபுவோட batch mate, அதனால் கோபு lab வகுப்புகளை எப்போதும் விரும்பி எதிர் பர்த்துகொண்டிருப்பான். அப்போதானே இருவரும் ஒன்றாக சேர்ந்து இருக்க முடியும். சில நேரங்களில் நாங்கள் எங்கே என்று தேட ஆரம்பித்தால் பையன் இளவரசியிடம் நாட்டு நடப்புகளை பேசி கொண்டிருப்பான் என்று நாங்களே புரிந்து கொள்வோம். எப்போதும் போல நாங்கள் 2 பேரும் lab ல் நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான், அவனாவது வாழட்டும்டா,என்று ஆசிர்வதித்து எங்கள் வேலையை பார்ப்போம்.
இரண்டாம் ஆண்டும் வேகமாக ஓடியது, ஓய்வில்லாமல். அவ்வப்போது எப்படியாவது நம்மிடம் முதலில் தானாக வந்து பேசிய லாவண்யாவிடம் ஒரு வார்த்தை பேச வேண்டுமென மனம் அலறிக் கொண்டே இருந்தது.அவளின் நட்பை நாட என் மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அவளை பற்றி என் பள்ளி தோழியிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். அவள் கேரளாவை சேர்ந்தவள் என்று மட்டும்தான் எனக்கு அவளிடமிருந்து தெரிந்தது. எனக்கோ ஒரே குழப்பம் "நம்மகிட்ட அன்னிக்கு நல்லா தமிழ் பேசனாலே, அப்பறம் எப்படி" என்று மண்டையை எனக்குள்ளே பிய்த்துக் கொண்டேன்.
இதை என் நண்பர்களிடம் கேட்டால் என்னை ஒட்டியே தள்ளி விடுவார்கள். இப்போது இருக்கும் வரிசையின் படி நான்,கரண்,லாவண்யா... என தொடர்ந்தது.. நம்ம கோபுவோட வழிய follow பண்ணலாம்னு பார்த்தா Lab ல் நான்கு நான்கு பேராக பிரித்தால் அவள் வேறொரு batch போக வேண்டியதாயிற்று. ஒரு வார்த்தை பேச வாய்ப்பே இல்லாமல் போனது.. அப்படி ஒரு அமைதியையும் அடக்கத்தையும் தன்னுள்ளே வைத்திருந்தாள்.ஆனால் எங்கு பார்த்தாலும் அவள் உண்டு அவள் வேலை உண்டு இருப்பாள். யாரிடமும் வீண் பேச்சு பேசாமல் கல்லூரி முடிந்த பின் அடுத்த நொடியே ஹாஸ்டலுக்கு பறந்து செல்வாள். மீண்டும் செமஸ்டர் தேர்வு அது இது என்று மனம் ஒரிடமில்லாமல் சிதறியதால், அதற்குப் பிறகு எனக்கும் அவளைப் பற்றி துருவ மனம் போகவில்லை.
யோசிக்கவும் நேரமில்லை, என் பாதையில் நடக்க ஆரம்பித்தேன்.
இரண்டாம் வருடமும் தன் கணக்கை முடித்துக் கொண்டது. மூன்றாம் வருடம் ஆரம்பம். ஆரம்பமே நான் எதிர் பார்க்காதது எல்லாம் நடந்தது.
(தொடரும்)...
என்றும் அன்புடன்
கருணா