Monday, December 10, 2007

சுவடுகள்-III

மூன்றாமாண்டு பிள்ளையார் சுழி போட்டுவிட்டு கணக்கை தொடங்கினோம்.

இந்த ஆண்டு கொஞ்சம் முன்னேறி நானும் கரனும் 2 ம் பெஞ்சில் இடம் பெயர்ந்தோம், அதே இரண்டாம் பெஞ்சில் கோபு, ஆனால் அடுத்த வரிசையில் பத்மஸ்ரீ ராஜாமணியோடு. ஆம் எப்போதும் அவன் தன்னை இப்படித்தான் கூறிக் கொள்வான் ராஜாமணி.இவன் தன்னை பற்றி கூறும் அனைத்தையும் தாங்கிக்கொண்டு இவனுடன் இருக்கும்போது நேரம் போவதே தெரியாது. முதல் நாள் ஒன்றும் பெரிதாக வகுப்புகள் நடக்காததால் ஒரு மேட்ச் முடித்துவிட்டு கேன்டீன் அரட்டையுடன் ஒட்டினோம். ஒரு சில நாட்கள் ஓடியது.

எனக்கும் கரனுக்கும் இருக்கும் Lab சொந்தம் தொடர்ந்தது. 5 வது செமஸ்டர் எங்களுக்கு CAD lab உண்டு, ஆனால் இங்கு இரண்டு பேர்தான் ஒரு batch க்கு. அங்கேயும் நாங்கள் இருவர்தான் என எண்ணிக்கொண்டு lab க்கு நுழைந்தோம். அந்த Lecturer உள்ளே நுழைந்ததும் ஒரு அறிமுகம் செய்துவிட்டு "யாருக்கெல்லாம் இங்க CAD ஏற்கனவே தெரியும்" என கேட்டார். இரண்டாமாண்டு விடுமுறையை சும்மா கழிக்க வேண்டாம் என்று நாங்கள் மூவர் கூட்டத்தோடு CAD class போனோம், அதில் எதோ எங்களுக்கும் கொஞ்சம் தெரியும் என்று கூற எங்களைப் போலவே ஒரு பாதி கூட்டம் கை உயர்த்தியது. உடனே அவர் "சரிப்பா CAD தெரிஞ்சவங்கலாம் தெரியாதவங்ககூட batch சேருங்க so நீங்க அவங்களுக்கு சொல்லி கொடுத்த மாதிரி இருக்கும், சீக்கிரம் excercise முடிச்சிடலாம்" என்று சொன்ன அடுத்த நொடியே லாவண்யா என்னிடம் வந்து "கதிர் நாம ரெண்டு பெரும் ஒன்னா செய்யலாமா, உனக்குத்தான் தெயரியும்ல",என்றால். அவளிடம் பேச நினைத்துக் கொண்டிடுந்த கனவுகள் மீண்டும் உயிர்த்தெழுந்தது. நான் உடனே சரி என்று சொல்லாமல், ஓரக்கண்ணில் கரனையும்,கோபுவையும் பார்த்தேன். அவர்களிடம் போய் "என்ன மச்சான் யார்கூட பண்ண போறோம்" என்றேன். "இல்லடா நான் லக்ஷ்மணன் கூட பண்ணலாம்னு இருக்கேன், கோபு வந்து கிரி கூட பண்ண போறானாம், நீ வேணும்னா நம்ம கார்த்திகூட செய்யேன்" என்றான். "இல்லடா லாவண்யா என்கூட join பண்ண என்கிட்டே கேட்டா, நான் ஒண்ணும் சொல்லல, அதான் உங்ககிட்ட..." என இழுத்தேன். "அப்பறம் என்னடா போய் jolly பண்ணுடா, Lab மட்டும் பண்ணுடா, நீயும் கோபு மாதிரி ஆகிடப்போற, அப்பறம் நான் மட்டும் தனியா மரத்துக்கிட்டதான் பேசிகிட்டு இருக்கணும்" என சொன்னான்.

என் பதிலுக்கு காத்திருந்த அவளிடம் "சரி லாவண்யா நாம 2 பெரும் சேர்ந்து பண்ணலாம்" என்று கூறி காரனுக்கு அடுத்த கணினியில் நான் அமர்ந்தேன், எனக்கு வலமாக அவள். பேச வாய்ப்பு கிடைத்தும், வெறும் பாடத்தைப் பற்றி மட்டும் பேசிவிட்டு, அவளை செய்ய சொல்லிவிட்டு, நண்பர்களுடன் அரட்டையை தொடர்ந்தேன். 3 வார lab இப்படியே போனது. அடுத்த வாரம் அதே lab ல் லாவண்யா எதோ செய்து கொண்டிருக்க , நானும் கரனும் ஏதோ அலசிக் கொண்டிருந்தோம். HOD யிடமிருந்து அவனுக்கு அழைப்பு வர அவன் அவசரமாக கிளம்பினான். அன்று கோபுவும் வரவில்லை. நான் தனியாக அவள் என்னோடு, அவளிடம் பேசலாம் என்று தோணும் ஆனால் வார்த்தைகள் கிடைக்காது. அவளிடம் ஏதோ கூறிவிட்டு அப்படியே monitorஐ பார்த்துக் கொண்டிருந்தேன். "கதிர் என்ன அப்படி பாக்கற, பார்த்து monitor off ஆகிட போகுது" என நகைத்தாள். "கதிர், ஞாபகம் இருக்க போன வருஷம் 2nd year Intro அப்போ, நான் உன்கிட்ட ஏதோ சொன்னேன், நான் என்ன சொன்னேன்னு எனக்கே மறந்து போச்சு, அதுக்கப்பறமும் ஏன் என்கிட்டே பேசவே இல்ல, நான் எதாவது உன்கிட்ட பேசலாம்னு நினைப்பேன் ஆனா நீ எதாவது தப்பா எடுத்துக்க போறேன்னு கம்முனு இருந்துட்டேன்." என சொல்லி ஒரு படி மேலே போனால் என் மனதில். "சரி இப்போவாது எதாவது பேசு, சரியா... நீ என்ன ஒரே பையனா வீட்ல.." என்றவளுக்கு "இல்ல இல்ல.. நீ" என்று வழிந்தேன் வேறு என்ன கேட்பதன்று தெரியாமல் அவளைப் பற்றி கேட்டேன். "எனக்கு ஒரு அழகான செல்ல தம்பி இருக்கான், 8th படிக்கிறான்". உடனே நான் குறுக்கிட்டு "நீ கேரளானு எல்லோரும் சொன்னாங்க அப்பறம் எப்படி தமிழ் இவ்ளோ நல்லா பேசற" என்றேன். "நான் பொறந்தது வளர்ந்ததெல்லாம் இங்கதான் திருச்சில, அப்பாவுக்கு transfer ஆனதால நான் 5th படிக்கறப்போ அங்க போய் settle ஆகிட்டோம். 11th 12th Madrasla படிச்சேன், தாத்தா வீட்ல தங்கி, இப்போ மீண்டும் hostel இன்னொரு 4 வருஷம், உனக்கெல்லாம் jolly அப்பா அம்மானு எல்லோர் கூடவே எப்போதும்" அப்படியே அந்த lab முழுவதும் நிறைய விஷயங்கள் பகிர்ந்ததில் முடிந்தது.
அந்த நேரத்தில் உள்ளே வந்த கரன் என்னை பிரமிப்பாய் பார்த்து அவனிடத்தில் அமர்ந்தான். அந்த Lab முடிய "Bye கதிர், நாளைக்கு பார்க்கலாம் take care"என சொல்லிவிட்டு கிளம்ப, நானும் ஏதோ சிறியதாய் கை அசைத்தேன். "என்ன போகறப்ப மறக்காம bye லாம் சொல்லிட்டு போறாங்க, ஏன்டா ஒரு 2 மணி நேரம்தானே உன்கூட இல்ல அதுக்குள்ளே என்னடா இப்படி மாறிட்ட அதுவும் என்கூட இருந்துகிட்டு" என்று விளையாட்டாய் கேட்டான். நானும் அவள் கூறியதெல்லாம் கூறினேன். அவன் "இவள் இவ்ளோ நாள் அவ ஒரு ஒமனுக்குட்டினு தானே நினச்சேன், நம்ம தமிழ் தானா, சரிடா நீ நல்லா இருந்தா அது போதும்டா எங்களுக்கு" என கூறிக்கொண்டே நாங்கள் இருவரும் பேருந்தை நோக்கி போனோம். அன்று இரவு தூக்கத்தில் அவள் நம்மிடம் பேசியதெல்லாம் ஓடிக் கொண்டே இருந்தது, அதுவும் ஒரு பெண் நம்மை பற்றி விசாரிப்பதும் நெருக்கமாய் பேசுவதும் ஒரு புது அனுபவமாய் இருந்தது. அவளிடம் மீண்டும் மீண்டும் பேச வேண்டுமென மனம் துளிர்த்துக் கொண்டே இருந்தது. அதற்குப் பிறகு ஒவ்வொரு புதன் கிழமைக்காக காத்துக் கொண்டிருந்தேன் அந்த lab வருகைக்காக. ஒவ்வொரு lab லும் எங்கள் உரையாடல் நீண்டு கொண்டே இருந்தது. அன்று lab ல் ஏதோ பேசிக் கொண்டிருக்கையில் அவள் பிறந்த நாளைப் பற்றி விசாரித்தேன். அவள் " அது ஜூலை 18 போன வாரம்தான் போச்சு" எனக் கூற எனக்கு தெரிந்திருந்தால் எதாவது present பண்ணிருக்கலாமே என நினைக்கையில், Lecturer "ஏம்பா semester exam இன்னும் 3 மாசம்தான் இருக்கு நிறைய excercise incomplete இருக்கு so இந்த saturday special lab இருக்கு" னு சொல்லிவிட்டு கிளம்பினார். எனக்கோ உள்ளுக்குள்ளே ஏதோ ஒரு மூலையில் சந்தோசம் துள்ளி குதித்தது.

சரி அவளுக்கு present எதாவது கொடுத்தால் தப்பாக எடுத்துக் கொள்ள போகிறாள் என்று எதாவது sweet வாங்கலாம் என்று கடைக்கு போய் பார்த்தேன், அங்கே இருப்பதிலே பெரிய Card+Cadburys dairy milk வாங்கினேன். அதை bag ல் பத்திரமாக ஒழித்துக் கொண்டு கல்லூரிக்கு கிளம்பினேன்.வழியில் கரனும் கோபுவும் "என்னடா மூட்டை இவ்ளோ பெருசா இருக்கு, இன்னிக்கு lab மட்டும்தானே" என்றனர். "இல்லடா சும்மா Lunch எடுத்து வந்தேன்" என தப்பித்தேன். அன்று lab ல் கொஞ்சம் பாடத்தில் மூழ்கியதால் அதை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தேன், மனதிலோ அதை எப்படி அவளிடம் கொடுப்பது என்று உள்ளுக்குள்ளே யோசித்துக் கொண்டிருந்தேன். சட்டென்று lab முடிந்தவுடன் ஏதோ அவசரமாக வேலை இருக்கிறது என்று கிளம்பி அவள் hostel நோக்கி நடக்க ஆரம்பித்தாள். "இதோ இருங்கடா ஒரு நிமிஷத்துல வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு Bag உடன் அவள் பாதையை நோக்கி நடந்தேன்.

யாருமில்லா அந்த அமைதியான சாலையில் அவள் சென்று கொண்டிருக்க, பின்னால் சென்று மெல்ல லாவண்யா என்றேன். "என்ன கதிர் கிளம்பலையா" என்றாள். "என்ன இன்னிக்கு எதாவது வேலையா நீ மாட்டும் உடனே கிளம்பிட்ட" என்றேன். அவள் "இல்ல நீ உன் friends கூட ரொம்ப deep discuss பண்ணிட்டு இருக்கறப்போ disturb பண்ண வேணாம்னு உடனே கிளம்பிட்டேன்". "ஒ அப்படியா சரி நான் ஒரு gift கொடுத்தா தப்பா எடுத்துக்க மாட்டனு நினைக்கிறேன், உன்னோட birthday க்கு, அப்போ எனக்கு தெரியாது so" என சொல்லிக் கொண்டே Card+dairy milk எடுத்துக் கொடுத்தேன். அவள் எந்த தயக்கமுமில்லாமல் வாங்கிக் கொண்டு "ரொம்ப thanks கதிர்" என்று கூறி சிறிது நேரத்திற்குப் பிறகு hostel சென்றாள். அவள் செல்வதை கடைசி வரை பார்த்துவிட்டு திரும்புகையில், கரனும் கோபுவும் "என்னடா தனியா இங்க ஈ ஓட்டிகிட்டு இருக்க, அதுவும் அந்த குட்டி போகற வேலையில". "இல்லடா அந்த பொண்ணுக்கு போன வாரம் birthday வாம் அதான் ஒரு card கொஞ்சம் sweets வாங்கனேன் அத கொடுத்தேன்" என்று சொல்லி முடிப்பதற்குள் "டேய் நான் அப்பவே சொல்லல அத பார்த்த lunch bag மாதிரி தெரியல எதோ விஷயம் இருக்குன்னு நினச்சோம் சரி உன் கதை சேது மாதிரி ஆகாத இருந்த சரி தான்" என கூறினர். "இல்லடா அவன் என் friend அதான்" என இழுக்க. "டேய் நாங்களும் தான் வருஷம் வருஷம் birthday கொண்டாடறோம் ஒரு 25 காசு choclate கொடுத்திருப்பியா ஆனா அங்க Cadbury's அதுவும் extra large size ல, கோபு எனக்கென்னவோ பையன் நம்மள கூடிய சீக்கிரம் கழட்டி விட்டுடுவானு நினைக்கிறேன் நீ என்ன சொல்ற" என்றான் கரன்.

வகுப்பு வாசலில் நுழையும்போதே எனைப் பார்த்து ஒரு புன்னகையோடு போய் அமர்வாள். வகுப்புக்கு இடை இடையில் observation இடம் மாறுவதும் அவள் சந்தேகத்தை தீர்ப்பதும் என கொஞ்சம் நீண்டது இந்த பந்தம். இதற்கு பிறகு நாங்கள் பேசும் நேரமும் தன்னை நீட்டித்துக் கொண்டது. எதாவது ஒரு சிறிய சொல்லில் தொடங்கி ஒரு 100 பக்கம் தொடர்வதுபோல் உரையாடல் நீண்டது. "ஏன்டா அப்படி என்னடா பேசுவ அதுவும் வெட்டியா அந்த பொண்ணுகிட்ட" என கோபு கேட்டான். " டேய் நீ என்ன பண்ற அந்த இளவரசிக் கூட அதேதான் இவன் கொஞ்சம் விளக்கமா பேசி இருப்பான், உங்க ரெண்டு பேருகிட்டேயும் மாட்டிகிட்டு நான் நடுவுல தனியாதான் பேசனம்னு நினைக்கிறேன்" எனக் கரன் கூற அவன் பேச்சை மாற்றினான். 5 வது semester முடியும் நேரம் நாங்கள் Record, Mid semester, என கொஞ்சம் வேகமாய் பறந்தோம். தேர்வு அட்டவணையும் தயார் ஆக சற்று அதிலும் மூழ்கி இருந்தோம். அன்று கடைசித்தேர்வு நல்லபடியாக முடிந்தது அவள் என்னருகே வந்து "கதிர் நான் இன்னிக்கு ஊருக்கு கிளம்பறேன் semester leave முடிஞ்சுதான் வருவேன் ok வா, எங்க அப்பா அம்மா கூட ஜாலியா இருக்க போறேன்" என்று சொல்லிவிட்டு வேகமாய் பறந்தாள். அன்று கடைசி exam என்பதால் அனைவரும் ஒரு படத்தை முடித்துவிட்டு மாலை beach ல் பொழுதை கழித்தோம். எனக்கு எதோ ஒன்று நம்முடன் இல்லாதது போல் இருந்தது. "என்னடா அமைதியா இருக்க எதாவது தொன தொனனு பேசிட்டே இருப்பியே இப்போ என்ன கடல அமைதியா பார்த்திட்டு இருக்க" என கோபு கேட்டான்."அதெல்லாம் ஒண்ணுமில்லடா இன்னிக்கு கொஞ்சம் exam சரியா பண்ணல அதான்" என சொல்லி சமாளித்தேன். எனக்கு எப்படி இந்த ஒரு மாத காலத்தை கழிப்பது என்று தெரியாமல் இருந்தது. அந்த விடுமுறையில் எனக்கு என்னவோ மனதில் தோன்ற அன்று வலுக் கட்டாயமாக நான் இருவரையும் கல்லூரிக்கு அழைத்து சென்றேன். அங்கே நாங்கள் பேசிக் கொண்டிருந்த இடத்தை மட்டும் தனியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். அங்கே போய் எதாவது கனவு காண்பேன் எதையோ நினைத்துக்கொண்டு, பின்பு இதுவே வாடிக்கையாகிவிட்டது.

நாட்கள் மெதுவாய் நகர 6 வது semester முதல் நாளை எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன்.

(தொடரும்)....


என்றும் அன்புடன்
கருணா

1 comment:

Anonymous said...

thankalin suvdugal ennai mei silirka vaithu en naavi narambugal annaithaium pullarikka vaithu enathu uanrvukalai sundi ezluthu athan vilaival yerpatta oru mayakkathil irunthu ennaal kana poluthum kooda vilaga mudiyaamal thathalikka vaithu oru maaya ulagathil ennai thalli ippadiyum kooda suvadugalin thaakkam ennai thaakuma endra vinaavirkku theervaaga irunthu enathu sevipparayail innamum kooda murasu kotti aanantha thaandavamaadi kondu adutha suvadugalin pathipirkkaka engum oru vitha aaval konda oru aathamaavaga ennai alayavittu innum oor padaipu ippadi irukkuma allathu adutha padaipu ithaium minjuma endra aiyyathai en sindhayil eluppi athan vilaival prammai konda vaasaganaaga naloru menium poluthoru vannamumaaga ennai maatri ippiraviyil innomore vaaippu enakku kittuma kittatha endra santhegam orupuram irunthaalum ezhu pirappin payanai adaintha oru thirupthiyai yerpaduthiya thangalin suvudugalukku nandri koora manam vanthaalum adutha pathipuvarai othipoda enathu sinthai solkira kaaranathinal ennal thangalin pathippirkku uriya pathilai sarivara solla yeyalavillai enraalum enakkul.... thodarum(to be continued..)

Gnana Nicholas I
http://nekoulauz.wordpress.com/