Thursday, March 08, 2007

இன்று தோண்டி எடுக்கப்பட்டவை...



கவிதையை ரசித்த
என்னுள் இருந்த கவிஞன்
இன்று எழுத தொடங்குகிறான்
சில படைப்புகள் நான் (சொந்தமாய்) கிறுக்கியவை......


"நானும் இன்று முதல் கவிஞன் ஆகிறேன்
உன் காதல் அரங்கேற்றத்தால்..."


"உன்னை எண்ணியே
என் காதல் கவிதையாகிறது....."


"என் இதய அறையில் முழு உலகம்
அது நீ....."


"பிரிவு என்பதன் பொருள்
உன்னை பிரிந்த பின்புதான் தெரிந்தது....."


"பிறவிபயன் அடைந்தேன்
ஆம் உன் காதல் பயன் அடைந்ததால்...."


"கனவுக்கும் கவிதைக்கும் இடையில் ஒரு வானவில்
என் வாழ்க்கையின் ஒரு வார்த்தை சொல்...."


"என் தோட்டத்தில் பூக்களை காணவில்லை...
யாவும் உன் வீட்டு வாசலில் வாசமிட்டிருக்கின்றன.....
உன் புன்னகையில் கண் விழிக்க....."


"கவிதையை மட்டும்தான் காதலிக்க நினைத்தேன்
ஆனால் காதலியே ஒரு கவிதையாக என்னிடம்....."


"யார் சொன்னது கனவுகள் பலிக்காதென்று....
இதோ என் காதல்(லி) ஒரு சாட்சி....."


"என் கவிதைகளுக்கு சொற்கள் வேண்டாம்
சொப்பனம் போதும்....."


"அழுதுகொண்டிருப்பேன் என்கிறாய் நான் வந்து அணைக்கும் வரை...
உன்னை அணைப்பதா !!!
அள்ளி கொஞ்சுவதா !!!"


"உனக்கும் எனக்கும் நடக்கும் சண்டையில் நீ வென்றுவிடுகிறாய்
உன் அரை நொடி முத்தத்தால்....."


"காதலி முத்தம்,
அடுத்த தழுவல்,
கண்ணில் தூண்டில்,
சேர்ந்தே உதடுகள்,
செலவாகும் முத்தங்கள்,
காலையில் அவள் முகம்,
கவிதையில் அவள் பெயர்......
யோசிக்கும் வேளையில்
கலைந்தது கனவு"



இவையாவும் இன்று தோண்டி எடுக்கப்பட்டவை...
இன்னும் தொடரும்
உங்கள் கருத்துக்களை வரவேற்கின்றேன்


அன்புடன்
கருணா

2 comments:

அங்கமுத்து கிரிபிரசாத் said...

unnnudaiya munnaadi kavithayila repeat aana maathiriye irukku... ethaavathu new word try pannupa...
mathapadi... super...

அங்கமுத்து கிரிபிரசாத் said...

"யார் சொன்னது கனவுகள் பலிக்காதென்று....
இதோ என் காதல்(லி) ஒரு சாட்சி....."


"அழுதுகொண்டிருப்பேன் என்கிறாய் நான் வந்து அணைக்கும் வரை...
உன்னை அணைப்பதா !!!
அள்ளி கொஞ்சுவதா !!!"

mmm.. pudusa irukku...