Saturday, March 08, 2008

முத்தச்சாரல்....

ஒரு கோடி முத்தங்களை
ஓர் இரவில் கொடுக்க ஆசைதான்
என்ன செய்ய இருப்பது இதழ் இரண்டுதானே.....

நீ கோபப்படுவதெல்லாம்
என் முத்தப்பரிசை பெறத்தான் என
உன் பொய்க் கோபம் என்னிடம் உண்மை சொன்னது...

கட்டியணைத்து கொடுக்கும் முத்தத்தை விட
கட்டளையிட்டு நீ வாங்கும் முத்தம்
உன் மொத்தத்தையும் சொல்கிறது......

இடைவெளியில்லாமல்
இதழ் வலியில்லாமல்

இரு ஜோடி இதழ்களால்
ஒரு கோடி கவிதைகள் வரைவோம் வா...

நீயும் நானும் சேர்ந்து கொடுக்கும் முத்தத்தை
என்னவென்று சொல்வது
கொடுக்கும் முத்தமா?
வாங்கும் முத்தமா?
இல்லை நிசப்த யுத்தமா.....

உன் ஒவ்வொரு முத்தத்தால் ஒரு ஆயுள் அதிகமாகுமென
இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவன் நான்.
இப்போது என் ஆயுள் உன் இதழில்....

இதழ் ரசம் இவள் வசம்
அது என் மீது வழிந்தால் ஆவேன் பரவசம்....

உனக்கும் எனக்கும் அப்படி என்ன பெரிய சண்டை
இப்படி முட்டி மோதிக் கொள்கின்றன நம் உதடுகள்
இதற்குப் பேர்தான் முத்தப்போரோ?

அன்புடன்
கருணா

3 comments:

Unknown said...

இதழ்களின் " சந்திப்பை" பற்றி நன்றாக " சிந்தித்த" வார்த்தைகள்.
"இச்சி" (முத்தம்) பற்றி ரொம்ப யோசி"இச்சி".....ரசி"இச்சி" எழுதி irukeeenga!!!
முத்தத்த பத்தி இவள்ளவு யோசிக்க முடியும்னு இப்பதான் தெரியுது. கவிதை எழுதறவங்க திறமை இதுதானோ!!
(கிருபா சொன்ன மாதிரி நீர் ஒரு ரொமாண்டிக் ஹீரோ தான் )

வாழ்த்துக்கள்
அன்புடன்
சங்கர்

Hariks said...

Machi konnutta!

Prawintulsi said...

//கட்டியணைத்து கொடுக்கும் முத்தத்தை விட
கட்டளையிட்டு நீ வாங்கும் முத்தம்
உன் மொத்தத்தையும் சொல்கிறது......//

Ulagath tharam Karunaa.. No words..

//இடைவெளியில்லாமல்
இதழ் வலியில்லாமல்
இரு ஜோடி இதழ்களால்
ஒரு கோடி கவிதைகள் வரைவோம் வா...//

VAALI THOTHAARU !!!!!

//நீயும் நானும் சேர்ந்து கொடுக்கும் முத்தத்தை
என்னவென்று சொல்வது
கொடுக்கும் முத்தமா?
வாங்கும் முத்தமா?
இல்லை நிசப்த யுத்தமா.....//

SORRYnga .. VAIRAMUTHU vum thothutaarru...